Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி இந்த குணம் இருக்கும் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க வாழ்க்கை வாழும் போதே நரகம்தானாம்...!
Chanakya Niti: திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும். நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அன்பு ஆகியவை திருமணத்தின் அடித்தளத்திற்கு இன்றியமையாத சில விஷயங்கள். ஏனெனில் இவற்றில் சில விஷயங்கள் திருமணத்தின் நோக்கத்தை வளர்க்கின்றன மற்றும் பாதுகாக்கின்றன.
திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். அனைத்து ஆண்களுமே அழகான பெண்களை திருமணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் இது மட்டுமே திருமணத்திற்கு போதுமானதல்ல என்கிறார் சாணக்கியர்.

சாணக்கியரின் பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அதனால்தான் சாணக்கியரின் வார்த்தைகள் பல நூற்றாண்டுகளாக பலரால் பின்பற்றப்படுகின்றன. மனித வாழ்வின் பல்வேறு அம்சங்கள் அவரது சாணக்கிய நீதியில் விவாதிக்கப்பட்டுள்ளன. அழகுக்காக மட்டும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
ஒரு அழகான பெண் குணத்தில் மோசமாக இருந்தால், அது உங்கள் திருமண வாழ்வைக் கெடுக்கும். இது போன்ற சில கெட்ட குணங்களுக்கு எதிராக சாணக்கியர் எச்சரிக்கிறார். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அத்தகைய பெண்களிடமிருந்து விலகி இருங்கள் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, இதுபோன்ற பெண்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
அழகு மட்டுமே இருக்குமே பெண்கள்
பொதுவாக, ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை ஒரு பெண்ணின் அறிவாற்றலின் அளவைக் காட்டிலும் அழகின் அடிப்படையிலேயே தேர்வு செய்கிறார்கள். ஆனால் சாணக்கியர் அழகான ஆனால் புத்திசாலித்தனம் இல்லாத பெண்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். அத்தகைய பெண்கள் உங்கள் திருமண வாழ்க்கையை குழப்பிவிடுவார்கள்.
மோசமான குடும்பத்தை சேர்ந்த பெண்
பெண்ணின் குடும்ப வரலாறு நன்றாக இருக்க வேண்டும். நல்ல குடும்பத்தில் பிறக்காத இல்லாத பெண்ணை, எவ்வளவு அழகாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறார் சாணக்கியர். இப்படிப்பட்ட பெண்ணால் உங்கள் குடும்பம் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம். நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் குடும்பப் பின்னணியில் மோசமானவராக இருந்தால், அவர் உங்கள் வீட்டில் அமைதியைக் கெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
மூர்க்கத்தனமான பெண்
ஒரு பெண் அழகாக இருந்தாலும் அவர் முரட்டுத்தனமானவராக இருந்தால் அப்படிப்பட்ட பெண்களை மணக்க வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, அத்தகைய பெண் தன் கணவனை அவர் விரும்பியதைச் செய்யும்படி கட்டாயப்படுத்துகிறார். இப்படிப்பட்ட பெண்கள் பொதுவெளியில் கணவனை அவமானப்படுத்தக் கூடத் தயங்குவதில்லை.
மூர்க்கத்தனமான மற்றும் தவறான நடத்தை கொண்ட பெண்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். தவறாக நடந்துகொள்ளும் மனைவி தன் கணவனை வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுத்துவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொய் சொல்பவர்கள்
சாணக்கிய நீதியில் பொய் சொல்லும் பெண்களையும், உண்மையை மறைக்கும் பெண்களையும் மணக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பொய் சொல்லும் ஒரு பெண் தன் கணவருக்கு எதிராகவும் இதைப் பயன்படுத்துவார். அத்தகைய பெண்கள் குடும்பத்தை உடைக்க கூட துணிவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே ஒரு ஆண் அத்தகைய பெண்ணை மணக்கவே கூடாது.
வீட்டு வேலை செய்யத் தெரியாத பெண்
சாணக்கியரின் கூற்றுப்படி வீட்டு வேலை தெரியாத பெண்ணை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். வீட்டு வேலை செய்யத் தெரியாத பெண்ணை மணக்கக் கூடாது என்கிறார் சாணக்கியர். இன்றைய உலகில் இது விவாதத்திற்குரிய விஷயமாக இருந்தாலும், இன்னும் சிலர் இதை நம்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications












