Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்..
சாணக்கிய நீதி படி இந்த 5 நபர்களை உங்க வீட்டிற்குள் ஒருபோதும் உள்ளே விடாதீர்கள்..இல்லனா உங்க பெயர் கெட்டுவிடும்
Chanakya Niti: சாணக்கியரின் நீதிநூல் இந்தியா முழுவதும் பிரபலமானது. சாணக்கியர் நீதி, காதல், வாழ்க்கை, திருமணம் மற்றும் நிதி பற்றி அனைத்தையும் சொல்கிறது. சாணக்கிய நீதியில் கூறியுள்ள விஷயங்களை இப்போதும் பின்பற்றுபவர்கள் அதிகம் உள்ளனர். சாணக்கிய நீதியின் படி, நீங்கள் பல விஷயங்களின் உண்மையான அர்த்தத்தைப் பார்த்தால், அது வாழ்க்கையை மாற்றும்.
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த தத்துவஞானி என்பதை நாம் அறிவோம். அவருடைய அர்த்தசாஸ்திரம் பல விஷயங்களைப் பற்றிய துல்லிய கருத்துக்களை விளக்கியது. சாணக்கியர் தனக்கே உரிய தனித்துவமான நீதிச் சட்டங்களைக் கொண்டிருந்தார். அதன்படி என்ன நடந்தாலும் சிலரை வீட்டிற்குள் அழைத்து வரக்கூடாது என்கிறார். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொல்லலாம்.

தர்மம் பற்றி அறியாதவர்கள்
சாணக்கியர் தர்மம் தெரியாதவர்களுடன் நட்புறவு கொள்வது நல்லதல்ல என்கிறார். .இது உங்கள் வாழ்க்கையில் பல தீமைகளை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்களிடம் வாக்குவாதம் செய்வது தண்ணீரில் கோடு போடுவது போன்றது என்கிறார் சாணக்கியர். எனவே இதைப் பற்றி அறியாதவர்களுடன் நட்பு கொள்வது மோசமானது என்று சாணக்கியர் கூறுகிறார்.
மற்றவருக்கு தீங்கு செய்பவர்கள்
மற்றவர்களின் துக்கத்தில் மகிழ்ச்சியைக் காணும் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள் அல்லது அவர்களுடன் நண்பர்களாக இருக்காதீர்கள்.. இது உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கும். எனவே பிறருக்குத் தீங்கு செய்பவர்களை, அவர்களின் துன்பத்தில் இன்பம் அடைபவர்களை எந்தச் சூழ்நிலையிலும் வீட்டுக்குள் கொண்டுவரக் கூடாது.
சந்தர்ப்பவாதிகள்
கொடுத்த வாக்கை கடைப்பிடிக்காத நபராக ஒருவர் இருந்தால், அவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ளாதீர்கள். இது உங்கள் வாழ்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி உங்கள் எண்ணங்களையும் பாதிக்கும். எனவே சந்தர்ப்பத்துக்கு ஏற்ப கொடுத்த வாக்கை மாற்றிக்கொள்பவர்களை வீட்டிற்க்குள் விடாதீர்கள்.
பாவம் செய்பவர்கள்
நம்மில் பலரும் நமக்கேத் தெரியாமல் பல தவறுகளை செய்கிறோம். ஆனால் உங்கள் நண்பர் அது தவறு என்று தெரிந்தும் அதை செய்பவராக இருந்தால், அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். அவர்கள் தவறை நியாயப்படுத்த அடிக்கடி பேசுவார்கள். அது உங்கள் மனநிலையையும் மோசமான முறையில் பாதிக்கும். எனவே இதுபோன்ற சாக்குப்போக்குகளையும் பொய்களையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
புறணி பேசுபவர்கள்
உங்கள் முன் நல்லவர் போலவும், உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றி குறை சொல்பவர்களும் இருந்தால், அவர்களை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். உஅவர்களிடமிருந்து எப்போதும் விலகியிருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் உங்களின் நற்பெயரை சமூகத்தில் கெடுக்கலாம். அவர்களால் எவ்வளவு லாபம் கிடைத்தாலும் அவர்களை உங்கள் வீட்டிற்க்குள் அனுமதிக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications












