Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
சாணக்கிய நீதி படி மற்றவர்கள் செல்வம் மீது ஆசைப்படுபவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
Chanakya Niti: செல்வம், பணம், சமூகத்தில் மரியாதையும் அனைவருமே விரும்புவதாக. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைவரின் நிதி நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பணம் கொடுக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வேறு எந்த விஷயத்தாலும் கொடுக்க முடியாது. எனவே அதனை குறுக்கு வழியில் சம்பாதிக்க பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்க.
சாணக்கியர் தனது நீதி ஸ்திரத்தில் சொத்து, செல்வம் மற்றும் பணத்தைப் பற்றிய பல ரகசியங்களைக் கூறியுள்ளார். சாணக்கியர் செல்வம் பெறும் வழிகளைப் பற்றியும், மற்றொருவரின் பணத்திற்கான மனிதனின் ஆசையையும் பற்றி விளக்கியுள்ளார். இந்த பதிவில் மற்றவர்களின் செல்வத்தின் மீதான ஆசை எப்படி அழிவை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் கூறுகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.

இழப்புகள் மற்றும் கஷ்டங்கள்
பிறருடைய செல்வத்தின் மீது ஆசைப்பட்டால் அது பேராசை எனப்படும். நீங்கள் அத்தகைய குணம் கொண்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே சிரமங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
இந்த பேராசை உங்களை நிதி இழப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் இட்டுச் செல்லும். மேலும் வாழ்க்கையில் பல சவால்களை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பது என்பது தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்தும். எப்போதும் புத்திசாலித்தனத்துடனும், நல்ல உள்ளத்துடனும் செயல்படுங்கள். இது வாழ்க்கையை சிறப்பாக்கும்.
தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருக்க வேண்டும்
வாழ்க்கையில் எப்பொழுதும் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும், கடின உழைப்பின் மூலம் உங்களுக்குத் தேவையானதை சம்பாதிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். மாறாக, மற்றவர்களின் சொத்துக்களில் கண்ணை வைத்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
அதுமட்டுமின்றி வாழ்க்கையில் பல சவால்கள் ஏற்படும். வாழ்க்கையில் நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம், கடின உழைப்பின் மூலம் நாம் அடைய விரும்புவதை அடைய வேண்டும். சம்பாதிக்க குறுக்குவழிகள் எப்போதும் நிரந்தரமானவை அல்ல.
ஆபத்தில் சிக்கலாம்
மற்றவர்களின் செல்வத்தை விரும்புபவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கான ஆபத்தான சூழ்நிலைகளை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். சட்ட விரோதமாக செல்வத்தைப் பெற முயற்சிப்பது சிறைக்குச் செல்லும் ஆபத்தை ஏற்படுத்தலாம். சிலர் அதற்காக தொடர்ச்சியான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஒருவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
சவால்கள் மற்றும் நெருக்கடிகள்
பேராசை உங்கள் மன அமைதியை அழிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எப்படியாவது அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணமும் கவலையும் வாழ்க்கையில் நிறைய சிரமங்களை ஏற்படுத்துகிறது. இது உங்கள் மன ஆரோக்கியத்தையும் அழிக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் இருந்து விடுபட ஒரே வழி கடினமாக உழைத்து சரியான வழியில் முன்னேறுவதுதான். ஒருவரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications












