Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 4 விஷயங்களில் எப்போதும் ஆண்களை விட உயர்ந்தவர்களாகத்தான் இருப்பார்களாம்...!
இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக இருந்த சாணக்கியர் வாழ்க்கை குறித்த அவரின் கொள்கைகளுக்காக மிகவும் புகழ்பெற்றவர். சாணக்கிய நீதி என்பது ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகள் மற்றும் அறிவுரைகளின் புகழ்பெற்ற தொகுப்பாகும், அவை எழுதப்பட்ட காலத்தில் இருந்ததைப் போலவே இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்துகின்றன. இந்த கொள்கைகள் மனித வாழ்க்கையை சரியான பாதையில் வழிநடத்த உதவுகின்றன.

சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் தொழில், நட்பு, திருமண வாழ்க்கை, செல்வம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைப் பற்றி கூறியுள்ளார். சாணக்கிய நிதி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி விவாதிக்கிறது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமிருக்கும் நான்கு பண்புகளை பற்றி விவரித்துள்ளார்.
பசி
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, 'ஸ்த்ரீனம் த்விகுன் ஆஹாரோ' என்பது ஆண்களை விட பெண்களுக்கு அதிக பசியைக் குறிக்கிறது. உணவில் ஆண்களை விட இவர்கள் முன்னிலையில் உள்ளனர். சாணக்கியரின் கொள்கையின்படி, ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு பசியுடன் இருப்பார்கள். அவர்களின் உடல் அமைப்பு காரணமாக, பெண்களுக்கு அதிக கலோரி தேவைப்படுகிறது. அதனால்தான் பெண்கள் அதிக அளவு உணவு சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
புத்திக்கூர்மை
ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கும் இரண்டாவது பண்பாக சாணக்கியர் கூறுவது புத்திக்கூர்மை. அதாவது ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள், அதனை தனது சாணக்கிய நீதியில் 'புத்தஸ்தாசன் சதுர்குணா' என்று கூறியுள்ளார். அவர்கள் ஆண்களை விட அதிக புத்திசாலித்தனம் கொண்டவர்கள். பெண்களின் புத்திசாலித்தனம் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் சிரமமின்றி தப்பிக்க அவர்களுக்கு உதவுகிறது.
தைரியம்
ஆண்கள் பெரும்பாலும் ஆண்களை விட தைரியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இருப்பினும், சாணக்கிய நீதி இதற்கு நேர் எதிரானதாக கூறுகிறது. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பெண்களுக்கு ஆண்களை விட ஆறு மடங்கு தைரியம் உள்ளது. எந்த சூழ்நிலையிலும், பெண்கள் பீதி அடைய மாட்டார்கள். தனது சாணக்கிய நீதியில் 'சஹசம் ஷட்குணம்' என்று கூறியுள்ளார், அதாவது ஆண்களை விட பெண்களுக்கு ஆறு மடங்கு தைரியம் உள்ளது. மன அழுத்த சகிப்புத்தன்மையின் அடிப்படையில், பெண்கள் ஆண்களை விட தைரியமாக உள்ளனர்.
பாலியல் ஆசைகள்
சாணக்கிய நீதியில் சாணக்கியர், பெண்களின் பாலுறவு உணர்வு பற்றிய தனது கருத்தையும், ஆண்களுடன் ஒப்பீட்டுக் கூறியுள்ளார். பெண்கள் ஆண்களை விட அதிக சிற்றின்ப உணர்வு கொண்டவர்கள், அதனை 'காமோஷ்டகுன் உச்யதே' என்று கூறியுள்ளார். ஆண்களை விட பெண்களுக்கு 8 மடங்கு பாலியல் உணர்வுகள் உள்ளன. இதன் அர்த்தம் ஆண்களுக்கு பாலியல் ஆசை குறைவாக இருக்கிறது என்பதல்ல, மாறாக பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பதுதான்.



Click it and Unblock the Notifications

