Latest Updates
-
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்களை பாலோ பண்ணுபவர்கள் வாழ்க்கையில் தோல்வி என்பதே இருக்காதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் சிறந்த அறிஞராக அறியப்படுகிறார். அவரது கொள்கைகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலம். அவரது கொள்கைகள் மூலம் ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் பெற முடியும். சாணக்கியரின் கொள்கைகள் மனிதன் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற உதவுகின்றன.
திருமண வாழ்க்கையோ, வேலையோ, அரசியலோ, சமூக வாழ்க்கையோ எதுவாக இருந்தாலும் மனித வாழ்க்கை தொடர்பான அனைத்தையும் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். சாணக்கியரின் கொள்கைகள் சிறந்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அவற்றைப் பின்பற்றுபவர்கள் வாழ்வில் ஒருபோதும் கலக்கமடைய மாட்டார்கள்.

மற்றவர்களை வெற்றி பெற வைப்பதில்தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது என்று சாணக்கியர் சாணக்கிய நீதியில் கூறுகிறார், மேலும் செல்வத்தின் தெய்வமான லட்சுமி அத்தகையவர்களிடம் எப்போதும் மகிழ்ச்சியடைகிறார். மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுபவர் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, தனது இலக்கை அடைய முடியாது.
மற்றவர்களின் தவறு
சாணக்கியரின் கூற்றுப்படி ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால் வாழ்க்கையில் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களின் சில தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வதன் மூலம் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். உங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற தவறை செய்யாமல் இருந்தால், நீங்கள் நிச்சயமாக உயரத்தை எட்டலாம்.
மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
சாணக்கிய நீதியின் படி, ஒரு நபர் மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால், அவர் தனது சொந்த வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார். எனவே நீங்கள் வாழ்க்கையில் விரைவான வெற்றியைப் பெற விரும்பினால், மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். பிறர் செய்யும் தவறுகளை புரிந்து கொண்டு அந்த தவறை உங்கள் வாழ்வில் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
தகுதியானவர்களுடன் நட்பு
உங்களுக்கு நிகரான ஒருவருடன் நட்பு எப்போதும் இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியின் படி, உங்களை விடப் புகழ் பெற்றவர்களிடமோ அல்லது உங்களை விடதகுதி குறைந்தவர்களிடமோ நட்பு வைத்துக் கொண்டால், அந்த நட்பு நீண்ட காலம் நீடிக்காது. பாம்பு, ஆடு, புலி ஆகியவை ஒன்றுக்கொன்று நட்பாக இருக்க முடியாது.
அறிவை வளர்த்துக் கொள்வது
அறிவு என்பது காமதேனு பசுவைப் போல மனிதனுக்கு எல்லாப் பருவங்களிலும் அமிர்தத்தை அளிக்கும் எனவே எங்கு சென்றாலும் அறிவைப் பெற முயற்சிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். அறிவு ஒருபோதும் வீணாகாது. இதனை சாணக்கிய நீதியில் 'ஸ்வதேசே பூஜ்யதே ராஜா விதான்ஸர்வத்ர பூஜ்யதே' என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது அரசனின் புகழ் அவருடைய அரசாட்சியில் மட்டும்தான் நிலைத்திருக்கும். ஆனால் கற்றவர்கள் எக்காலத்திலும் வணங்கப்படுகிறார்கள். அறிவு என்பது நெருக்கடி காலங்களில் ஒரு நபரின் மிகப்பெரிய பலமாக மாறும்.
பணத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது
பணத்தை ஒருபோதும் அலட்சியமாக பயன்படுத்தாதீர்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், ஒரு நபர் அழிவின் விளிம்பிற்கு செல்வார். அத்தகைய சூழ்நிலையில் ஒவ்வொரு நபரும் பணத்தை புத்திசாலித்தனமாக செலவிட வேண்டும். மேலும், உங்கள் வருமானம் எங்கு, எந்த நோக்கத்திற்காக செலவிடப்படுகிறது என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குருவின் கட்டளையை மீறக்கூடாது
குருவின் கட்டளைகளை நீங்கள் ஒருபோதும் மீறக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். ஆச்சார்யர்கள், குருக்கள் சொல்வதைக் கேட்காவிட்டால், உங்கள் வாழ்க்கையே சுபிட்சமாகிவிடும். அவர்களை மதிக்காதவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி, அதிகப்படியான உணவை உட்கொள்வதும் வறுமைக்கு வழிவகுக்கும்.
அதிருப்தி கொள்ளக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, அழகு, உணவு மற்றும் பணத்தைப் பற்றி நினைத்து வாழ்க்கையில் ஒருபோதும் அதிருப்தி அடைய வேண்டாம். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கு முன் எது நல்லது எது கெட்டது என்று பார்க்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் சந்திக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
