Latest Updates
-
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 3 விஷயங்களை பாலோ பண்ணுனா நாம வாழ்க்கையில் எந்த பாவமும் செய்ய மாட்டோமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் கொள்கைகள் ஞானத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. ஏனெனில், சாணக்கியரின் கொள்கைகள் நமக்கு அபரிமிதமான அறிவைத் தருகிறது. சாணக்கியரின் நெறிமுறைகளின் அடிப்படையில் அறிவைப் பெறுபவர் தனது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
மனித வாழ்க்கைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு உணர்த்தும் வகையில், சாணக்கியர் தனது மதிப்புமிக்க அறிவுரைகளை தன்னுடைய சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் தனது கொள்கைகளின் மூலம் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்களை வழிநடத்துகிறார்.

சாணக்கியர் கடுமையான சூழ்நிலைகளில் கூட தன்னுடைய இலக்கிலிருந்து பின்வாங்கவில்லை. மேலும் தனது ஞானம் மற்றும் அறிவினால் தன்னுடைய இலக்கை அடைந்தார். சாணக்கியரின் இந்த அறிவுரைகளை வாழ்க்கையில் பின்பற்றினால், நீங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் தவறு செய்ய மாட்டீர்கள், எந்த சூழ்நிலையும் தானாகவே உங்களுக்கு பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.
ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது
கடந்த காலத்தை நினைத்து அழுவது அல்லது மீண்டும் மீண்டும் வருந்துவது வீண் என்று சாணக்கியர் கூறியுள்ளார். மனிதர்கள் தவறு செய்வது இயல்பானதுதான், ஆனால் இந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது.
நம் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், அதை மீண்டும் செய்யக்கூடாது. நமது தவறுகளில் இருந்து பாடம் கற்று, எதிர்கால உத்திகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நிகழ்காலத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
எதிரியைத் தாக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியவை
சாணக்கியரின் கூற்றுப்படி, எதிரியை பலவீனமாகக் கருதுவது மிகப்பெரிய தவறாகும். அவரைத் தோற்கடிக்க, அவருடைய பலத்தைப் பற்றிய சரியான கணிப்பு இருப்பது மிகவும் முக்கியம், அப்போதுதான் நீங்கள் அவரைத் தாக்கி அவரை எதிர்த்து வெற்றிபெற முடியும்.
உங்கள் எதிரிகளைத் தாக்க நீங்கள் அவசரப்பட்டு விரைந்து சென்றால் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எதிரிகளை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுங்கள். ஒற்றுமைக்கு பெரும் பலம் உண்டு. கெட்ட நேரங்கள் வரும்போது, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். இது ஒரு நபரை பலவீனமடையாமல் பாதுகாக்கிறது.
நட்பு கொள்ள சிறந்தவர்கள்
சாணக்கியக் கொள்கைகளின்படி, உங்கள் முன்னால் உங்களைப் பற்றி நன்றாகப் பேசும் மற்றும் உங்கள் பின்னால் உங்களைப் பற்றி தவறாக நினைக்கும் ஒருவருடன் நட்பு கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் உண்மையான நண்பர்கள் எக்காரணம் கொண்டும் உங்களை மற்றவர்கள் முன் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உங்கள் நற்பெயரைக் கெடுக்கும் எதையும் செய்ய ஒருபோதும் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். தவறுதலாக உங்கள் நட்பை விட்டு வெளியேறுபவர்கள் பலர் உள்ளனர், ஆனால் உங்கள் தவறை உணர்ந்து அதைத் திருத்தி எப்போதும் உங்களுடன் இருப்பவர் உண்மையான நண்பர் என்று அழைக்கப்படுகிறார். அவர்களை உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் புறக்கணிக்கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார்.
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, மேற்கண்ட விஷயங்களை நமக்குள் சரியாக எடுத்துக் கொண்டால், வாழ்க்கையில் நாம் ஒருபோதும் தவறு செய்ய மாட்டோம். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதை விட நம்மால் எந்த தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications
