சாணக்கிய நீதி படி உங்க காதலில் இந்த 3 விஷயங்கள் இருந்தால் உங்கள் காதலை யாராலும் பிரிக்க முடியாதாம்...!

அன்புதான் ஒவ்வொரு உறவுக்கும் அடிப்படையாகும், சாணக்கியர் கூறும் சில விஷயங்கள் காதலர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சாணக்கியர் இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சாணக்கியர் ஆச்சார்யா சாணக்கியர் என்றும் கௌடில்யர் என்றும் அழைக்கப்படுகிறார்.

சாணக்கியர் வேதங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவருக்கு வாழ்க்கையின் அனைத்து விஷயங்கள் மீதும் வித்தியாசமான பார்வை இருந்தது.

Chanakya Niti: Tips To Maintain a Healthy Relationship in Tamil

சாணக்கியர் தனது சாணக்கிய நீதி புத்தகத்தில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். சாணக்கியர் காதல் தொடர்பான சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று சொன்னார்.

சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, எந்தவொரு உறவிலும் அன்பின் உணர்வு இருந்தாலொழிய, சொந்தம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு இருக்க முடியாது. காதல் பிறந்தால் தான் உறவு வலுப்பெறும். எனவே உறவு வலுவாகவும் நீடித்ததாகவும் இருக்க வேண்டுமானால், அதில் காதல் உணர்வு குறைய அனுமதிக்கக் கூடாது.

சாணக்கியரின் கூற்றுப்படி, காதலுடன் அன்பு மற்றும் மரியாதையும் மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு உறவும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் முடிந்தவரை மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அன்பின் அடிப்படையிலான உறவில் மரியாதை அல்லது கண்ணியம் எப்போதும் குறையாது. ஈகோவாலும், தன்னை உயர்ந்தவனாகக் கருதுவதாலும் உறவில் மரியாதை குறைகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். காதலில் ஈகோ உணர்வு இருக்கக்கூடாது. இது உறவை பலவீனப்படுத்தும்.

சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, உறவுகள் அன்பையும் நம்பிக்கையையும் அஅன்புதான் ஒவ்வொரு உறவுக்கும் அடிப்படையாகும், சாணக்கியர் கூறும் சில விஷயங்கள் காதலர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சாணக்கியர் இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சாணக்கியர் ஆச்சார்யா சாணக்கியர் என்றும் கௌடில்யர் என்றும் அழைக்கப்படுகிறார்.

சாணக்கியர் வேதங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவருக்கு வாழ்க்கையின் அனைத்து விஷயங்கள் மீதும் வித்தியாசமான பார்வை இருந்தது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதி புத்தகத்தில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். சாணக்கியர் காதல் தொடர்பான சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று சொன்னார்.

சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, எந்தவொரு உறவிலும் அன்பின் உணர்வு இருந்தாலொழிய, சொந்தம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு இருக்க முடியாது. காதல் பிறந்தால் தான் உறவு வலுப்பெறும். எனவே உறவு வலுவாகவும் நீடித்ததாகவும் இருக்க வேண்டுமானால், அதில் காதல் உணர்வு குறைய அனுமதிக்கக் கூடாது.

சாணக்கியரின் கூற்றுப்படி, காதலுடன் அன்பு மற்றும் மரியாதையும் மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு உறவும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் முடிந்தவரை மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அன்பின் அடிப்படையிலான உறவில் மரியாதை அல்லது கண்ணியம் எப்போதும் குறையாது. ஈகோவாலும், தன்னை உயர்ந்தவனாகக் கருதுவதாலும் உறவில் மரியாதை குறைகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். காதலில் ஈகோ உணர்வு இருக்கக்கூடாது. இது உறவை பலவீனப்படுத்தும்.

சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, உறவுகள் அன்பையும் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டவை. நம்பிக்கையை உருவாக்குவது மிகவும் கடினம். உறவில் நம்பிக்கையை வளர்க்க அதிக காலம் தேவைப்படும், ஆனால் அதை உடைக்க ஒரு நொடி போதும். எந்தவொரு உறவின் புனிதத்தன்மையைப் பேணுவதில் நம்பிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. உறவுக்குள் பொய் நுழையும் போதுதான் நம்பிக்கை குறைகிறது. பரஸ்பர உறவுகளில் பொய்களுக்கு இடமிருக்கக்கூடாது.

சாணக்கிய நீதியின்படி, அன்பு இருக்கும் இடத்தில், கோபத்தைத் தவிர்க்க வேண்டும். அடக்கத்தினாலும், பணிவாலும் ஒருவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியும். நெருங்கிய நண்பர்கள் கூட கோபமான நபரிடம் இருந்து விலகி இருக்கிறார்கள். கோபக்காரர்கள் தனக்கு மட்டுமல்ல பிறருக்கும் தீங்கு செய்கிறான்.அடிப்படையாகக் கொண்டவை.

நம்பிக்கையை உருவாக்குவது மிகவும் கடினம். உறவில் நம்பிக்கையை வளர்க்க அதிக காலம் தேவைப்படும், ஆனால் அதை உடைக்க ஒரு நொடி போதும். எந்தவொரு உறவின் புனிதத்தன்மையைப் பேணுவதில் நம்பிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. உறவுக்குள் பொய் நுழையும் போதுதான் நம்பிக்கை குறைகிறது. பரஸ்பர உறவுகளில் பொய்களுக்கு இடமிருக்கக்கூடாது.

சாணக்கிய நீதியின்படி, அன்பு இருக்கும் இடத்தில், கோபத்தைத் தவிர்க்க வேண்டும். அடக்கத்தினாலும், பணிவாலும் ஒருவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியும். நெருங்கிய நண்பர்கள் கூட கோபமான நபரிடம் இருந்து விலகி இருக்கிறார்கள். கோபக்காரர்கள் தனக்கு மட்டுமல்ல பிறருக்கும் தீங்கு செய்கிறான்.

Story first published: Wednesday, May 10, 2023, 7:30 [IST]
Desktop Bottom Promotion