Latest Updates
-
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா?
சாணக்கிய நீதி படி இந்த 3 விஷயங்களுக்கு மட்டும் எப்போதும் அதிகமாக ஆசைப்படக்கூடாது... இல்லனா ஆபத்துதான்!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு நபரின் வாழ்க்கையின் அனைத்து தருணங்களைப் பற்றியும் அறிந்திருந்தார். அதனால்தான் சாணக்கிய நீதி இன்றும் மிகவும் பிரபலமான புத்தகமாக இருக்கிறது. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்க முடியும் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கலாம்.
சாணக்கிய நீதி என்பது சாணக்கியர் தன்னுடைய அனுபவங்களை புத்தகமாக தொகுத்ததாகும். அதை சரியாக பின்பற்றினால், நம் அன்றாட வாழ்வில் பயனுள்ள பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கையில் திருப்தி மற்றும் அதிருப்தியின் அவசியத்தைப் பற்றி பேசியுள்ளார். அதாவது, நாம் எதில் திருப்தி அடைய வேண்டும், எதில் அதிருப்தியாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கூறியுள்ளார்.

உண்மைதான், வாழ்க்கையில் சில இடங்களில், நாம் அதிருப்தியுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அவை நாம் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவும், சிறப்பான பலன்களை அடையவும் நமக்கு அதிருப்தி தேவை. அதே நேரத்தில், வெற்றிகரமான மற்றும் இலட்சியமான வாழ்க்கையை நடத்த உதவும் பல விஷயங்களில் திருப்தி அடைவதும் முக்கியம். சாணக்கிய நீதியின்படி எந்தெந்த விஷயங்களில் நாம் அதிருப்தியுடன் இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவு
கல்வி மற்றும் அறிவைப் பொறுத்தவரை ஒருவர் எப்போதும் அதிருப்தியுடன் இருக்க வேண்டும். நீங்கள் அறிவில் திருப்தி அடையவில்லை என்றால், நீங்கள் அதிக அறிவைப் பெற முயற்சிப்பீர்கள். எனவே உங்கள் திறமை மேலும் அதிகரிக்கும். கல்வியும் அறிவும் எதிர்காலத்தில் மரியாதையையும் செல்வத்தையும் பெற உதவும்.
தானம்
மற்றவர்களுக்கு கொடுப்பதில் நாம் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது. ஏனெனில் கொடுப்பதன் மூலம் நாம் சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற தகுதியை பெறுகிறோம், நமது இலட்சியங்களால் வாழ்க்கை மேம்படும். மக்களுக்கு நல்லது செய்வதற்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் நீங்கள் நல்ல வழியில் செல்வீர்கள்.
வழிபாடு
கடவுளின் நாமத்தை உச்சரித்து வழிபடுவதில் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது. நீங்கள் கடவுளை எவ்வளவு அதிகமாக வழிபடுகிறீர்களோ, அவ்வளவு நன்மைகள் உங்களை வந்து சேரும். அதனால்தான் எத்தனை மந்திரங்களை உச்சரித்தாலும், கடவுளை வழிபட்டாலும் திருப்தி அடையக்கூடாது. மீண்டும் மீண்டும் வழிபட வேண்டும் என்றார் சாணக்கியர் கூறுகிறார். எந்தெந்த விஷயத்தில் திருப்தி அடைய வேண்டுமென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
மனைவி
மனைவி அழகாக இல்லாவிட்டாலும், ஒரு ஆண் தன் மனைவியுடன் திருப்தியாக இருக்க வேண்டும் என்றும், இன்னொரு பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்ளக்கூடாது என்றும் சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் கூறியுள்ளார். இல்லையெனில், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல சிக்கலுக்கு ஆளாவீர்கள். உங்கள் நேர்மையைப் பற்றிய கேள்விகளை எழுப்புவது உங்கள் கண்ணியத்தை சேதப்படுத்தும்.
உணவு
கிடைக்கும் உணவில் எப்போதும் திருப்தியாக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி எந்த சூழ்நிலையிலும் உணவை மகிழ்ச்சியாக உண்ண வேண்டும். உணவை ஒருபோதும் அவமதிக்காதீர்கள், உங்கள் தட்டில் உணவை ஒருபோதும் மிச்சம் வைக்காதீர்கள். கடவுள் உங்களுக்கு போதிய உணவை வழங்கினால் உங்களை அதிர்ஷ்டசாலி என்று கருதுங்கள்.
பணம்
ஒரு நபர் தனது வருமானத்தில் எப்போதும் திருப்தியாக இருக்க வேண்டும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப உங்கள் வீட்டுச் செலவுகளை வைத்துக் கொள்வதும் முக்கியம். அதேசமயம் வாழ்க்கையில் முன்னேற முயற்சிகள் எடுக்க வேண்டும். பிறர் செல்வத்தில் பேராசை கொள்வதும் பொறாமை கொள்வதும் உங்கள் வாழ்க்கைக்கு நல்லதல்ல.



Click it and Unblock the Notifications


