Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாம்..இவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லையாம்!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணர் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டவர். சாணக்கியர் அவருடைய வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கொள்கைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாணக்கிய நீதியில் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துவது பற்றிய முக்கியமான தகவல்களைப் பெறுவீர்கள்.

சாணக்கியருக்கு அரசியல் மற்றும் இராஜதந்திரம் பற்றிய நல்ல புரிதல் இருந்தது. இது தவிர வேறு பல துறைகளிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. சாணக்கியர் பொருளாதாரத்தில் நிபுணராக இருந்தார். எனவே அவர் கௌடில்யர் என்றும் அழைக்கப்படுகிறார். சாணக்கியரின் அறிவுரைகளை ஒருவர் தன் வாழ்வில் இணைத்துக் கொண்டால், அவர் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த முடியும்.
சாணக்கியர் ஒரு மனிதருக்கு இருக்க வேண்டிய சில குணங்களைப் பற்றி பேசியுள்ளார். இந்த குணங்களைக் கொண்ட ஒரு நபர் எப்போதும் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார். ஒரு அறிவாளி எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். அவர்களின் வார்த்தைகளை சமுதாயம் கேட்டு பின்பற்றுகிறது. சாணக்கிய நீதியின் படி ஒருவரை புத்திசாலியாக்கும் குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நெருக்கடியான சூழ்நிலையில் அமைதியாக இருப்பது
வாழ்க்கையின் இக்கட்டான நேரங்களிலும் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர் சமூகத்தால் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், நெருக்கடியான நேரங்களில் அவசர முடிவுகள் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். எனவே ஒரு நெருக்கடி ஏற்படும் போது, உங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்.
உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் மற்றும் சிக்கலைத் தவிர்க்கவும். நெருக்கடிகள் ஏற்படும் போது தயங்காமல், உங்கள் சொந்த பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து உங்கள் நெருக்கடிகளை சமாளிக்கவும்.
தவறு செய்யாமல் இருப்பவர்கள்
சாணக்கியரின் கொள்கையின்படி, ஒரு நபர் எப்போதும் தவறுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். நற்செயல்களைச் செய்து, தவறான செயல்களில் இருந்து விலகி இருப்பவர் மக்களால ஞானி என்று அழைக்கப்படுகிறார். எனவே ஒரு நபர் எப்போதும் தவறு மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். சாணக்கியர் கூறுகிறார், தனது புத்தியை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறத் தெரிந்தவர், சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பவரை ஞானி என்று அழைக்கலாம் என்று சாணக்கியர் கூறுகிறார்.
எதிர்கால திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பவர்
சாணக்கியர், தனது எதிர்காலத் திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பவர் சிறந்த புத்திசாலி என்று கூறுகிறார். ஏனென்றால் வேலை முடிவதற்குள் தனது திட்டங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களின் வேலையை சீர்குலைக்க வாய்ப்புள்ளது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது திட்டங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
இலக்கில் கவனம் செலுத்துவது
எப்பொழுதும் தனது இலக்கை அடைவதற்காக உழைத்து, எந்தத் தடைகளையும் அச்சமின்றிச் சமாளிக்கும் திறன் கொண்டவர்தான் அறிவாளி என்கிறார் சாணக்கியர். நேரத்தையோ, சூழ்நிலையையோ நினைத்து தயங்காத ஒருவர் தனது இலக்கை அடைய அதிக நேரம் எடுப்பதில்லை.
தடைகளை கடக்கும் திறன்
எல்லா தடைகளையும் கடக்கும் திறன் ஒரு நபரை அறிவாளியாக மாற்றுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது பணிகளை முடிப்பதில் எந்த தடைகளுக்கும் பயப்படாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி நகந்தால் அவர் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்டவருக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும்.



Click it and Unblock the Notifications












