Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
சாணக்கிய நீதி படி கணவன்-மனைவி இடையே பிரிவு ஏற்பட இந்த 5 விஷயங்கள்தான் காரணமாக இருக்குமாம்..உடனே மாத்திக்கோங்க!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த புத்திசாலி மற்றும் திறமையான அரசியல்வாதியாவார். தனது சாணக்கிய நீதி மூலம், ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிகளை சாணக்கியர் பகிர்ந்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, வணிகம், உறவுகள், நட்பு மற்றும் எதிரிகள் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்த தனது கண்ணோட்டத்தை சாணக்கிய நீதியில் பகிர்ந்துள்ளார்.
சாணக்கியரின் கொள்கைகளை பின்பற்றுவது சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் அதை பின்பற்றினால் வாழ்க்கையில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன் மனைவிக்கு இடையிலான உறவைப் பற்றி ஆச்சார்ய சாணக்கியர் சில விஷயங்களைச் சொல்லியுள்ளார்.

இந்த விஷயங்களை பின்பற்றினால் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். அதன்படி தம்பதிகள் தங்கள் உறவில் சில விஷயங்களை பின்பற்றுவது அவர்களின் திருமணத்தை அழித்துவிடும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கோபம்
கோபம் பொதுவாகவே அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் குணம் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. இது கணவன் மனைவி இடையேயான உறவிலும் தீங்கு விளைவிக்கும். ஒரு மனைவி அல்லது கணவர் கோபமாக இருக்கும்போது, அவர்களால் எது நல்லது எது கெட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறிய பிரச்சினைகள் கூட உங்கள் திருமண வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாக மாறி உறவை முறிக்க வழிவகுக்கும்.
பரஸ்பர மரியாதை இல்லாமல் போவது
திருமண உறவு மட்டுமின்றி அனைத்து உறவுகளிலுமே பரஸ்பர மரியாதை என்பது மிகவும் அவசியமானதாகும். சாணக்கிய நீதியின் படி, ஒருவருக்கொருவர் மரியாதை இல்லாமல் கணவன் மனைவி இடையேயான உறவு முழுமையடையாது. நல்ல உறவைப் பேணுவதற்கு தம்பதிகள் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் திருமண வாழ்க்கை விரைவில் பிரிந்துவிடும்.
பேசிக்கொள்ளாமல் இருப்பது
கணவன் மனைவி இருவரும் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு, அவர்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ வேண்டும். நல்ல உறவைப் பேணுவதற்கு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளும் முக்கியம். உங்கள் உறவில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளாமல் உங்கள் மனதில் எதையாவது மறைத்து வைத்திருந்தால் தவறான புரிதல்கள் அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் பேசவில்லை என்றால், அவர்கள் வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகள் வளரும். அதன் காரணமாக, அவர்களின் உறவு படிப்படியாக பலவீனமடையத் தொடங்கும்.
உண்மைகளை மறைப்பது
கணவன் மனைவி இடையேயான உறவு மிகவும் நுணுக்கமானது என்று கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து ஒருபோதும் உண்மையை மறைக்கக் கூடாது. குறிப்பாக பொய் சொல்லக்கூடாது. ஏனென்றால், நீங்கள் பொய் சொன்னதை உங்கள் துணைக்கு தெரிய வரும்போது, அவர்கள் உங்கள் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கி, உங்கள் உறவில் மனக்கசப்பு அதிகரிக்கும். எனவே, திருமண உறவில் உங்கள் துணையிடம் ஒருபோதும் பொய் சொல்லாதீர்கள்.
ஒத்துழைப்பு இல்லாமை
கணவனும் மனைவியும் அனைத்துப் பணிகளிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும். பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலைகளை பெண்களிடம் மட்டுமே ஒப்படைக்கிறார்கள். இது முதலில் நன்றாகத் தோன்றலாம், ஆனால் பின்னர் அதுவே மோதலை ஏற்படுத்தலாம். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம். இல்லெயெனில் அவர்களின் உறவு விரைவில் முறிந்து விடும்.



Click it and Unblock the Notifications
