கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க

Posted By:

Chettinad Kothavarangai Kootu Recipe in Tamil: பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு என எதுவாக இருந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்து விடுவோம். அதேசமயம் என்ன காய்கறியை பொரியல் செய்வது என்பது அடுத்த கவலையாகும். சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு பொதுவாக பொரியல்தான் சைடிஷாக செய்வார்கள், ஆனால் பொரியல் போலவே சாதத்துக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும் மற்றொரு ஐட்டம் என்றால் அது கூட்டுதான்.

Chettinad Kothavarangai Kootu Recipe How to Make at Home in Tamil

பொதுவாக கூட்டு என்பது பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் புடலங்காயை வைத்துதான் செய்வார்கள், ஆனால் உண்மையில் சில வித்தியாசமான காய்கறிகளை வைத்து கூட்டு செய்யலாம். அப்படி ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான காய்தான் கொத்தவரங்காய். பெரும்பாலான மக்கள் கொத்தவரங்காயை சாம்பாரில்தான் போடுவார்கள், சிலர் பொரியல் செய்வார்கள். ஆனால் கொத்தவரங்காயை வைத்து அட்டகாசமான செட்டிநாடு கூட்டு செய்யலாம்.

உங்களுக்கு சுவையான செட்டிநாடு கொத்தவரங்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தவரங்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுடிவத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- கொத்தவரங்காய் - 200 கிராம்
- பாசிப்பருப்பு - 1 ஸ்பூன்
- தக்காளி - 1
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு

அரைப்பதற்கு:

- துருவிய தேங்காய் - 1/4 கப்
- சின்ன வெங்காயம் - 5
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
- தண்ணீர் - 1/4 கப்

தாளிக்க:

- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

- கொத்தவரங்காயைக் கழுவி 1 இன்ச் துண்டுகளாக நறுக்கவும். ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், வெங்காயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துத் தனியாக வைக்கவும்.

- ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு மற்றும் கறிவேப்பிலையைத் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய கொத்தவரங்காயைச் சேர்த்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் வதக்கவும்.

- கொத்தவரங்காய் பாதி வெந்ததும் ஒரு கப் தண்ணீர், மஞ்சள் தூள், சாம்பார் தூள், பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

- பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் அரைத்த தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- அடுப்பை மிதமான தீயில் வைத்து, 2 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, நன்றாகக் கலந்து அதன் கெட்டித்தன்மையைச் சரிபார்க்கவும்.

- ஒருவேளை கூட்டு தண்ணீராக இருந்தால், கூட்டு கெட்டியாகும் வரை 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

- இந்த கூட்டு சாம்பார் சாதம் அல்லது புளிகுழம்புடன் சாப்பிட அருமையாக இருக்கும், இல்லையெனில் இதை அப்படியே சாதத்தில் போட்டு நெய் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம்.

கொத்தவரங்காயின் நன்மைகள்:

இரத்த சர்க்கரையை நிர்வகிக்கிறது: குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் இருப்பதால், கொத்தவரங்காய் கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதலை மெதுவாக்கி, சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.

எடை குறைப்புக்கு உதவுகிறது: கொத்தவரங்காயில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இந்த நார்ச்சத்து, வயிறு நிறைந்த உணர்வைத் தூண்டி, பசியைக் கட்டுப்படுத்தவும், அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது: இதில் உள்ள அதிக நார்ச்சத்து, ஒரு இயற்கையான ப்ரீபயாட்டிக்காகச் செயல்பட்டு, ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களை ஊக்குவித்து, குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: கொத்தவரங்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, அதே நேரத்தில் பொட்டாசியம் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவைப் பராமரிக்க உதவுகிறது.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion