Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சாணக்கிய நீதி படி இந்த 5 நபர்களை உங்க வீட்டில் ஒருபோதும் தங்க அனுமதிக்காதீர்கள்... இல்லனா அவ்வளவுதான்...!
Chanakya Niti: மனிதர்களின் வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான ஒன்று எதுவென்றால் அது பிறருக்கு 'இல்லை' என்று சொல்வதுதான். நம்மை சுற்றி உள்ள அனைவரையும் நமக்கு பிடிக்குமென்று சொல்ல இயலாது, நமக்கு பிடிக்காதவர்களும் நமது சமூக வட்டத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
பிடித்தவர்களாக இருந்தாலும் அல்லது பிடிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். இருப்பினும், சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சிலவகை ஆட்களை ஒருபோதும் உங்கள் வீட்டில் தங்கவோ அல்லது உங்கள் வாழ்க்கையில் பங்கெடுக்கவோ அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

போலியானவர்கள்
உலகில் தங்கள் உண்மையான நிறத்தை மறைப்பவர்கள் பலர் உள்ளனர், அத்தகையவர்கள் மற்றவர்களின் முன் மிகவும் நேர்மையானவர்கள் மற்றும் அவர்களின் முதுகுக்குப் பின்னால் அவர்களைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். சாணக்கியர் இப்படிப்பட்டவர்களை தங்கள் இல்லத்தில் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
சாணக்கியர் கூறுகையில், தங்கள் ஆளுமையில் இரு வேறு பக்கங்களைக் கொண்டவர்கள் அனைவரிலும் மிகவும் மோசமானவர்கள். அத்தகையவர்கள் உங்கள் முன் இனிமையாகப் பேசுவார்கள், உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவார்கள். அப்படிப்பட்டவர்களை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கெட்ட காரியங்களை செய்பவர்கள்
வாழ்க்கையில் தீய செயல்களைச் செய்பவர்களுக்குப் பஞ்சமில்லை. இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி, உடல்ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துவதைத் தவிர, மக்களின் மனதிலும் விஷத்தைக் கலக்குகிறார்கள். அவர்கள் நாசீசிஸ்ட்களாகவும் மற்றும் ஆதிக்கவாதியாகவும் இருப்பார்கள். அத்தகையவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருங்கள்.
இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் எப்போதும் நம்பத்தகுந்தவர்கள் அல்ல. அவர்கள் மனிதர்களை முதுகில் குத்துவார்கள், முரட்டுத்தனமாகவும், தீமையை ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை ஒருவர் தன் வீட்டில் எப்போதும் அனுமதிக்கக்கூடாது.
தேவைக்காக மட்டும் நட்பாக இருப்பவர்கள்
"ஆபத்து காலத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்" என்பது நாம் நன்கு அறிந்த பழமொழி. ஆனால் இது உங்களின் நம்பிக்கைக்குரிய, உண்மையான நண்பர்களுக்கு மட்டுமே பொருந்தும். இருப்பினும், அதைத் தவிர, தேவை ஏற்படும் போது மட்டுமே உங்களை அழைக்கும் நபர்களை கவனிப்பதை நிறுத்துங்கள். அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்காதீர்கள்.
உங்களை முட்டாளாக்குபவர்கள்
உங்களின் பொருட்களை பயன்படுத்திக் கொள்பவர்கள் அல்லது எப்போதும் உங்களை உதவிக்காக மட்டும் அழைக்கும் நபர்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் அவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்காதீர்கள்.
பிறரை காயப்படுத்துபவர்கள்
வேண்டுமென்றே மற்றவர்களை புண்படுத்தும் மற்றும் அதற்காக துளியும் வருத்தம் கொள்ளாத காட்டுமிராண்டிகள் சிலர் உள்ளனர். அத்தகையவர்கள், ஒருமுறை மன்னிக்கப்படலாம், ஆனால் அவர்கள் அதையே திரும்பத் திரும்பச்செய்துக் கொண்டிருந்தால், அது அவர்களின் மாற்ற முடியாத ஒரு ஆளுமைப் பண்பாகும், அத்தகைய நபர்களை உங்கள் இல்லத்தில் அனுமதிக்காமல் இருப்பதோடு அவர்களை விட்டு உடனடியாக விலகி விட வேண்டும்.
அத்தகையவர்கள் தற்செயலாக மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களை துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இது மட்டுமல்ல, அத்தகையவர்கள் மற்றவர்களின் உணர்வைப் பொருட்படுத்தாமல், அவர்கள் நினைப்பதைச் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருப்பதுதான் நல்லது.



Click it and Unblock the Notifications













