Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதி படி இந்த 4 வகையான நபர்கள் உங்கள் விஷம் போல கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்க்கையை அழிப்பார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த தத்துவஞானி மற்றும் அரசியல்வாதி. கௌடில்யர் என்றும் அழைக்கப்படும் சாணக்கியர், மௌரியப் பேரரசர் சந்திரகுப்தரின் அரசியல் வியூகவாதி மற்றும் ஆலோசகர் ஆவார்.
வாழ்க்கைப் பற்றிய பல்வேறு விஷயங்களில் சாணக்கியரின் பரந்த அறிவு நன்கு அறியப்பட்டதாகும். அவரது வார்த்தைகள் எந்த காலத்திற்க்கும் பொருந்துவதாகும். அவரது சாணக்கிய நீதி அவருடைய அறிவு மற்றும் அனுபவத்தின் தொகுப்பாகும்.

சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுபவர்கள் தனது வாழ்க்கையில் பல சிக்கல்களிலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. இன்றைய வேகமான மற்றும் போட்டி நிறைந்த உலகில், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பழகும் நபர்களைப் பற்றி நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் 5 வகையான நபர்களிடம் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று சாணக்கியர் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். அத்தகையவர்களை சரியான நேரத்தில் அடையாளம் காணவில்லை என்றால், அவர்கள் உங்கள் வாழ்க்கையை அழித்துவிடுவார்கள். அவர்களுடன் வாழ்வது ஒருவரின் மரணத்தை அழைப்பதற்கு சமம் என்கிறார் சாணக்கியர்.
ஏமாற்றும் மனைவி
கணவனை ஏமாற்றும் அல்லது பிற ஆண்களைப் பற்றி நினைக்கும் மனைவி நெஞ்சில் தைத்த போன்றவர் என்கிறார் சாணக்கியர். அத்தகைய பெண்கள் தங்கள் கணவருக்கு துரோகம் செய்யவும், தங்கள் குடும்பங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும் கூட தயங்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மனைவியை விட்டுப் பிரிந்து செல்வது நரகத்தில் வாழ்வதை விடவும் துன்பப்படுவதை விடவும் மேலானது என்கிறார் சாணக்கியர். அத்தகைய பெண்களுடனான வாழ்க்கை உங்களுக்கு நரகத்தை விட கொடுமையானதாக இருக்கும்.
துரோகம் செய்யும் வேலைக்காரன்
ஒரு வேலைக்காரன் தன் முதலாளியின் கட்டளையை மீறி செயல்பட்டால் அல்லது வீட்டில் திருடத் தொடங்கினால், அது வெடிக்க தயாராக இருக்கும் வெடிகுண்டு போன்றது. அத்தகைய வேலைக்காரன் தன் எஜமானுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறான். அவர்கள் தங்கள் நன்மைக்காகவும், சுயநலத்திற்காகவும் முதலாளியின் உயிரை எடுக்க கூட தயங்க மாட்டார்கள். எனவே உங்கள் பணியாளர்களின் நம்பகத்தன்மையையும், விசுவாசத்தையும் சரிபார்த்த பின்னரே உங்களிடம் பணியில் வைத்துக்கொள்ளுங்கள்.
போலி நண்பர்கள்
நண்பர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள். ஏனெனில் நல்ல நண்பர்கள் இருந்தால் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கலாம். கடினமான காலங்களில் துணை நிற்பவனே உண்மையான நண்பன். மறுபுறம், ஒரு போலி நண்பர் உங்களைப் பயன்படுத்தி உங்கள் நம்பிக்கையைத் துரோகம் செய்வார். உங்களை புண்படுத்தும் மற்றும் உங்களை முதுகில் குத்தும் சதி செய்யும் நண்பர்களிடமிருந்து விலகி இருக்குமாறு சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
பாம்பு
பாம்பு என்பது விஷம் நிறைந்த ஒரு கொடிய உயிரினமாகும், எந்த நேரத்திலும் அது எங்கு வேண்டுமென்றாலும் சுற்றித் திரியும். பாம்புகள் உள்ள இடத்தில் வாழ்வது மரணத்தை அழைப்பதற்கு சமம். பாம்புகள் விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம், அவை காணக்கூடிய இடங்களைத் தவிர்க்கவும் சாணக்கியர் எச்சரிக்கிறார்.
பொய் பேசுபவர்கள்
தங்கள் உண்மையான இயல்பை மற்றவர்களிடம் இருந்து மறைக்கும் பலர் உள்ள சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம். அத்தகையவர்கள் மற்றவர்களுக்கு முன்னால் மிகவும் நேர்மையானவர்களாக நடிப்பார்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போது உங்களைப் பற்றி மோசமாகப் பேசுவார்கள். இப்படிப்பட்டவர்களுடன் நெருக்கமாக பழகக்கூடாது என்கிறார் சாணக்கியர். இரண்டு வித்தியாசமான ஆளுமை கொண்டவர்கள் மிக மோசமானவர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்கள் உங்கள் முன்னால் இனிமையாகப் பேசுவார்கள், உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவார்கள். இப்படிப்பட்டவர்களுடன் பழகுவதைத் தவிர்க்கவும் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications












