Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சாணக்கிய நீதி படி உங்க குழந்தைகளை இந்த 2 விஷயங்களை மட்டும் கத்துக்க விடாதீங்க... அதான் அவங்களுக்கு நல்லது...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் தனது போதனைகளில் குழந்தைகள் தொடர்பான சில முக்கியமான விஷயங்களையும் கொள்கைகளையும் குறிப்பிட்டுள்ளார், அவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், குழந்தை நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.
அவரது ராஜதந்திரத்தின் காரணமாக, ஆச்சார்யா சாணக்யா நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவராக இருந்தார். வாழ்க்கையில் வெற்றி பெற சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளை பெரும்பாலான மக்கள் பின்பற்றுகிறார்கள்.

ஆச்சார்ய சாணக்கியரின் இந்தக் கொள்கைகள் பல கடினமான தருணங்களில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் முக்கியமான சில கொள்கைகளையும், அறிவுரைகளையும் கொடுத்துள்ளார்.
சாணக்கியரின் கொள்கையின்படி, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாகவும், வெற்றிகரமானதாகவும் இருக்க வேண்டுமெனில், அவர்களை சில விஷயங்களிலிருந்து முற்றிலும் விலக்கி வைத்திருக்க வேண்டும்.
சாணக்கியர் குழந்தைகளைப் பற்றி கூறுகையில், குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே வளர்க்கப்படும் விதம்தான், அவர்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்டவர்களாக வருவார்கள் என்பதை நிர்ணயிக்கிறது. எனவேதான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களைத் தன்னம்பிக்கையுடன் வளர்க்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, கடமைகளைச் செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்; அப்போதுதான் அவர்கள் தகுதியான குழந்தைகளாக மாறுவார்கள். அதற்கு அவர்களை இரண்டு விஷயங்களில் இருந்து விலக்கி வைப்பது மிகவும் அவசியம்
உங்கள் குழந்தையை எப்போதும் பொய் மற்றும் சோம்பலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குழந்தைகளுக்கு எப்போதும் உண்மையை பேச கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு பெற்றோர்கள் எப்போதும் உண்மையைச் சொல்வது அவசியம், ஏனென்றால் பெற்றோர்கள் குழந்தைகள் முன் பொய் சொன்னால், குழந்தைகளும் பொய் பேச கற்றுக் கொள்வார்கள். இதனால், அவர்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சாணக்கிய நீதியின் படி, பொய்யை உண்மை என்று நிரூபிக்க, ஒருவர் நூறு முறை பொய்யை சொல்ல வேண்டியிருக்கும். எனவே ஆரம்பத்திலிருந்தே உங்கள் குழந்தைகளை உண்மையைப் பேச ஊக்குவிக்கவும். எல்லா வகையான தவறான செயல்களும் இந்த தவறான பழக்கத்தில் இருந்துதான் தொடங்குகின்றன.
சோம்பேறித்தனம் வெற்றிப் பாதையில் செல்வதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது, இதன் காரணமாக, பல முக்கியமான பணிகள் தோல்வியடைகின்றன. எனவே, உங்கள் குழந்தையை சோம்பேறியாக வளர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். இதற்காக, ஆரம்பத்தில் இருந்தே கடினமாக உழைக்க கற்றுக்கொடுங்கள்.
சோம்பேறித்தனம் மனிதனின் மிகப்பெரிய எதிரி மற்றும் வெற்றிக்கு தடையாக உள்ளது. உங்கள் குழந்தைக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுமெனில், கடினமாக உழைக்க அவர்களை ஊக்குவிக்கவும். அதன்மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் வெற்றி பெற முடியும்.



Click it and Unblock the Notifications













