Latest Updates
-
ஜூலை 16-ல் சூரிய-சந்திரனின் பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ஜூலை 16-ல் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்காய் பாயா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - ஆட்டுக்கால் பாயாவை விட சூப்பரா இருக்கும் -
உங்க முகம் கருப்பா, டல்லா இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
1 தேங்காயும், 1 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
'ஸ்ராவண' மாதத்தில் சிவபெருமானின் ஆசியால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவில்களிலும், பூஜையிலும் தேங்காய் ஏன் உடைக்கப்படுகிறது? அதற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? -
மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுது.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்ற ராசிகளை விட அதிக காம உணர்வு கொண்டவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பீர்க்கங்காயை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்..
சாணக்கிய நீதி படி இந்த 3 விஷயங்களை பாலோ பண்ணுனா நாம வாழ்க்கையில் எந்த பாவமும் செய்ய மாட்டோமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் கொள்கைகள் ஞானத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. ஏனெனில், சாணக்கியரின் கொள்கைகள் நமக்கு அபரிமிதமான அறிவைத் தருகிறது. சாணக்கியரின் நெறிமுறைகளின் அடிப்படையில் அறிவைப் பெறுபவர் தனது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
மனித வாழ்க்கைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு உணர்த்தும் வகையில், சாணக்கியர் தனது மதிப்புமிக்க அறிவுரைகளை தன்னுடைய சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் தனது கொள்கைகளின் மூலம் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்களை வழிநடத்துகிறார்.

சாணக்கியர் கடுமையான சூழ்நிலைகளில் கூட தன்னுடைய இலக்கிலிருந்து பின்வாங்கவில்லை. மேலும் தனது ஞானம் மற்றும் அறிவினால் தன்னுடைய இலக்கை அடைந்தார். சாணக்கியரின் இந்த அறிவுரைகளை வாழ்க்கையில் பின்பற்றினால், நீங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் தவறு செய்ய மாட்டீர்கள், எந்த சூழ்நிலையும் தானாகவே உங்களுக்கு பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.
ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது
கடந்த காலத்தை நினைத்து அழுவது அல்லது மீண்டும் மீண்டும் வருந்துவது வீண் என்று சாணக்கியர் கூறியுள்ளார். மனிதர்கள் தவறு செய்வது இயல்பானதுதான், ஆனால் இந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது.
நம் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், அதை மீண்டும் செய்யக்கூடாது. நமது தவறுகளில் இருந்து பாடம் கற்று, எதிர்கால உத்திகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நிகழ்காலத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
எதிரியைத் தாக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியவை
சாணக்கியரின் கூற்றுப்படி, எதிரியை பலவீனமாகக் கருதுவது மிகப்பெரிய தவறாகும். அவரைத் தோற்கடிக்க, அவருடைய பலத்தைப் பற்றிய சரியான கணிப்பு இருப்பது மிகவும் முக்கியம், அப்போதுதான் நீங்கள் அவரைத் தாக்கி அவரை எதிர்த்து வெற்றிபெற முடியும்.
உங்கள் எதிரிகளைத் தாக்க நீங்கள் அவசரப்பட்டு விரைந்து சென்றால் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எதிரிகளை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுங்கள். ஒற்றுமைக்கு பெரும் பலம் உண்டு. கெட்ட நேரங்கள் வரும்போது, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். இது ஒரு நபரை பலவீனமடையாமல் பாதுகாக்கிறது.
நட்பு கொள்ள சிறந்தவர்கள்
சாணக்கியக் கொள்கைகளின்படி, உங்கள் முன்னால் உங்களைப் பற்றி நன்றாகப் பேசும் மற்றும் உங்கள் பின்னால் உங்களைப் பற்றி தவறாக நினைக்கும் ஒருவருடன் நட்பு கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் உண்மையான நண்பர்கள் எக்காரணம் கொண்டும் உங்களை மற்றவர்கள் முன் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உங்கள் நற்பெயரைக் கெடுக்கும் எதையும் செய்ய ஒருபோதும் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். தவறுதலாக உங்கள் நட்பை விட்டு வெளியேறுபவர்கள் பலர் உள்ளனர், ஆனால் உங்கள் தவறை உணர்ந்து அதைத் திருத்தி எப்போதும் உங்களுடன் இருப்பவர் உண்மையான நண்பர் என்று அழைக்கப்படுகிறார். அவர்களை உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் புறக்கணிக்கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார்.
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, மேற்கண்ட விஷயங்களை நமக்குள் சரியாக எடுத்துக் கொண்டால், வாழ்க்கையில் நாம் ஒருபோதும் தவறு செய்ய மாட்டோம். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதை விட நம்மால் எந்த தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications
