சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 4 விஷயங்களில் எப்போதும் ஆண்களை விட உயர்ந்தவர்களாகத்தான் இருப்பார்களாம்...!

இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக இருந்த சாணக்கியர் வாழ்க்கை குறித்த அவரின் கொள்கைகளுக்காக மிகவும் புகழ்பெற்றவர். சாணக்கிய நீதி என்பது ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகள் மற்றும் அறிவுரைகளின் புகழ்பெற்ற தொகுப்பாகும், அவை எழுதப்பட்ட காலத்தில் இருந்ததைப் போலவே இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்துகின்றன. இந்த கொள்கைகள் மனித வாழ்க்கையை சரியான பாதையில் வழிநடத்த உதவுகின்றன.

Chanakya Niti: Women Always Ahead of Men In These Things in Tamil

சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் தொழில், நட்பு, திருமண வாழ்க்கை, செல்வம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைப் பற்றி கூறியுள்ளார். சாணக்கிய நிதி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி விவாதிக்கிறது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமிருக்கும் நான்கு பண்புகளை பற்றி விவரித்துள்ளார்.

பசி

ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, 'ஸ்த்ரீனம் த்விகுன் ஆஹாரோ' என்பது ஆண்களை விட பெண்களுக்கு அதிக பசியைக் குறிக்கிறது. உணவில் ஆண்களை விட இவர்கள் முன்னிலையில் உள்ளனர். சாணக்கியரின் கொள்கையின்படி, ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு பசியுடன் இருப்பார்கள். அவர்களின் உடல் அமைப்பு காரணமாக, பெண்களுக்கு அதிக கலோரி தேவைப்படுகிறது. அதனால்தான் பெண்கள் அதிக அளவு உணவு சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

புத்திக்கூர்மை

ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கும் இரண்டாவது பண்பாக சாணக்கியர் கூறுவது புத்திக்கூர்மை. அதாவது ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள், அதனை தனது சாணக்கிய நீதியில் 'புத்தஸ்தாசன் சதுர்குணா' என்று கூறியுள்ளார். அவர்கள் ஆண்களை விட அதிக புத்திசாலித்தனம் கொண்டவர்கள். பெண்களின் புத்திசாலித்தனம் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் சிரமமின்றி தப்பிக்க அவர்களுக்கு உதவுகிறது.

தைரியம்

ஆண்கள் பெரும்பாலும் ஆண்களை விட தைரியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இருப்பினும், சாணக்கிய நீதி இதற்கு நேர் எதிரானதாக கூறுகிறது. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பெண்களுக்கு ஆண்களை விட ஆறு மடங்கு தைரியம் உள்ளது. எந்த சூழ்நிலையிலும், பெண்கள் பீதி அடைய மாட்டார்கள். தனது சாணக்கிய நீதியில் 'சஹசம் ஷட்குணம்' என்று கூறியுள்ளார், அதாவது ஆண்களை விட பெண்களுக்கு ஆறு மடங்கு தைரியம் உள்ளது. மன அழுத்த சகிப்புத்தன்மையின் அடிப்படையில், பெண்கள் ஆண்களை விட தைரியமாக உள்ளனர்.

பாலியல் ஆசைகள்

சாணக்கிய நீதியில் சாணக்கியர், பெண்களின் பாலுறவு உணர்வு பற்றிய தனது கருத்தையும், ஆண்களுடன் ஒப்பீட்டுக் கூறியுள்ளார். பெண்கள் ஆண்களை விட அதிக சிற்றின்ப உணர்வு கொண்டவர்கள், அதனை 'காமோஷ்டகுன் உச்யதே' என்று கூறியுள்ளார். ஆண்களை விட பெண்களுக்கு 8 மடங்கு பாலியல் உணர்வுகள் உள்ளன. இதன் அர்த்தம் ஆண்களுக்கு பாலியல் ஆசை குறைவாக இருக்கிறது என்பதல்ல, மாறாக பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பதுதான்.

Desktop Bottom Promotion