Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
இன்று அனுமன் ஜெயந்தி 2024.. இந்த மந்திரத்தை ஜபித்தால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்..!
ராம பக்தரான அனுமனை தொட்டால் பயம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், அனுமனை வழிபடுவதால் எல்லாவிதமான கஷ்டங்கள் மற்றும் தடைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அனுமன் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனுமனை வழிபட்டால் அனைத்து தொல்லைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், இந்த சிறப்பு நாளில் அனுமனை வழிபட்டால் விரும்பிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி ஏப்ரல் 23, 2024 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. ஜோத்பூரில் உள்ள ஜோதிட நிறுவனத்தின் இயக்குனர் அனிஷ் வியாஸ் கூறியதாவது, ”ஆஞ்சநேய சுவாமி செவ்வாய்க்கிழமை பிறந்தார். அதனால்தான் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அனுமனை வழிபடுகிறார்கள். அதுமட்டுமின்றி, சனிக்கிழமையும் அனுமனுக்கு உகந்த நாளாகும்.

தமிழ் நட்காட்டியின்படி, சித்திரை மாத பௌர்ணமி அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று அனுமன் ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. அனுமன் திரேதா யுகத்தில் இந்த தேதியில் விடியற்காலையில் பிறந்ததாக கூறப்படுகிறது. ஹனுமான் மகாதேவனின் அவதாரம் என்றும் கூறப்படுகிறது. ஹனுமான் சக்தியையும் ஞானத்தையும் கொடுப்பதாகக் கூறப்படுகிறது” என்றார்.
மேலும் சுப ராசிக்காரர்கள் மற்றும் ஜாதக ஆய்வாளர்கள் கூறுகையில், ”சித்ரா நட்சத்திரமும் மேஷமும் இணைந்த சைத்ரா மாத என்கிற சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அனுமன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஹனுமான் ஜன்மோத்சவ் இந்து புத்தாண்டில் 23 ஏப்ரல் 2024 அன்று கொண்டாடப்படுகிறது. வஜ்ர யோகம் ஏப்ரல் 23 காலை முதல் ஏப்ரல் 24 காலை 04.57 நிமிடங்கள் வரை இருக்கும். சித்ரா நட்சத்திரமும் ஏப்ரல் 23 காலை முதல் இரவு 10:32 வரை இருக்கிறது. அதன் பிறகு சுவாதி நட்சத்திரம் தொடங்குகிறது. அனுமன் பிறந்த நாளன்று காலை 9.03 மணி முதல் 10.41 மணி வரை வழிபாடு செய்ய உகந்த நேரம். இந்த நாளில் அதிகாலை 4.20 மணி முதல் 05.04 மணி வரை பிரம்ம முகூர்த்தம் உள்ளது. இந்த நாளில் அபிஜித் முஹூர்த்தம் காலை 11.53 முதல் 12.46 வரை” என்றார்.
அதனைத் தொடர்ந்து, மகாதேவின் 11வது அவதாரமாக அனுமன் கருதப்படுகிறார் என்று ஜோதிடர் அனிஷ் வியாஸ் கூறுகிறார்.. அனுமனை வணங்கி விரதம் இருப்பதன் மூலம் அனுமனின் அருள் கிடைக்கும். டாக்டர் அனிஷ் வியாஸ் கூறியதாவது.. ஜாதகத்தில் சனி தோஷ நிலை உள்ளவர்கள் அல்லது சதாஷதியில் சனி சஞ்சரிப்பவர்கள் அனுமனை வழிபட வேண்டும்.
அனுமன் சூரியன் உதிக்கும் நேரத்தில் பிறந்ததால், அனுமன் பிறந்த நாளில் பிரம்ம முஹூர்த்தத்தில் வழிபடுவது புண்ணியமாகும் என்றார். பூஜையின் போது அனுமனுக்கு சிந்தூர் மற்றும் சோழம் படைக்க வேண்டும். மல்லிகைப் பூ எண்ணெயை அர்ச்சனை செய்தால் அனுமன் மகிழ்ச்சி அடைவார் என்பது ஐதீகம்.
பூஜையின் போது அனைத்து தெய்வங்களுக்கும் பஞ்சாமிர்தத்தை வழங்க வேண்டும். பிறகு தீபம், தூபம் போட்டு பூஜை செய்வது நல்லது. மேலும், இறைவனுக்கு தாம்பூலம் படைக்க வேண்டும்.. அதில் குல்கண்ட் மற்றும் பாதாம் துண்டுகளை வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவனின் சிறப்பு அருள் கிடைக்கும் என்றார். ஆரத்திக்குப் பிறகு அனுமன் சாலிசா, சுந்தரகாண்டம், அனுமன் கதைகள் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். அனுமனை இப்படி விரதம் இருந்து வணங்குவதால் எல்லா கஷ்டங்களும் நீங்கும் என்று டாக்டர் அனிஷ் வியாஸ் கூறினார்.
அனுமன் காயத்ரி மந்திரம்
அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம். ஸ்ரீ ஆஞ்சனேயர்
காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
அனுமனின் மந்திரம் தினமும் உச்சரிப்பதால் நமக்கு தனிப்பட்ட வகையில் நல்ல பலன் உண்டாவதோடு, குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே நல்ல அன்னியோன்னியமும், குடும்ப முன்னேற்றமும் உண்டாகும்.



Click it and Unblock the Notifications