Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி பெண்கள் அவர்களுக்கே தெரியாம மறைக்கும் இந்த விஷயங்கள் குடும்பத்தின் நிம்மதியை கெடுக்குமாம்!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி. சாணக்கிய நீதி என்ற நூலில் தன் அனுபவங்க ளைப் பதிவு செய்துள்ளார். அதில் பணம், உடல்நலம், வியாபாரம், திருமண வாழ்க்கை, சமூகம், வாழ்வில் வெற்றி என அனைத்து விஷயங்களைப் பற்றியும் தனது கருத்தைத் தெரிவிக்கிறார். இதனுடன், சாணக்கிய நீதி பெண்களைப் பற்றி பல விஷயங்களைக் கூறியுள்ளார்.
சில பழக்கவழக்கங்களால் பெண்கள் எப்போதும் குடும்பத்திற்கு பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு பெண் தன் சில கெட்ட குணங்களால் குடும்பம் முழுவதையும் கஷ்டப்படுத்துவார்.

இந்த பழக்கங்கள் மேலோங்கினால் கணவரின் வாழ்க்கை மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப வாழ்க்கையும் நரகமாகிவிடும். சாணக்கியரின் கூற்றுப்படி பெண்களின் அத்தகைய பழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நோய்கள் புறக்கணிக்கப்படுவது
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்களை மற்றவர்களிடமிருந்து மறைக்கிறார்கள். தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும், கணவரிடம் அல்லது குடும்பத்தினர் முன் இதைப் பற்றிக் கூறுவதில்லை. அவர்கள் தனியாகவே மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
முறையான சிகிச்சையின்றி நீண்டகாலமாக மூடிமறைக்கப்பட்ட நோய்கள் மோசமடையத் தொடங்குகின்றன. இதனால் அவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகக்கூடும். எனவே பெண்கள் தங்கள் நோயைப் பற்றி ஒருபோதும் மறைக்கக் கூடாது என்று சாணக்கியர் நீதியில் கூறுகிறார்.
பொய் சொல்வது
பெண்கள் பல விஷயங்களுக்கு பொய் சொல்வதாகவும், இந்தப் பழக்கத்தால் பலமுறை பிரச்சனைகளில் சிக்குவதாகவும் சாணக்கியர் கூறுகிறார். ஆண்களுக்கும் பொய் சொல்லும் பழக்கம் உள்ளது. ஆனால் வீட்டில் உள்ள பெண்கள் பொய் சொல்ல ஆரம்பித்தால் அவர்களுடன் சேர்ந்து குடும்ப உறுப்பினர்களும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
ஒரு பொய் சிறிது காலத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் ஆனால் உண்மையை நீண்ட காலம் மறைக்க முடியாது. உண்மை வெளிவந்தால் குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சியும் மறைந்துவிடும். பெண்களுடன் ஆண்களும் இதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
எல்லா விஷயங்களையும் ஒப்புக்கொள்வது
பெரும்பாலும் பெண்கள் தங்கள் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் அனைத்து முடிவுகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். யாரும் ஏமாற்றமடையக்கூடாது என்பதற்காக இதைச் செய்கிறார்கள். அது தவறு, அதனால் அவர்கள் பின்னர் வருந்துகிறார்கள்.
பெண்களும் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி, தங்கள் சுயமரியாதையை தக்கவைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சாணக்கியர் சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.
கருத்துக்களை மறைப்பது
மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கைக்கு கணவனும் மனைவியும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். பெரும்பாலும் பெண்கள் குடும்பம் அல்லது கணவர் முன் தங்கள் கருத்தை தெரிவிக்க மறுக்கிறார்கள்.
அவர்கள் குடும்ப சண்டைகளைத் தவிர்க்க விரும்புகிறார்கள். ஆனால் அதன் பிறகு அடிக்கடி வருந்துவார்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவரவர் சூழ்நிலைக்கேற்ப கருத்துக்களை தைரியமாக கூற வேண்டும் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications












