Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 4 மனிதர்கள் உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவார்களாம்... இவங்ககிட்டேயே போகாதீங்க...!
Chanakya Niti: கௌடில்யர் என்றும் அழைக்கப்படும் சாணக்கியர் ஒரு பண்டைய இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். வாழ்க்கை மற்றும் வெற்றி பற்றிய அவரது மதிப்புமிக்க கொள்கைகள், வளமான வாழ்க்கை வாழ்வதற்கான நடைமுறை வழிகாட்டுதலை வழங்கும் அறிவுரைகளின் தொகுப்பான சாணக்கிய நீதியில் தொகுக்கப்பட்டுள்ளன.
சாணக்கியரின் அறிவுரைகளில் முக்கியமானது, உங்கள் நல்வாழ்வை அச்சுறுத்தும் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது பற்றியதாகும். சாணக்கிய நீதியில் மூன்று விஷயங்களைப் பற்றி சாணக்கியர் எச்சரிக்கிறார். இந்த விஷயங்களிடம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் இது உங்கள் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.

சாணக்கியர் எச்சரித்துள்ள இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம், ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்த்து, வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழலாம். ஒருவேளை நீங்கள் இவர்களுடனான பழக்கத்தை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையில் பல தோல்விகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக நேரிடும். இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நெருங்கவே கூட நபர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
நீர் மற்றும் நெருப்பு
சாணக்கியர் நெருப்பையும், தண்ணீரையும் கவனக்குறைவாக கையாளக் கூடாது என்று எச்சரிக்கிறார், ஏனெனில் அவை சரியாக கையாளப்படாவிட்டால் அவை உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். நெருப்பும் நீரும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத கூறுகள். ஆனால் அவை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் கட்டுப்பாடற்ற சக்திகளாக எளிதில் மாறக்கூடும்.
எனவே அவற்றை சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டுமென்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். உங்கள் திறமைக்கு ஏற்ப நெருப்புடனும் தண்ணீருடனும் விளையாட வேண்டும், இல்லையெனில் அது கடுமையான காயம் அல்லது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும்.
ஆபத்தான விலங்குகள்
சிங்கம், கரடி மற்றும் புலி போன்ற ஆபத்தான விலங்குகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். ஏனெனில் அவற்றின் சுபாவம் ஆக்ரோஷமானது மற்றும் ஆபத்தானது, அவை ஒரு உங்களிடம் நட்பாக பழகினாலும், அவை கோபமாகவோ அல்லது பசியாகவோ இருக்கும்போது நம்மைத் தாக்கத் தொடங்கலாம். எனவே இந்த விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருப்பது நல்லது.
ஆபத்தான நண்பர்கள்
கெட்ட சகவாசம் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு சாணக்கியர் எச்சரிக்கிறார். மோசமான நண்பர்களுடன் பழகுவது உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிடும். மேலும், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக பழக வேண்டும். ஏனென்றால் கோபத்தில் எந்த நேரத்திலும் அவர்கள் உங்களைத் தாக்கி உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
சோம்பேறிகள்
சோம்பேறிகளுடன் நெருக்கமாக பழகுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் சோம்பேறிகள் எந்த வேலையையும் சரியாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைவது என்பது மிகவும் கடினமாகும். அவர்களுடன் நீங்கள் பழகும் போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களையும் அவர்களைப் போல மாற்றுவார்கள். இதனால் நீங்கள் வாழ்க்கையில் இலக்கை விட்டு விலகிச்செல்ல அதிக வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications












