Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் உங்க வாழ்க்கையில் பணக்கஷ்டம் எப்போதும் வராதாம்...!
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் பல விவகாரங்கள் குறித்து தனது அனுபவங்களை எழுதியுள்ளார். தன் அறிவை தந்திரமாக பயன்படுத்துவதில் சிறந்த பண்டிதர் என்பதால் அவர் கௌடில்யர் என்று அழைக்கப்படுகிறார்.
இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்ற விஷயங்களில் விஷ்ணுகுப்தாவுக்கு நல்ல அனுபவம் உண்டு. சாணக்கியர் எழுதிய நெறிமுறைகள் இன்றும் மனிதர்களுக்கு பல வாழ்க்கை முறைகளை கற்பிக்கிறது. அவற்றை கடைபிடித்தால் மனிதனின் வாழ்க்கை கவலைகள், சிரமங்கள் இன்றி சுமூகமாக செல்லும் என்பது பெரியோர்களின் நம்பிக்கை.

இந்த விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் பணக்கஷ்டம் வராது என்கிறார் சாணக்கியர். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
லட்சுமிதேவி
சாணக்கிய நீதியின் படி, வீட்டில் எப்போதும் கவலைகளும் கண்ணீரும் இருக்கும். வீட்டில் எப்போதும் போர்ச் சூழல் இருந்தால் அந்த வீட்டில் லட்சுமிதேவி வசிக்க மாட்டார். லட்சுமிதேவி அமைதி நிலவும் இனிமையான வீட்டில் எப்போதும் வாழ்கிறார்.
கர்வம் கொள்ளக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி எந்தவொரு மனிதனும் பணத்தின் மீது வெறி கொள்ளக்கூடாது. ஏனென்றால் பணம் சம்பாதித்த பிறகு ஒருவரிடம் கர்வம் இருந்தால், அப்படிப்பட்டவர்களிடம் நீண்ட காலம் பணம் இருக்காது. எல்லோரையும் மதித்து, பணம் வந்தாலும் அடக்கமாக இருக்க வேண்டும், அப்போதுதான் பணம் அவர்களிடம் நிலைத்திருக்கும்.
பணத்தை செலவழிக்கும் முறை
சாணக்கிய நீதியின்படி, நாம் கஷ்டத்தில் இருக்கும் போது பணம் உண்மையான நண்பன் போல செயல்படுகிறது. பணத்தை தொண்டு, முதலீடு மற்றும் சுய பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டும். சொத்துக்களை குவிப்பதற்காக மட்டுமே பணத்தை செலவழிக்கக் கூடாது. அதே சமயம் செல்வத்தை தண்ணீரைப் போல வீணாக்கக் கூடாது. சிந்தனையுடன், பணத்தை சரியான நேரத்தில் செலவிட வேண்டும்.
பணம் சம்பாதிக்கும் முறை
சாணக்கிய நீதியின் படி பணத்தை எப்போதும் நேர்மையாக வழியில் சம்பாதிக்க வேண்டும். ஒழுக்கக்கேடான வழிகளில் சம்பாதிக்கும் பணம் நீண்ட காலம் நிலைக்காது. பணம் எப்போதும் சரியான வழியில் சம்பாதிக்க வேண்டும், அதுதான் நீண்ட காலம் நிலைக்கும்.
தானியக் களஞ்சியம்
வீட்டில் எப்போதும் தானியக் களஞ்சியத்தை முழுவதுமாக வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்டோர் ஹவுஸ் நம் வயிற்றை நிரப்புவது மட்டுமல்லாமல், வீட்டில் செல்வத்தை எப்போதும் நிலைத்திருக்க வைக்கிறது. தானியம் காலியாகும் முன்பு புதிய தானியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், லட்சுமி தேவியின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்கும். மேலும் உணவை ஒருபோதும் அவமதிக்கக் கூடாது.



Click it and Unblock the Notifications













