Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
சாணக்கிய நீதி படி இந்த 3 சம்பவங்கள் நடந்தால் உங்களை மரணத்திற்கு பிறகும் துரதிர்ஷ்டம் விரட்டுமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் தன்னுடைய அர்த்தசாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி புத்தகங்களால் உலகம் முழுவதும் ஆச்சார்யா சாணக்கியர் என்று புகழப்பெற்றார். பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் துறையில் முன்னோடியான சாணக்கியர், வாழ்க்கைக் குறித்து யாராலும் சிந்திக்க முடியாத தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார்.
யாராலும் எதிர்காலத்தைக் கணிக்க முடியாது, ஆனால் மக்கள் மற்றும் மனித இயல்பு பற்றிய அறிவு மற்றும் புரிதலின் அடிப்படையில், அவர் வரவிருக்கும் நிகழ்வுகளை கணிக்க முடியும். சாணக்கிய நீதி என்ற தனது படைப்பில், வாழ்க்கை என்பது பிற்கால வாழ்க்கைக்காக வருந்துவதற்கான ஒரு வழி என்று விளக்குகிறார்; நமது செயல்கள் மற்றும் கர்மாக்கள் அனைத்தும் பிற்கால வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றன.

சாணக்கியர் நம் வாழ்நாளில் நடக்கும் எதுவும் காரணமின்றி நடக்காது என்று கூறுகிறார். சாணக்கியர் சில வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார், இந்த சம்பவங்கள் நடந்தால் இறந்த பிறகு அவர்களை துரதிர்ஷ்டம் உங்களை துரத்தும் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
வயதான காலத்தில் துணையைப் பிரிவது
ஒரு நபரின் பலவீனமான உணர்ச்சி நிலை வாழ்க்கையின் இரண்டு நிலைகளில் வருகிறது, ஒன்று குழந்தை பருவத்தில், மற்றொன்று முதுமை பருவத்தில். வாழ்க்கையின் இந்த பருவக்காலங்களில், ஒருவர் தனது பெற்றோர் மற்றும் மனைவியை ஒரே நேரத்தில் உணர்ச்சிபூர்வமான ஆதரவிற்காகச் சார்ந்து இருக்கிறார். குறிப்பாக வயதான காலத்தில், மரணம் உங்கள் மனைவியிடமிருந்து உங்களைப் பிரித்தால், அது உங்கள் மீது மரணத்திற்கு பிறகு துரதிர்ஷ்டம் வரப்போவதற்கான அறிகுறியாகும்.
மனைவியின் முக்கியத்துவம்
முதுமைக் காலத்தில், உங்கள் மனைவியைப் போல, நெருக்கடியான காலங்களில் உங்களை யாரும் உணர்ச்சிபூர்வமாக ஆதரிக்க மாட்டார்கள், அந்த ஆதரவு முதுமைக் காலத்தில் பறிக்கப்பட்டால், அது மரணத்திற்குப் பிறகு ஒரு சித்திரவதைக் காலத்தைக் குறிக்கிறது.
வாழ்வாதாரத்திற்காக பிறரை நம்பியிருப்பது
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு விவேகமுள்ள நபரும் தங்கள் குறைபாடுகள் மற்றும் ஊனங்களைப் பொருட்படுத்தாமல் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்று ஆச்சார்யா சாணக்கியர் கூறுகிறார். உங்களை தன்னம்பிக்கை மிக்கவராக மாற்றுவது உங்களின் உடல் அல்ல, ஆனால் மன உறுதியும் அறிவும் உங்களைத் தன்னம்பிக்கையானவராக மாற்றுகிறது.
சில சூழ்நிலையில் ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான நபர் வாழ்வாதாரத்திற்காக வேறொருவரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தால், அது அவர்களை துரதிர்ஷ்டம் சூழ்ந்துள்ளதற்கான அறிகுறியாகும். பிரபஞ்ச ஆற்றல்கள் அவரை மரணத்திற்குப் பிறகு துரதிர்ஷ்டத்தை நோக்கித் தள்ளுகின்றன என்பதற்கும் இது ஒரு முக்கிய அறிகுறியாகும்.
உங்களுக்கான வெகுமத்தியை வேறொருவர் பெறுவது
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒவ்வொரு கடின உழைப்பும் முயற்சியும் உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ வெகுமதிகள் கிடைக்கின்றன. ஆனால், சிலர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வெகுமதியை மற்றவர்களிடம் இழக்கிறார்கள். இது உங்களுக்கு நிகழும்போது, அது ஒரு துரதிர்ஷ்டவசமான அறிகுறி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்களது வெகுமதி வேறொருவரால் பறிக்கப்படும் தருணம் வந்தால், மரணத்திற்குப் பிறகு நீங்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications
