Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
யானைகள் எலியை பார்த்து உண்மையிலேயே பயப்படுகிறது? ஆய்வுகள் சொல்லும் உண்மை என்ன தெரியுமா?
90'ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே கார்ட்டூன்களின் அருமை நன்கு தெரியும். நாம் பார்த்து வளர்ந்த பெரும்பாலலான கார்ட்டூன்கள் மிருகங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும். பூனையைப் பார்த்து எலி பயப்படும் கார்ட்டூனை நாம் மிகவும் ரசித்திருப்போம். அதேபோல எலியைப் பார்த்து யானை பயப்படுவது போன்ற சில கார்ட்டூன்களும், திரைப்படங்களும் உள்ளன.
இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் கார்ட்டூனாக பார்க்கும் போது அதில் நாம் எந்த லாஜிக்கையும் பார்த்திருக்க மாட்டோம். வெறும் வேடிக்கையாக பார்த்து மகிழ்ந்திருப்போம். ஆனால் உண்மையில் எலியைப் பார்த்து யானை பயப்படுமா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் எலியைப் பார்த்து யானை பயப்படுமா?
பைபிள் கதைகள், கிரேக்கக் கட்டுக்கதைகள் முதல் குழந்தைகள் திரைப்படங்கள் வரை, இந்தக் கருத்து வரலாறு முழுவதும் நிறைந்திருக்கிறது. யானையின் தும்பிக்கையில் எலிகள் ஏறலாம் அல்லது கால்களுக்கு அடியில் மாட்டிக்கொள்ளலாம், இதனால் யானை பயப்படலாம் அல்லது திடுக்கிடலாம் என்பது கோட்பாடு. இருப்பினும், இது உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை.
தற்போது பூமியில் உள்ள மிகப் பெரிய பாலூட்டியாக இருக்கும் யானை உருவத்தில் மிகச்சிறியதாக இருக்கும் பார்த்து பயப்படும் ஒரே விஷயம், எலியின் வேகமாக நகரும் திறன் மட்டும்தான். அனைத்து பாலூட்டிகளும் (மனிதர்கள் உட்பட) மிக விரைவாக நகரும் சிறிய ஒன்றைக் கண்டு திடுக்கிடுவதாக அறியப்படுகிறது. இருப்பினும், காடுகளில் இந்த நிகழ்வு யானைகளுக்கு மிகவும் சாதாரணமாக இருக்கலாம், ஏனெனில் அவை மற்ற சிறிய உயிரினங்களை எதிர்கொள்கின்றன.
எனவே அங்கே அவை பயப்படுவது குறைவாக இருக்கலாம். கண்பார்வை என்பது யானையின் வலிமையான உடற்கூறியல் அம்சம் அல்ல என்பதால், அவற்றின் கால்களுக்கு அருகில் அல்லது தரையில் ஒரு சிறிய பொருள் தட்டுப்படும் போது அது சில நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும். இருப்பினும், அந்த அமைதியின்மை உண்மையில் பயமாக கருதப்படுவதில்லை.
பயத்திற்கு பின்னால் உள்ள காரணம்?
இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறிய வெள்ளை எலியை சாணக் குவியலுக்கு அடியில் மறைத்து யானைகள் வரும் வரை காத்திருந்தனர். யானைகள் அருகில் வந்தபோது, எலியை விடுவிப்பதற்காக கம்பியை இழுத்து யானைகள் கவனித்ததா எனப் பார்த்தனர். யானைகள் எலியைப் பார்த்து பயப்படவில்லை, கூச்சலிடவில்லை. ஆனால் அவை எலியைப் பார்த்து ஒரு நொடி, திடுக்கிட்டு எலியை விட்டு ஒரு அடி தள்ளி எடுத்து வைத்தன.
யானைகளின் இந்த எதிர்வினையைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். இருப்பினும், இது 'பயம்' என்பதற்கு உறுதியான ஆதாரமா?
இதேபோல மற்றொரு சோதனையில் சர்க்கஸ் யானைகளிடம் வெள்ளை எலிகள் காண்பிக்கப்பட்டன. ஆச்சரியமளிக்கும் விதமாக எந்த யானையும் எலியை கண்டுகொள்ளவே இல்லை.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரின் கருத்துப்படி, "காடுகளில், திடீரென ஓடும் அல்லது அசையும் எதுவும் அவற்றை பயமுறுத்தலாம்." அது ஒரு எலி என்று மட்டுமல்ல, திடீரென்று அசையும் எந்த மிருகமும் ஒரு நொடி யானையைத் தடுமாறச் செய்யலாம் என்று அவர் விளக்குகிறார். இங்கே அளவு முக்கியமில்லை, அதன் வேகமும், சுறுசுறுப்பும்தான்.
இதுதவிர, யானைகளுக்கு வாசனை உணர்வு அதிகமாக உள்ளது, ஆனால் பார்வை குறைவாக உள்ளது, எனவே யானைகள் அசையும் விலங்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா என்பதை அறியும் வரை அதிர்ச்சியில் இருக்கலாம்.



Click it and Unblock the Notifications
