சாணக்கிய நீதி படி இந்த 2 விஷயங்களை கற்பு போல பாதுகாக்கணுமாம்... இல்லனா நஷ்டம் உங்களுக்குத்தான்...!

Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் மனித வாழ்க்கை தொடர்பான அனைத்து விஷயத்தையும் தனது சாணக்கிய நீதியில் பேச முயன்றுள்ளார். இந்த இரண்டு விஷயங்களும் நம் வாழ்வில் மிக முக்கியமானவை என்று சாணக்கியர் கூறினார். அந்த விஷயங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சாணக்கியர் இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார், அவருடைய போதனைகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளன. சாணக்கியர் எதைச் சொன்னாலும் அல்லது எந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னாலும் அதைக் கவனமாக ஆராய்வார் என்பது அனைவரும் அறிந்ததே.

Chanakya Niti: Things People Should Protect Like a soldier in Tamil

சாணக்கியர் தனது இளம் பருவத்தில் பல போராட்டங்களை சந்தித்தார், ஆனால் ஒருபோதும் விரக்தி அடையவில்லை, விடாமுயற்சியுடன் போராடி இறுதியில் வெற்றியை அடைந்தார். போராட்டங்களுக்கு மத்தியிலும் தனித்து விளங்கினார்.

ஆச்சார்யா சாணக்கியர் ஒவ்வொரு சூழ்நிலையையும் தனது பலமாக மாற்றிக் கொண்டார் மற்றும் கடின உழைப்பு, பொறுமை மற்றும் சரியான எண்ணங்களுடன் அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொண்டார். அதனால்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், சாணக்கியர் இன்னும் ஒரு திறமையான பொருளாதார நிபுணர், இராஜதந்திரி, அரசியல்வாதி மற்றும் குருவாக மதிக்கப்படுகிறார்.

சாணக்கியர் வாழ்க்கையில் எதைக் கற்றுக்கொண்டாரோ, அந்த அனுபவங்களை மக்களின் நலனுக்காகத் தனது படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கிய நீதியில், ஆச்சார்யா வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றி பேச முயற்சித்துள்ளார்.

இந்த பதிவில் நம் வாழ்க்கையில் சிறப்பு முக்கியத்துவம் அளித்து ஒரு போர்வீரன் போல பாதுகாக்க வேண்டிய இரண்டு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் அவை இரண்டும் ஏன் முக்கியம் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

நமது ஆரோக்கியம் அனைத்தையும் விட முக்கியமானது

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில், ஒரு சிப்பாய் தனது நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது போல், ஒரு மனிதன் தனது உடலை சிறப்பு கவனம் செலுத்தி அதை நோயின்றி வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த நோய் எதிரிகள் உங்கள் உடலை கைப்பற்றிவிட்டால், உங்களின் ஆரோக்கியம் அவற்றின் கைகளுக்கு சென்று விடும். ஆரோக்கியமில்லாத மனிதன் அரைமனிதனைப் போன்றவர் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே உங்கள் உணவையும், வழக்கத்தையும் சீரானதாக வைத்து, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.

பணத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும்

மற்ற மனிதர்களைப் போலவே சாணக்கியரும் பணத்தை மிக முக்கியமாகக் கருதினார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பணத்தைப் பற்றி நிறைய விஷயங்களை கூறியுள்ளார், நீங்கள் உங்கள் சொந்த பகுதியை விட்டு வெளியேறும்போது, உங்களிடம் இருக்கும் செல்வம் உங்களுடைய உண்மையான நண்பரைப் போல செயல்படுகிறது.

பணத்தின் உதவியுடன் நீங்கள் வளமான வாழ்க்கையை உருவாக்க முடியும், எனவே நீங்கள் உங்கள் பணத்தை எந்த காரணமும் கேட்காமல் சேமிக்க வேண்டும்,

மேலும் நீங்கள் சம்பாதித்த பணத்தை ஒருங்கிணைத்து, பணம் அதிகமாக இருந்தால் முதலீடு செய்வதன் மூலம் அதை அதிகரிக்கச் செய்யுங்கள் என்கிறார் சாணக்கியர்.

இந்த இரண்டு விஷயங்களையும் யார் புறக்கணிக்கிறார்களோ அல்லது மறுக்கிறார்களோ, அவர்கள் தங்களுடை மரணம் வரை துன்பப்பட வேண்டும். மேலும் குழப்பத்தை சந்திக்க நேரிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

Story first published: Friday, November 10, 2023, 6:10 [IST]
Desktop Bottom Promotion