Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா இந்த 3 விஷயங்களை கண்டிப்பா பாலோ பண்ணணுமாம்...!
Chanakya Niti: இன்றைய உலகம் நாம் நினைப்பதை விட மிகவும் மோசமானதாக உள்ளது. வாழ்க்கையில் வெற்றிபெற எந்த எல்லைக்கும் செல்லும் கொடூர மனிதர்கள் நடுவில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற நாம் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் என்ன செய்ய வேண்டும், எப்படி தொடங்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் இல்லாதது பலரின் வெற்றிக்குத் தடையாக இருக்கிறது.
கடின உழைப்பு வெற்றிக்கு அடிப்படையானதாக இருந்தாலும், கடினமாக உழைத்தும் பலர் தோல்வியை சந்திக்க நேரிடும். ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்வது, எதில் கவனம் செலுத்துவது, சோர்வடையாமல் எப்படி அனைத்தையும் எதிர்கொள்வது என்பது பலரும் அறியாத விஷயமாகும். சாணக்கிய நீதியில் சாணக்கியர் இது போன்ற விஷயங்களைத் தெளிவாகக் கூறியுள்ளார். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்
எந்தவொரு விஷயத்தையும் சாதிக்க சுயக்கட்டுப்பாடு எப்போதும் அவசியம். இது உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். சலனங்களுக்கு இடமளிக்காமல் எல்லாவற்றையும் செய்து நீண்ட கால வெற்றியை இலக்காகக் கொள்வது அவசியம். பெரும்பாலும் இதுவே உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.
தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இந்த திறமைதான் ஒரு மனிதனை வெற்றியாளராக்குகிறது என்கிறார் சாணக்கியர். நீண்ட கால இலக்குகளை திட்டமிட்டு முன்னோக்கி நகர்த்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டத்தை நம்பக்கூடாது
அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பினால் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. சாணக்கிய நீதி படி, இது பெரும்பாலும் தோல்வியையே தருகிறது. அதிர்ஷ்டம் உங்கள் வாழ்க்கையில் கூடுதல் அம்சம் மட்டுமே தவிர அது மட்டுமே வெற்றியின் ஆதாரமாக இருக்காது.
எந்தவொரு நபரும் வெற்றியை அடைய அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்கக்கூடாது. அதுமட்டுமின்றி எந்த சூழ்நிலையிலும் கடினமாக உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் அதிக முயற்சியை மேற்கொள்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத பலன்களைக் கொண்டு வரலாம். இதன் மூலம் வாழ்க்கையை மாற்றும் பலன்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
பலவீனங்களை ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது
உங்கள் பலவீனங்கள் என்னவென்று உங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும். உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் கூட அவற்றில் எதையும் ஒருபோதும் வெளிப்படுத்த வேண்டாம். இது உங்கள் வெற்றிக்கான பாதையைத் தடுக்கிறது. உங்கள் பலவீனங்களை வெளிப்படுத்துவது உங்கள் வாழ்க்கையை மிகவும் கடினமாக்குகின்றது. இதனால் உங்கள் எதிரிகள் உங்களை எளிதில் வீழ்த்தலாம். இதுபோன்ற விஷயங்கள் மற்றவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளக் கூட வழிவகுக்கும். எனவே எந்த சூழ்நிலையிலும் உங்கள் பலவீனம் பற்றி மற்றவர்களிடம் கூற வேண்டாம்.



Click it and Unblock the Notifications
