Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
உங்க ஜாதகத்தில் புதன் தோஷம் இருக்கா? அப்போ இந்த பரிகாரத்தை ட்ரை பண்ணுங்கள்..!
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம், 'வித்யாகாரகன்' எனப்படும் புதன் கிரகம்தான் ஒருவர் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் கண்டிப்பாகப் புதன் வலுப்பெற்று இருக்க வேண்டும்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தைக் கணிக்க வரும் பெற்றோர், முதலில் கேட்கும் கேள்வி என் குழந்தை என்ன படிப்பு படிப்பான் என்பதுதான். அந்தப் படிப்புக்குக் காரணமானவர் புதன். அறிவால் உலகத்தை ஆட்டுவிப்பவர் என்பதால், எல்லாவற்றிலும் நிபுணத்துவம் உள்ளவர் எனும் அர்த்தத்தில் இவரை 'நிபுணன்' என்று ஜோதிட சாஸ்திரம் புகழ்கிறது.

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் அதிபதியாக புதனுக்கு தனி இடம் உண்டு. புதன், நுண்ணறிவு மற்றும் தகவல் தொடர்புக்கு பொறுப்பான கிரகம் என்று கூறப்படுகிறது. ஜாதகத்தில் புதன் வலுவாக உள்ளவர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள்.
புதன் தரும் தோஷங்கள்
புதன் வவலிமையிழந்தால் கல்வி முன்னேற்றத்தில் சிறப்பான நிலை இருக்காது.
ஜாதகத்தில் புதன் மறைந்தால் நரம்பு தொடர்பான வியாதிகள் மற்றும் புத்திர விருத்தியில் குறைபாடு உண்டாகும். மேலும் தாய்மாமன் உறவில் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஜாதகத்தில் புதன் வலுப்பெற இதை செய்யுங்கள்
ஜாதகத்தில் புதன் தோஷம் இருந்தால், புதன் பலவீனமாக இருந்தால், புதனை பலப்படுத்த சில பரிகாரங்கள் உள்ளன. இப்போது அந்த பரிகாரம் பற்றி தெரிந்து கொள்வோம். ஜாதகத்தில் புத தோஷம் இருந்தால் புத தோஷம் வராமல் இருக்க புதன்கிழமை விரதம் இருப்பது நல்லது. புதன்கிழமை அன்று பச்சை வாழை இலையை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். பேரீச்சம்பழம், அரிசி, நெல்லிக்காய், தேன் ஆகியவற்றை நீரில் கலந்து குளிக்கவும். இப்படி செய்தால் புதன் மகிழ்ச்சியடைந்து நல்ல பலன்கள் கிடைக்கும்.
புதன் கிழமையில் இந்த வேலையை செய்யுங்கள்
புதன் அன்று விஷ்ணு மூர்த்தி கோவில்களுக்கு சென்று விஷ்ணு பூஜை செய்தால் ஜாதகத்தில் புதன் வலுப்பெறும். வலுவிழந்த புதனை வலுப்படுத்த, பயறு, வாழைப்பழம் ஆகியவற்றை பசுவிற்கு உணவளிக்க வேண்டும். வீட்டில் அகன்ற இலைகள் கொண்ட மரங்களை நடவும். எதிர்மறையான விளைவுகளிலிருந்து பாதுகாக்க முதலில் ஒருவர் மரகதத்தை அணிய வேண்டும்.
புதன் கிழமையில் தானம் செய்ய வேண்டியவை
பச்சை நிறப் பொருட்களை ஏழை பிராமணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். புதன்கிழமை அன்று பச்சை நிறத்தை அணிய வேண்டும். குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்..புத மந்திரத்தை ஜபித்து, புதன் கிழமையில் நல்ல மரகதத்தை (மரகதம்) அணிந்தால், புத்திர தோஷங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.
பூஜைகள்
விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தை 5 முறை பாராயணம் செய்ய வேண்டும். புதன்கிழமை அன்று புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம் அல்லது நாராயண சூக்தம் சொல்ல வேண்டும். 17 புதன்கிழமைகளில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு துளசி மாலை அணிவிக்க வேண்டும். புத கிரஹ தோஷத்தைத் தடுக்க, பசுமையான வயலில், இலைச் சூழலில் சிறிது நேரம் செலவிடுவது நல்லது. இதனால் புத கிரக தோஷம் நீங்கும்.
புதனுக்கான பரிகாரங்கள்
திருவெண்காடு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை முறையாக வழிபட்டு வந்தால் தோஷம் குறையும். பெருமாள் கோவிலுக்கு புதன் கிழமை தோறும் சென்று வர புதனால் ஏற்பட்ட தோஷத்தின் வீரியம் குறையும்.
மதுரையில் உள்ள சொக்கநாதரை புதன்கிழமை அன்று வணங்கி வர
தோஷம் நீங்கும்.
புதனின் காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மதே
சுக அஸ்தாய தீமஹி
தன்தனா புத பிரசோதயாத்
என்ற புதன் பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்லி அவரை வணங்கி வர வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நடக்கும்.



Click it and Unblock the Notifications