Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களில் இருந்து விலகி இருப்பவர்கள் வாழ்க்கையில் உச்சத்தை அடைவார்களாம்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் தவிர்க்க முடியாத மேதைகளில் ஒருவர் சாணக்கியர். சிறந்த இராஜதந்திரியான சாணக்கியர் தன்னுடைய சாணக்கிய நீதி மூலம் வாழ்க்கையில் வெற்றிக்கான பல வழிகளைக் கூறியுள்ளார். இன்பமும், துன்பமும் வாழ்வின் அங்கம். துக்கம் இருந்தால் மகிழ்ச்சியும் இருக்கும்.
மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பற்றிய தனது எண்ணங்களை சாணக்கியர் விரிவாகப் பகிர்ந்துள்ளார், ஆனால் சில துன்பங்கள் ஒரு நபரை வெறுமையாக்கி அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் வாழ செய்கிறது.

சாணக்கிய நீதி ஒருவரை வாழ்க்கையில் இலக்கை அடைய தூண்டுகிறது. இன்றும் மக்கள் சாணக்கிய நீதியை படிக்கும் காரணம் இதுதான். ஆச்சார்யா சாணக்யாவின் கூற்றுப்படி, ஒரு நபர் வாழ்க்கையில் வெற்றியை அடைய விரும்பினால், இந்த விஷயங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது.
கடினமாக உழைத்து முன்னேற வேண்டும்
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, நீங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய விரும்பினால், நீங்கள் கடின உழைப்புக்கு ஒருபோதும் பயப்படக்கூடாது. கடின உழைப்புதான் அனைத்து வெற்றிக்கும் அடிப்படை என்று சாணக்கியர் கூறுகிறார்.
கடினமாக உழைப்பதைத் தவிர்ப்பவர்களோ அல்லது அதை விட்டு ஓடுபவர்களோ, அவர்களுக்கு வெற்றியின் மகிழ்ச்சி எப்போதும் கிடைக்காது. அதனால் தான் வெற்றி பெற வேண்டும் என்றால் கடின உழைப்பின் பாதையில் செல்ல வேண்டும்.
வெற்றியின் ரகசியம் அறிவில் மறைந்துள்ளது
அறிவு இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை என்கிறார் சாணக்கியர். தங்கள் இலக்கை அடைய தொடர்ந்து அறிவைப் பெறத் தயாராக இருப்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயமாக வெற்றியைப் பெறுவார்கள். அதனால்தான் அறிவைப் பெற எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அறிவு நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் பயன்படுத்த வேண்டும்.
தீமைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி தீமைகள் எல்லா வகையிலும் வெற்றிக்குத் தடையாக இருக்கிறது என்று சாணக்கியர் கூறுகிறார். தீமையான செயல்கள் ஒரு நபரின் திறமையை அழிக்கின்றன. அப்படிப்பட்டவர்கள் திறமையானவராக இருந்தாலும் அவர்களால் தங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. தங்களின் குறைகளை சரியான நேரத்தில் சரிசெய்யாதவர்கள் பிற்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் வெற்றிக்காகப் போராட வேண்டியிருக்கும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அத்தகையவர்களுக்கு எப்போதும் வெற்றி மற்றும் மரியாதைக் கிடைக்காது. ஒருவர் எப்போதும் பணிவாக இருக்க வேண்டும்.
ஒருபோதும் அதிகாரத்தின் காரணமாக தவறான செயல்களைச் செய்யக்கூடாது. இதை செய்பவர்கள் மீது லட்சுமி தேவிக்கு கோபம் வருகிறது. எனவே அதிகாரத்தைப் பற்றி எப்போதும் தற்பெருமை கொள்ளக் கூடாது.



Click it and Unblock the Notifications












