Latest Updates
-
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!' -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும் -
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சாணக்கிய நீதி படி உங்க பணத்தை இப்படி யூஸ் பண்ணுனா அது பல கோடியா பெருகுமாம்... மறந்துராதீங்க...!
Chanakya Niti: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாணக்கியர் இந்தியாவின் சிறந்த தத்துவஞானி, பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் சமூகம், தேசம், அரசியல் மற்றும் இராணுவத் திறன் பற்றிய கருத்துக்களை தனது நீதி சாஸ்திரத்தில் அவர் தொகுத்துள்ளார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, ஆச்சார்ய சாணக்கியரின் அறிவுரைகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
ஒருவர் பணம் சம்பாதிக்கும் போது சில விஷயங்களை மறந்துவிடவோ அல்லது புறக்கணிக்கவோ கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் இந்த புத்தகத்தில் கூறியுள்ளார். நீங்கள் இந்த விஷயங்களை பின்பற்றவில்லை என்றால், வாழ்க்கையில் பெரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தற்பெருமை கொள்ளக்கூடாது
பொதுவாக மக்கள் பணம் சம்பாதிக்கும் போது, அதை நினைத்து தற்பெருமை கொள்ளத் தொடங்குவார்கள். நீங்கள் ஒருபோதும் இதுபோன்ற தவறைச் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக, அந்தப் பணத்தை உங்கள் சொந்த நலனுக்காகவும் மற்றவர்களின் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த செயலால் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்து உங்களுக்கு அதிகப் பணத்தை வழங்கி ஆசீர்வதிப்பார்.
புத்திசாலித்தனமான செலவழிக்க வேண்டும்
ஆச்சார்ய சாணக்கியர், பணம் கிடைக்கும் போது, அதை புத்திசாலித்தனமாக செலவிட வேண்டும் என்கிறார். நெருக்கடியான காலங்களில் பணமே ஒருவருக்கு சிறந்த நண்பராக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்காதவர்கள் மோசமான காலங்களில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.
படோடாபம் கூடாது
செல்வம் உங்கள் கைகளுக்கு வரும்போது, அதைப் பற்றி குடும்பத்தினரைத் தவிர வெளியாட்களிடம் விவாதிக்கக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். இதைச் செய்வதன் மூலம், திருடர்களும் எதிரிகளும் சுறுசுறுப்பாகி, உங்களுக்கு ஆபத்து விளைவிப்பார்கள். எனவே, உங்கள் செல்வத்தை பற்றிய தகவல்களை யாருக்கும் வெளிப்படுத்தாதீர்கள், உங்கள் பணத்தை பாதுகாப்பதில் கவனமாக இருங்கள்.
மற்றவர்களை அவமதிக்ககூடாது
மற்றவர்களை அவமானப்படுத்தவோ அல்லது தீங்கு செய்யவோ உங்களின் பணத்தைப் பயன்படுத்தாதீர்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள், மேலும் வீட்டிற்கு வறுமையை அழைத்து வருவீர்கள். எனவே உங்கள் செல்வத்தை நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதிக தானம் செய்யக்கூடாது
தானம் செய்வது மிகவும் நல்ல விஷயம்தான். ஆனால் அளவிற்கு அதிகமாக தானம் செய்வது உங்களுக்கே விளைவிக்கும். நீங்கள் சம்பாதிக்கும் அளவுக்கு பணத்தை சேமித்து, உங்கள் வருமானத்திற்கு ஏற்ப மற்றவர்களுக்கு உதவுங்கள்.
செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்
உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது போதாது. நீங்கள் அதிக பணம் சம்பாதித்தாலும் பணக்காரர் ஆக முடியாது. இருப்பினும், ஒரு பாத்திரத்தில் நீண்ட நேரம் சேமித்து வைத்தால் தண்ணீர் கெட்டுப்போவது போல, நீங்கள் சம்பாதித்த செல்வமும் சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் அதன் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார்.
சேமிக்க வேண்டும்
சாணக்கியர் பணத்தில் கவனமாக இருக்க வேண்டுமென்று அறிவுத்துகிறார். பணத்தை கவனக்குறைவாக கையாளுபவர்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள். கடின உழைப்பின் மூலம் செல்வம் ஈட்டப்படுகிறது. எனவே, பணத்தின் மதிப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் பணத்தை சேமிக்கவில்லை என்றால், நீங்கள் பணத்தை இழப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
