Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருப்பவர்கள் சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தை அடைவார்களாம்...உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: சாணக்கியரின் நீதி சாஸ்திரம் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுவதற்கான விஷயங்களைக் கொடுத்துள்ளது. சாணக்கியரின் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால், சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். செல்வத்தை விட மரியாதை முக்கியம் என்று சாணக்கியர் கூறுகிறார். நாம் மரியாதை பெறுவது செல்வத்தின் அடிப்படையில் அல்ல, ஆனால் நமது செயல்களின் அடிப்படையில் என்று சாணக்கியர் கூறுகிறார்.

ஒரு மனிதனின் குணமும் நடத்தையும் அவரை சமுதாயத்தில் அவர்களின் நிலையை நிர்ணயிக்கிறது. ஒரு மனிதனின் நல்ல குணங்கள் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ உதவுகின்றன. நேர்மையும் பாரபட்சமற்ற தன்மையும் ஒரு மனிதனிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும். நாம் சரியான பாதையில் சென்றால், எந்த சூழ்நிலையிலும் நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.
நமது நடத்தையே நமது ஆளுமையை நிர்ணயிக்கிறது. சாணக்கிய நீதியில், நம் வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சில விஷயங்களைக் கூறியுள்ளார், அதன்படி சில குணங்கள் இருந்தால் எங்கு சென்றாலும் மரியாதையும் பதவியும் கிடைக்கும். அப்படிப்பட்ட குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது
மரியாதையை யாரிடமும் பறிக்க முடியாது. நீங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் மற்றவர்களை மதிக்க வேண்டும். எந்த நபரும் உங்களை விட சிறியவர் அல்ல. மற்றவர்களை இழிவுபடுத்தும் நபர் மரியாதைக்கு தகுதியற்றவர். எனவே மற்றவர்களை மதிப்பதில் கவனமாக இருங்கள், அப்போதுதான் நீங்களும் மற்றவர்களால் போற்றப்படுவீர்கள்.
கடின உழைப்பு
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரின் செயல்களே அவர்களை மரியாதைக்குரியவர்களாக ஆக்குகின்றன. எனவே உங்கள் வேலையில் ஒருபோதும் சோம்பேறியாக இருக்காதீர்கள். எந்த வேலையையும் நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடாதீர்கள். தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றும் ஒரு நபர் எல்லா இடங்களிலும் மரியாதைக்கு தகுதியானவர். அவர்கள் உறுதியாக வெற்றியையும் அடைகிறார்கள். கடின உழைப்பும், வேலையின் மீதான ஆர்வமுமே ஒருவரை நல்ல தலைவராக்குகிறது.
நடத்தை
ஒரு நபரின் வெற்றியும் மரியாதையும் அவரது நடத்தையைப் பொறுத்தது. நடத்தையின் தரம் மிகவும் முக்கியமானது. அளவற்ற செல்வம் இருந்தாலும் கசப்பான வார்த்தைகள் பேசுபவரை யாருக்கும் பிடிக்காது. பிறர் முதுகில் குத்துபவர்களை யாரும் மதிப்பதில்லை. எனவே எப்போதும் உங்கள் நடத்தையை மற்றவர்களிடம் கண்ணியமாக வைத்துக் கொள்ளுங்கள். சத்தியத்தின் வழியைப் பின்பற்றும் ஒரு நபர் சமூகத்தில் உயர் பதவியை வகிக்கிறார்.
பொறுமை
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரின் மிக முக்கியமான நல்ல குணங்களில் ஒன்று பொறுமை. பல சமயங்களில் பொறுமை ஒரு ஆசீர்வாதமாக இருக்கலாம். பொறுமையாக இருப்பவர் எந்தச் சூழ்நிலையிலும் சரியாகச் சிந்தித்து, முடிவெடுத்து, அந்தச் சூழ்நிலையை எளிதில் சமாளிப்பார். பொறுமையாக இருப்பவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தடுக்க முடியும்.
நேர்மை
எந்தவொரு நபரிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணம் இது. நேர்மையே சிறந்த வாழ்க்கைக்கான வழி. எனவே எந்த சூழ்நிலையிலும் நேர்மையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. நீங்கள் நேர்மையாக இல்லாவிட்டால், நீங்கள் வாழ்க்கையில் வழிதவறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நேர்மையானவர்கள் சமூகத்தால் மதிக்கப்படுவர். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியை அடைகிறார்கள்.



Click it and Unblock the Notifications












