Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருப்பவர்கள் சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தை அடைவார்களாம்...உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: சாணக்கியரின் நீதி சாஸ்திரம் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுவதற்கான விஷயங்களைக் கொடுத்துள்ளது. சாணக்கியரின் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால், சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். செல்வத்தை விட மரியாதை முக்கியம் என்று சாணக்கியர் கூறுகிறார். நாம் மரியாதை பெறுவது செல்வத்தின் அடிப்படையில் அல்ல, ஆனால் நமது செயல்களின் அடிப்படையில் என்று சாணக்கியர் கூறுகிறார்.

ஒரு மனிதனின் குணமும் நடத்தையும் அவரை சமுதாயத்தில் அவர்களின் நிலையை நிர்ணயிக்கிறது. ஒரு மனிதனின் நல்ல குணங்கள் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ உதவுகின்றன. நேர்மையும் பாரபட்சமற்ற தன்மையும் ஒரு மனிதனிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும். நாம் சரியான பாதையில் சென்றால், எந்த சூழ்நிலையிலும் நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.
நமது நடத்தையே நமது ஆளுமையை நிர்ணயிக்கிறது. சாணக்கிய நீதியில், நம் வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சில விஷயங்களைக் கூறியுள்ளார், அதன்படி சில குணங்கள் இருந்தால் எங்கு சென்றாலும் மரியாதையும் பதவியும் கிடைக்கும். அப்படிப்பட்ட குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது
மரியாதையை யாரிடமும் பறிக்க முடியாது. நீங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் மற்றவர்களை மதிக்க வேண்டும். எந்த நபரும் உங்களை விட சிறியவர் அல்ல. மற்றவர்களை இழிவுபடுத்தும் நபர் மரியாதைக்கு தகுதியற்றவர். எனவே மற்றவர்களை மதிப்பதில் கவனமாக இருங்கள், அப்போதுதான் நீங்களும் மற்றவர்களால் போற்றப்படுவீர்கள்.
கடின உழைப்பு
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரின் செயல்களே அவர்களை மரியாதைக்குரியவர்களாக ஆக்குகின்றன. எனவே உங்கள் வேலையில் ஒருபோதும் சோம்பேறியாக இருக்காதீர்கள். எந்த வேலையையும் நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடாதீர்கள். தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றும் ஒரு நபர் எல்லா இடங்களிலும் மரியாதைக்கு தகுதியானவர். அவர்கள் உறுதியாக வெற்றியையும் அடைகிறார்கள். கடின உழைப்பும், வேலையின் மீதான ஆர்வமுமே ஒருவரை நல்ல தலைவராக்குகிறது.
நடத்தை
ஒரு நபரின் வெற்றியும் மரியாதையும் அவரது நடத்தையைப் பொறுத்தது. நடத்தையின் தரம் மிகவும் முக்கியமானது. அளவற்ற செல்வம் இருந்தாலும் கசப்பான வார்த்தைகள் பேசுபவரை யாருக்கும் பிடிக்காது. பிறர் முதுகில் குத்துபவர்களை யாரும் மதிப்பதில்லை. எனவே எப்போதும் உங்கள் நடத்தையை மற்றவர்களிடம் கண்ணியமாக வைத்துக் கொள்ளுங்கள். சத்தியத்தின் வழியைப் பின்பற்றும் ஒரு நபர் சமூகத்தில் உயர் பதவியை வகிக்கிறார்.
பொறுமை
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரின் மிக முக்கியமான நல்ல குணங்களில் ஒன்று பொறுமை. பல சமயங்களில் பொறுமை ஒரு ஆசீர்வாதமாக இருக்கலாம். பொறுமையாக இருப்பவர் எந்தச் சூழ்நிலையிலும் சரியாகச் சிந்தித்து, முடிவெடுத்து, அந்தச் சூழ்நிலையை எளிதில் சமாளிப்பார். பொறுமையாக இருப்பவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தடுக்க முடியும்.
நேர்மை
எந்தவொரு நபரிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணம் இது. நேர்மையே சிறந்த வாழ்க்கைக்கான வழி. எனவே எந்த சூழ்நிலையிலும் நேர்மையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. நீங்கள் நேர்மையாக இல்லாவிட்டால், நீங்கள் வாழ்க்கையில் வழிதவறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நேர்மையானவர்கள் சமூகத்தால் மதிக்கப்படுவர். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியை அடைகிறார்கள்.



Click it and Unblock the Notifications
