Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி உங்க வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த 4 விஷயங்களில் தீர்வு கிடைக்கும்...!
Chanakya Niti: சாணக்கியர் இந்திய வரலாற்றில் வாழ்ந்த ஒரு அசாதாரண ஞானியாவார். ஒரு திறமையான அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், சமூகவியலாளர் என்பதையும் தாண்டி அவர் வாழக்கைக் குறித்த அனைத்து பாடங்களையும் அறிந்தவராக இருந்தார். அவர் தனது வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்தித்தார்.
ஆனால் அவர் தனது போராட்டத்தை தனது பலமாக மாற்றி, காலப்போக்கில் தன்னை வலுப்படுத்திக் கொண்டார். ஆச்சார்யா தனது வாழ்க்கையில் பல நூல்களை இயற்றினார். அந்தப் படைப்புகளில் எழுதப்பட்ட வார்த்தைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்துபவையாக இருக்கின்றன.

இன்றைய காலகட்டத்திலும் ஆச்சார்யா சிறந்த வாழ்க்கைப் பயிற்சியாளராகக் காணப்படுவதற்கு இதுவே காரணம். உங்கள் வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது சில காரணங்களால் சரி, தவறு என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் போனாலோ, அந்த தருணத்தில் சாணக்கிய நீதி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
துக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது
பகிர்வதால் வலி குறைகிறது என்பதை பொதுவாக மக்கள் நம்புகிறார்கள். ஆனால் ஆச்சார்ய சாணக்கியர் துக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கூறுகிறார், ஏனென்றால் உங்கள் துன்பத்தை யாராலும் குறைக்க முடியாது.
மாறாக, அவர்கள் சந்தர்ப்பம் வரும்போது உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் அல்லது கேலி செய்வார்கள். பெரும்பாலான மக்கள் அப்போதைக்கு மட்டும் உங்களுக்கு ஆறுதல் கூறுவார்கள், ஆனால் எந்த நேரத்திலும் உங்கள் துக்கம் குறையாது. உங்கள் மீதான உங்கள் துன்பத்தின் தாக்கம் மற்றவர்களிடம் எப்போதும் இருக்காது. எனவே உங்கள் துன்பத்தை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.
கணவன்-மனைவி அன்புடன் இருக்க வேண்டும்
கணவன்-மனைவி உறவு எப்போதும் அன்பு நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இருவரும் ஒருவருக்கொருவர் முழு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் உங்கள் வாழ்க்கை துணை எப்போதும் கோபமாக இருந்தால், சரியாக நடந்து கொள்ளாமல் இருந்தால், வெறுப்பு உணர்வு அவரது முகத்தில் தெரிந்தால், அத்தகைய வாழ்க்கை துணை எப்போதும் குடும்பத்தில் பிரிவு, துக்கம், துயரம் ஆகியவற்றிற்கு காரணமாகிவிடுவார். அவருடன் வாழ்பவரின் முன்னேற்றம் நின்றுவிடுகிறது. அத்தகைய உறவில் இருந்து விலகி இருப்பது நல்லது.
ரகசியங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது
ஆச்சார்யா சாணக்கியர், தங்கள் குடும்பத்தைப் பற்றிய உண்மைகளையும், ரகசியங்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார். உங்கள் குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவது உண்மையில் உங்களுக்கு ஆபத்தானதாக மாறும். வாய்ப்பு கிடைக்கும்போது, வெளியாட்கள் இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். இதனால் உங்கள் குடும்பத்தின் நிம்மதி பறிப்போகும்.
சரியான வேலையை செய்ய வேண்டும்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் சமூகத்தில் மரியாதையை பெற்றுத்தரும் வேலையைச் செய்ய வேண்டும், இது அவருக்கு சமூகத்தில் மரியாதையையும் மற்றும் புகழையும் பெற்றுத்தரும். மரியாதை என்பது ஒருவரின் அடையாளம் போன்றது, அதனை நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் மட்டுமே பெற முடியும். அதை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
