Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி மற்றவர்கள் செல்வம் மீது ஆசைப்படுபவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
Chanakya Niti: செல்வம், பணம், சமூகத்தில் மரியாதையும் அனைவருமே விரும்புவதாக. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைவரின் நிதி நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பணம் கொடுக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வேறு எந்த விஷயத்தாலும் கொடுக்க முடியாது. எனவே அதனை குறுக்கு வழியில் சம்பாதிக்க பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்க.
சாணக்கியர் தனது நீதி ஸ்திரத்தில் சொத்து, செல்வம் மற்றும் பணத்தைப் பற்றிய பல ரகசியங்களைக் கூறியுள்ளார். சாணக்கியர் செல்வம் பெறும் வழிகளைப் பற்றியும், மற்றொருவரின் பணத்திற்கான மனிதனின் ஆசையையும் பற்றி விளக்கியுள்ளார். இந்த பதிவில் மற்றவர்களின் செல்வத்தின் மீதான ஆசை எப்படி அழிவை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் கூறுகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.

இழப்புகள் மற்றும் கஷ்டங்கள்
பிறருடைய செல்வத்தின் மீது ஆசைப்பட்டால் அது பேராசை எனப்படும். நீங்கள் அத்தகைய குணம் கொண்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே சிரமங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
இந்த பேராசை உங்களை நிதி இழப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் இட்டுச் செல்லும். மேலும் வாழ்க்கையில் பல சவால்களை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பது என்பது தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்தும். எப்போதும் புத்திசாலித்தனத்துடனும், நல்ல உள்ளத்துடனும் செயல்படுங்கள். இது வாழ்க்கையை சிறப்பாக்கும்.
தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருக்க வேண்டும்
வாழ்க்கையில் எப்பொழுதும் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும், கடின உழைப்பின் மூலம் உங்களுக்குத் தேவையானதை சம்பாதிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். மாறாக, மற்றவர்களின் சொத்துக்களில் கண்ணை வைத்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
அதுமட்டுமின்றி வாழ்க்கையில் பல சவால்கள் ஏற்படும். வாழ்க்கையில் நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம், கடின உழைப்பின் மூலம் நாம் அடைய விரும்புவதை அடைய வேண்டும். சம்பாதிக்க குறுக்குவழிகள் எப்போதும் நிரந்தரமானவை அல்ல.
ஆபத்தில் சிக்கலாம்
மற்றவர்களின் செல்வத்தை விரும்புபவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கான ஆபத்தான சூழ்நிலைகளை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். சட்ட விரோதமாக செல்வத்தைப் பெற முயற்சிப்பது சிறைக்குச் செல்லும் ஆபத்தை ஏற்படுத்தலாம். சிலர் அதற்காக தொடர்ச்சியான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஒருவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
சவால்கள் மற்றும் நெருக்கடிகள்
பேராசை உங்கள் மன அமைதியை அழிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எப்படியாவது அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணமும் கவலையும் வாழ்க்கையில் நிறைய சிரமங்களை ஏற்படுத்துகிறது. இது உங்கள் மன ஆரோக்கியத்தையும் அழிக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் இருந்து விடுபட ஒரே வழி கடினமாக உழைத்து சரியான வழியில் முன்னேறுவதுதான். ஒருவரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications
