Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சாணக்கிய நீதி படி இந்த 3 விஷயங்களை பாலோ பண்ணுனா நாம வாழ்க்கையில் எந்த பாவமும் செய்ய மாட்டோமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் கொள்கைகள் ஞானத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. ஏனெனில், சாணக்கியரின் கொள்கைகள் நமக்கு அபரிமிதமான அறிவைத் தருகிறது. சாணக்கியரின் நெறிமுறைகளின் அடிப்படையில் அறிவைப் பெறுபவர் தனது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
மனித வாழ்க்கைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு உணர்த்தும் வகையில், சாணக்கியர் தனது மதிப்புமிக்க அறிவுரைகளை தன்னுடைய சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் தனது கொள்கைகளின் மூலம் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்களை வழிநடத்துகிறார்.

சாணக்கியர் கடுமையான சூழ்நிலைகளில் கூட தன்னுடைய இலக்கிலிருந்து பின்வாங்கவில்லை. மேலும் தனது ஞானம் மற்றும் அறிவினால் தன்னுடைய இலக்கை அடைந்தார். சாணக்கியரின் இந்த அறிவுரைகளை வாழ்க்கையில் பின்பற்றினால், நீங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் தவறு செய்ய மாட்டீர்கள், எந்த சூழ்நிலையும் தானாகவே உங்களுக்கு பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.
ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது
கடந்த காலத்தை நினைத்து அழுவது அல்லது மீண்டும் மீண்டும் வருந்துவது வீண் என்று சாணக்கியர் கூறியுள்ளார். மனிதர்கள் தவறு செய்வது இயல்பானதுதான், ஆனால் இந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது.
நம் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், அதை மீண்டும் செய்யக்கூடாது. நமது தவறுகளில் இருந்து பாடம் கற்று, எதிர்கால உத்திகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நிகழ்காலத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
எதிரியைத் தாக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியவை
சாணக்கியரின் கூற்றுப்படி, எதிரியை பலவீனமாகக் கருதுவது மிகப்பெரிய தவறாகும். அவரைத் தோற்கடிக்க, அவருடைய பலத்தைப் பற்றிய சரியான கணிப்பு இருப்பது மிகவும் முக்கியம், அப்போதுதான் நீங்கள் அவரைத் தாக்கி அவரை எதிர்த்து வெற்றிபெற முடியும்.
உங்கள் எதிரிகளைத் தாக்க நீங்கள் அவசரப்பட்டு விரைந்து சென்றால் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எதிரிகளை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுங்கள். ஒற்றுமைக்கு பெரும் பலம் உண்டு. கெட்ட நேரங்கள் வரும்போது, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். இது ஒரு நபரை பலவீனமடையாமல் பாதுகாக்கிறது.
நட்பு கொள்ள சிறந்தவர்கள்
சாணக்கியக் கொள்கைகளின்படி, உங்கள் முன்னால் உங்களைப் பற்றி நன்றாகப் பேசும் மற்றும் உங்கள் பின்னால் உங்களைப் பற்றி தவறாக நினைக்கும் ஒருவருடன் நட்பு கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் உண்மையான நண்பர்கள் எக்காரணம் கொண்டும் உங்களை மற்றவர்கள் முன் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உங்கள் நற்பெயரைக் கெடுக்கும் எதையும் செய்ய ஒருபோதும் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். தவறுதலாக உங்கள் நட்பை விட்டு வெளியேறுபவர்கள் பலர் உள்ளனர், ஆனால் உங்கள் தவறை உணர்ந்து அதைத் திருத்தி எப்போதும் உங்களுடன் இருப்பவர் உண்மையான நண்பர் என்று அழைக்கப்படுகிறார். அவர்களை உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் புறக்கணிக்கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார்.
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, மேற்கண்ட விஷயங்களை நமக்குள் சரியாக எடுத்துக் கொண்டால், வாழ்க்கையில் நாம் ஒருபோதும் தவறு செய்ய மாட்டோம். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதை விட நம்மால் எந்த தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications












