Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
சாணக்கிய நீதி படி உங்க வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த 4 விஷயங்களில் தீர்வு கிடைக்கும்...!
Chanakya Niti: சாணக்கியர் இந்திய வரலாற்றில் வாழ்ந்த ஒரு அசாதாரண ஞானியாவார். ஒரு திறமையான அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், சமூகவியலாளர் என்பதையும் தாண்டி அவர் வாழக்கைக் குறித்த அனைத்து பாடங்களையும் அறிந்தவராக இருந்தார். அவர் தனது வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்தித்தார்.
ஆனால் அவர் தனது போராட்டத்தை தனது பலமாக மாற்றி, காலப்போக்கில் தன்னை வலுப்படுத்திக் கொண்டார். ஆச்சார்யா தனது வாழ்க்கையில் பல நூல்களை இயற்றினார். அந்தப் படைப்புகளில் எழுதப்பட்ட வார்த்தைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்துபவையாக இருக்கின்றன.

இன்றைய காலகட்டத்திலும் ஆச்சார்யா சிறந்த வாழ்க்கைப் பயிற்சியாளராகக் காணப்படுவதற்கு இதுவே காரணம். உங்கள் வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது சில காரணங்களால் சரி, தவறு என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் போனாலோ, அந்த தருணத்தில் சாணக்கிய நீதி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
துக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது
பகிர்வதால் வலி குறைகிறது என்பதை பொதுவாக மக்கள் நம்புகிறார்கள். ஆனால் ஆச்சார்ய சாணக்கியர் துக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கூறுகிறார், ஏனென்றால் உங்கள் துன்பத்தை யாராலும் குறைக்க முடியாது.
மாறாக, அவர்கள் சந்தர்ப்பம் வரும்போது உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் அல்லது கேலி செய்வார்கள். பெரும்பாலான மக்கள் அப்போதைக்கு மட்டும் உங்களுக்கு ஆறுதல் கூறுவார்கள், ஆனால் எந்த நேரத்திலும் உங்கள் துக்கம் குறையாது. உங்கள் மீதான உங்கள் துன்பத்தின் தாக்கம் மற்றவர்களிடம் எப்போதும் இருக்காது. எனவே உங்கள் துன்பத்தை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.
கணவன்-மனைவி அன்புடன் இருக்க வேண்டும்
கணவன்-மனைவி உறவு எப்போதும் அன்பு நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இருவரும் ஒருவருக்கொருவர் முழு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் உங்கள் வாழ்க்கை துணை எப்போதும் கோபமாக இருந்தால், சரியாக நடந்து கொள்ளாமல் இருந்தால், வெறுப்பு உணர்வு அவரது முகத்தில் தெரிந்தால், அத்தகைய வாழ்க்கை துணை எப்போதும் குடும்பத்தில் பிரிவு, துக்கம், துயரம் ஆகியவற்றிற்கு காரணமாகிவிடுவார். அவருடன் வாழ்பவரின் முன்னேற்றம் நின்றுவிடுகிறது. அத்தகைய உறவில் இருந்து விலகி இருப்பது நல்லது.
ரகசியங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது
ஆச்சார்யா சாணக்கியர், தங்கள் குடும்பத்தைப் பற்றிய உண்மைகளையும், ரகசியங்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார். உங்கள் குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவது உண்மையில் உங்களுக்கு ஆபத்தானதாக மாறும். வாய்ப்பு கிடைக்கும்போது, வெளியாட்கள் இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். இதனால் உங்கள் குடும்பத்தின் நிம்மதி பறிப்போகும்.
சரியான வேலையை செய்ய வேண்டும்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் சமூகத்தில் மரியாதையை பெற்றுத்தரும் வேலையைச் செய்ய வேண்டும், இது அவருக்கு சமூகத்தில் மரியாதையையும் மற்றும் புகழையும் பெற்றுத்தரும். மரியாதை என்பது ஒருவரின் அடையாளம் போன்றது, அதனை நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் மட்டுமே பெற முடியும். அதை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
