Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
சாணக்கிய நீதி படி சிறந்த கணவரிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள் இதுதான்... உங்ககிட்ட இதுல எத்தனை இருக்கு?
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் தலைசிறந்த இராஜதந்திரியாகக் கருதப்படுகிறார். சாணக்கியரின் நீதி சாஸ்திரம் ஒரு மனித வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்தையும் கையாள்கிறது. தொழில், பணம், திருமணம், காதல் மற்றும் குடும்பம் அனைத்தும் சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீதி சாஸ்திரத்தின் படி, சாணக்கியர் ஒவ்வொரு விஷயத்திற்கும் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
சாணக்கியர் காதலைப் பற்றியும் பல விஷயங்களை தனது நீதி சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் தங்கள் கணவரிடம் பெரும்பாலும் ஆண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள் இதில் அடங்கும். அவை என்ன என்பதை உணர்ந்து நீங்கள் அதனை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெண்கள் ஆண்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அந்த குணங்கள் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வாழ்க்கையில் என்ன நெருக்கடி வந்தாலும் அவர்களை விட்டு செல்ல மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.

புத்திசாலிகள்
புத்திசாலிகளை யாருக்குத்தான் பிடிக்காது, குறிப்பாக பெண்கள் பெரும்பாலும் அறிவார்ந்த ஆண்களிடம் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறுவதும் இதுதான். அத்தகைய ஆண்கள் எந்த ஒரு சூழ்நிலையையும் மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு எப்போதும் பக்தகமில்லாததாக இருக்கும். அதனால்தான் பெண்கள் எப்போதும் இந்த குணம் கொண்ட ஆண்களை விரும்புகிறார்கள்.
பாதுகாப்பு
சாணக்கிய நீதியின் படி, பெண்கள் தங்களைக் கவனமாகப் பாதுகாக்கும் நபரை விரும்புகிறார்கள். அதுமட்டுமல்ல பாதுகாப்பும், அக்கறையும் கொடுக்கத் தயாராக இருக்கும் ஆண்களிடம் அவர்கள் தனி அன்பும், ஈர்ப்பும் கொள்கிறார்கள். இத்தகைய கவனத்துடன் தங்களைப் பாதுகாக்கும் ஆண்களிடம் பெண்கள் பெரும்பாலும் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
பெற்றோருடன் பழகும் விதம்
உங்கள் பெற்றோருடன் நீங்கள் பழகும் விதத்தையும் பெண்கள் கவனிப்பார்கள். தங்கள் காதலன் தனது பெற்றோருக்கு கொடுக்கும் அதே அக்கறையையும் அன்பையும் தங்களுடையா பெற்றோருக்கும் கொடுத்தால், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதைத்தான் அனைத்து பெண்களும் தங்கள் கணவரிடம் எதிர்பார்க்கிறார்கள். இந்த குணம் கொண்ட ஆண்களின் திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சம உரிமை
சம உரிமை என்பது பெண்கள் தங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் முக்கிய குணங்களில் ஒன்றாகும். சாணக்கியர் இதைப்பற்றி தெளிவாக விளக்குகிறார். எந்தவொரு பெண்ணும் தனக்கு சம உரிமையும், தனது உணர்வுகளுக்கு முக்கியத்துவமும் அளிக்கும் துணையுடன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டுமென்று விரும்புவார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. மேலும், அவர்களுடன் தரமான நேரத்தை செலவிட அவர்கள் விரும்புகிறார்கள்.
கடின உழைப்பு
பெண்கள் கடினமாக உழைக்கும் ஆண்களை விரும்புகிறார்கள். ஏனெனில் அத்தகைய ஆண்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொண்டு, எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயரத்தை அடைகிறார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அவர்கள் வாழ்க்கையில் வெற்றியை நிச்சயம் அடைந்து விடுவார்கள். அவர்களுடன் இருப்பது தங்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் நேசிக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications












