Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் இருக்கும் பெண்களை எவ்வளவு அழகாக இருந்தாலும் திருமணம் செய்துக் கொள்ளக்கூடாதாம்!
Chanakya Niti: ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டமாகும். விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவை திருமணத்திற்கு இன்றியமையாத முக்கியமான விஷயங்களாகும். ஏனெனில் இவை திருமணத்தின் நோக்கத்தை வளர்த்து பாதுகாக்கின்றன.
திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். பல ஆண்கள் அழகான பெண்களையே திருமணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் இது திருமணத்திற்கு நல்லதல்ல என்கிறார் சாணக்கியர். சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

மேலும் நிதிரீதியாகவோ அல்லது தனிப்பட்டதாகவோ எந்தவொரு பிரச்சினையையும் எளிதில் தீர்க்கக்கூடியவராகவும் அறியப்படுகிறார். அதனால்தான் சாணக்கியரின் வார்த்தைகள் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் இன்றும் பலரால் பின்பற்றப்படுகின்றன. மனித வாழ்வின் பல்வேறு அம்சங்கள் அவரது சாணக்கிய நீதியில் விவாதிக்கப்பட்டுள்ளன.
சிறந்த திருமண வாழ்க்கைக்கு சில வகை பெண்களிடமிருந்து விலகி இருங்கள் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, இதுபோன்ற பெண்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அழகு மட்டும் உள்ள பெண்கள்
பொதுவாக, ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை ஒரு பெண்ணின் அறிவாற்றலின் அளவைக் காட்டிலும் அழகின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். ஆனால் சாணக்கியர் அழகான ஆனால் புத்திசாலித்தனம் இல்லாத பெண்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். அத்தகைய பெண்கள் உங்கள் திருமண வாழ்க்கையை அழித்து விடுவார்கள்.
மோசமான குடும்பத்தில் பிறந்த பெண்
பெண்ணின் குடும்ப வரலாறு நல்லதாக இருக்க வேண்டும். நல்ல குடும்பத்தில் பிறக்காத பெண்ணை, எவ்வளவு அழகாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது சாணக்கியரின் அறிவுரையாகும். இப்படிப்பட்ட பெண்ணால் உங்கள் குடும்பம் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம். நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் குடும்பப் பின்னணியில் மோசமானவராக இருந்தால், அவர் உங்கள் வீட்டில் நிம்மதியைக் கெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
முரட்டுப் பெண்
ஒரு பெண் அழகாக இருந்தாலும் அவர் முரட்டுத்தனமானவராக இருந்தால் அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்ய வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, அத்தகைய பெண் தன் கணவனை அவள் விரும்பியதைச் செய்யும்படி கட்டாயப்படுத்துவார்.
இப்படிப்பட்ட பெண்கள் பொது இடங்களில் கணவரை அவமானப்படுத்தக்கூட தயங்க மாட்டார்கள். முரட்டுத்தனமாகவும், மோசமாகவும் நடந்துகொள்ளும் பெண்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இப்படிப்பட்ட பெண்கள் தங்கள் கணவரை வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுத்துவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொய் சொல்லும் பெண்கள்
சாணக்கிய நீதியில் பொய் சொல்லும் பெண்களையும், உண்மையை மறைக்கும் பெண்களையும் மணக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பொய் சொல்லும் ஒரு பெண் தன் கணவருக்கு எதிராகவும் இதைப் பயன்படுத்துவார். அத்தகைய பெண்கள் குடும்பத்தை உடைக்க தயங்க மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே ஒரு ஆண் அத்தகைய பெண்ணை மணக்கவே கூடாது.
வீட்டு வேலை செய்யத் தெரியாத பெண்
சாணக்கியரின் கூற்றுப்படி வீட்டு வேலை தெரியாத பெண்ணை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். இன்றைய உலகில் இது விவாதத்திற்குரிய விஷயமாக இருந்தாலும், இன்னும் சிலர் இதை நம்புகிறார்கள். இதனால் கணவரின் சுமைகள் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
