Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி மற்றவர்கள் செல்வம் மீது ஆசைப்படுபவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
Chanakya Niti: செல்வம், பணம், சமூகத்தில் மரியாதையும் அனைவருமே விரும்புவதாக. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைவரின் நிதி நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பணம் கொடுக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வேறு எந்த விஷயத்தாலும் கொடுக்க முடியாது. எனவே அதனை குறுக்கு வழியில் சம்பாதிக்க பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்க.
சாணக்கியர் தனது நீதி ஸ்திரத்தில் சொத்து, செல்வம் மற்றும் பணத்தைப் பற்றிய பல ரகசியங்களைக் கூறியுள்ளார். சாணக்கியர் செல்வம் பெறும் வழிகளைப் பற்றியும், மற்றொருவரின் பணத்திற்கான மனிதனின் ஆசையையும் பற்றி விளக்கியுள்ளார். இந்த பதிவில் மற்றவர்களின் செல்வத்தின் மீதான ஆசை எப்படி அழிவை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் கூறுகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.

இழப்புகள் மற்றும் கஷ்டங்கள்
பிறருடைய செல்வத்தின் மீது ஆசைப்பட்டால் அது பேராசை எனப்படும். நீங்கள் அத்தகைய குணம் கொண்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே சிரமங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
இந்த பேராசை உங்களை நிதி இழப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் இட்டுச் செல்லும். மேலும் வாழ்க்கையில் பல சவால்களை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பது என்பது தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்தும். எப்போதும் புத்திசாலித்தனத்துடனும், நல்ல உள்ளத்துடனும் செயல்படுங்கள். இது வாழ்க்கையை சிறப்பாக்கும்.
தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருக்க வேண்டும்
வாழ்க்கையில் எப்பொழுதும் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும், கடின உழைப்பின் மூலம் உங்களுக்குத் தேவையானதை சம்பாதிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். மாறாக, மற்றவர்களின் சொத்துக்களில் கண்ணை வைத்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
அதுமட்டுமின்றி வாழ்க்கையில் பல சவால்கள் ஏற்படும். வாழ்க்கையில் நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம், கடின உழைப்பின் மூலம் நாம் அடைய விரும்புவதை அடைய வேண்டும். சம்பாதிக்க குறுக்குவழிகள் எப்போதும் நிரந்தரமானவை அல்ல.
ஆபத்தில் சிக்கலாம்
மற்றவர்களின் செல்வத்தை விரும்புபவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கான ஆபத்தான சூழ்நிலைகளை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். சட்ட விரோதமாக செல்வத்தைப் பெற முயற்சிப்பது சிறைக்குச் செல்லும் ஆபத்தை ஏற்படுத்தலாம். சிலர் அதற்காக தொடர்ச்சியான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஒருவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
சவால்கள் மற்றும் நெருக்கடிகள்
பேராசை உங்கள் மன அமைதியை அழிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எப்படியாவது அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணமும் கவலையும் வாழ்க்கையில் நிறைய சிரமங்களை ஏற்படுத்துகிறது. இது உங்கள் மன ஆரோக்கியத்தையும் அழிக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் இருந்து விடுபட ஒரே வழி கடினமாக உழைத்து சரியான வழியில் முன்னேறுவதுதான். ஒருவரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications
