Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதி படி இந்த 6 காரணங்களால்தான் திருமணம் விவாகரத்தில் முடிகிறதாம்... இந்த தப்ப பண்ணாதீங்க...!
Chanakya Niti: முந்தைய காலங்களில், திருமணத்திற்குப் பிறகு, வாழ்நாள் முழுவதும் உறவு பராமரிக்கப்பட்டது. அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பொறுமை, மரியாதை, கண்ணியம் போன்றவை கவனிக்கப்பட்டதால் விவாகரத்து வழக்குகள் அதிகமாக இல்லாமல் இறந்தது.
இருவரும் அனைத்து சூழ்நிலையிலும் ஒருவரையொருவர் ஆதரித்து நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த சகிப்புத்தன்மை மக்களிடம் இல்லை. நவீன வாழ்க்கையில், கோபம், எரிச்சல், செலவுகள், மன அழுத்தம் மற்றும் பொய் சொல்லும் போக்கு ஆகியவை மக்களின் இயல்புகளில் அதிகரித்து வருகின்றன.

மக்கள் மத்தியில் பொறுமையான மனப்பான்மை முடிவுக்கு வந்துவிட்டது, அனைவருமே தங்கள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த சூழ்நிலைகளால், திருமண வாழ்க்கையும் தடுமாறத் தொடங்கியுள்ளது. விவாகரத்து வழக்குகளும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆச்சார்யா சாணக்கியர், தனது சாணக்கிய நீதியில் திருமண வாழ்க்கையை கெடுக்கும் காரணமாகக் கருதப்படும் சில பழக்கங்களைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தார். இந்த பழக்கங்களை சரியாகக் கையாண்டால், உங்கள் திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழலாம்.
கோபம்
கோபம் ஒரு நபருக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவரது அனைத்து உறவுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காரணமாகவும் கருதப்படுகிறது. கணவன்-மனைவி இருவரில் யாரேனும் கோபம் கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் திருமண வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், மோதல் சூழ்நிலைகள் உருவாகின்றன மற்றும் திருமண வாழ்க்கை பலவீனமாகிறது.
தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாத்தல்
உங்கள் திருமண வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால், உங்கள் தனிப்பட்ட ரகசியங்களை நீங்களே வைத்திருப்பது நல்லது. உங்கள் உரையாடலில் மூன்றாவது நபரை வைத்துப் பேசினால், உங்களுக்கிடையில் உள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
பொய்
கணவன்-மனைவி உறவு மிகவும் மென்மையானது, இந்த உறவு பொய்யால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும். காலப்போக்கில், உங்கள் பொய் வெளிவந்தால், உங்கள் துணைக்கு உங்கள் மீதிருக்கும் நம்பிக்கை கெட்டுவிடும் மற்றும் உங்கள் உறவில் கசப்பு உருவாகத் தொடங்கும்.
செலவுகள்
வருமானத்திற்கு ஏற்ப, கணவன்-மனைவி இருவரும் தங்கள் செலவுகளில் சமநிலையை பராமரிக்க வேண்டும். உங்கள் செலவுகள் கணக்கில் வராமல் போனாலோ அல்லது தேவையில்லாத செலவுகளில் ஈடுபட்டாலோ கணவன்-மனைவி இடையே கண்டிப்பாக மோதல் சூழ்நிலை ஏற்படும்.
எல்லைகளை மீறுவது
ஒவ்வொரு உறவுக்கும் ஒரு எல்லை உண்டு. இதை கணவன் மனைவி இருவரும் மனதில் கொள்ள வேண்டும். எல்லைகள் மீறப்படும் போது உறவுகள் முறியும் சூழ்நிலைகள் உருவாகிறது.
சகிப்புத்தன்மை
வாழ்க்கையில் பல சமயங்களில் இப்படிப்பட்ட பாதகமான சூழ்நிலைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் மற்றும் சூழ்நிலைகளை பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும். அவசரத்தில் செய்யும்போது விஷயங்கள் மோசமாகிவிடும்.



Click it and Unblock the Notifications












