Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி திருமணத்திற்கு முன் தங்கள் வாழ்க்கைத்துணை பற்றிய இந்த 3 விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கணுமாம்!
Chanakya Niti: திருமண உறவு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான உறவாகும். கணவன்-மனைவி இடையேயான உறவு மிகவும் உணர்ச்சிகரமானது. இந்த உறவின் அடித்தளம் அசைந்து விட்டால், அதில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்காது. திருமண வாழ்வை அழகாக்கவும், அர்த்தமுள்ளதாக மாற்றவும் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நம்புவது முக்கியம். தம்பதிகளிடையே பரஸ்பர நம்பிக்கை பலவீனமாக இருந்தால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை உருவாக்க முடியாது.
கணவன்-மனைவி இடையே அன்பு மற்றும் நம்பிக்கையை உறுதியாகவும், நிலையாகவும் வைத்திருக்க சாணக்கியர் சில ஆலோசனைகளை வழங்குகிறார். சாணக்கிய நீதியில், திருமணத்திற்கு முன் ஒருவர் தனக்கு வரவிருக்கும் மனைவியிடம் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால கணவன் அல்லது மனைவியிடம் இந்தக் கேள்விகளைக் கேட்பதன் மூலம், நீங்கள் திருமணத்தை நோக்கி தைரியமாக ஒரு அடி எடுத்து வைக்கலாம். இந்த மூன்று கேள்விகளுக்கும் திருப்திகரமாக பதில் கிடைத்த பின்னரே திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் இல்லையெனில் உறவு தொடங்குவதற்கு முன்பே சிதைந்துவிடும்.
வாழ்க்கைத்துணையின் வயதை உறுதிப்படுத்த வேண்டும்
சாணக்கிய நீதியின் படி, திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால வாழ்க்கை துணையின் வயதை அவசியம் அறிந்து கொள்ளுங்கள். கணவன்-மனைவி இருவரும் மற்றவர்களின் வயதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். கணவன் மனைவி உறவில் வயது வித்தியாசம் அதிகம் இருந்தால், அந்த உறவில் புரிதல் குறைபாடு இருக்கலாம்.
கணவன்-மனைவி இடையே புரிதல் சரியாக அமையவில்லை என்றால், அது திருமணத்தில் விரிசலையும் ஏற்படுத்தலாம். அதனால்தான், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன்-மனைவி இடையே வயது வித்தியாசம் இருக்கக்கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
ஆரோக்கியத்தை பற்றி அறிந்திருக்க வேண்டும்
திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். திருமணத்திற்கு முன் அவர்களுக்கு கடுமையான நோய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன், துணைக்கு உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இல்லையெனில், நீங்கள் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், திருமணத்திற்குப் பிறகும் உங்கள் துணை நோய்வாய்ப்பட்டிருக்கலாம். அந்த நேரத்தில் அவர்களுடன் இருப்பது உங்கள் கடமை. அந்த நேரத்தில் அவர்களை விட்டுவிடக்கூடாது. ஆனால் நோய்வாய்ப்பட்ட ஒருவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது எதிர்காலத்தில் உங்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அந்த தவறை செய்யக்கூடாது.
கடந்த கால உறவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைக்கு கடந்த கால காதல் உறவு இருந்ததா என்பதை அறிந்து கொள்வது அவசியம். இதற்கு முன் ஏதேனும் உறவு இருந்தால் அந்த நபரை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுப்பது கொஞ்சம் சிக்கலானது.
கடந்த காலத்தை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க அவர்கள் ஒப்புக்கொண்டால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பு அவர்கள் எந்த மாதிரியான உறவு வைத்திருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். இதை அறியாதது எதிர்காலத்தில் உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications
