Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை செய்பவர்கள் சமூகத்தில் பெரிய மரியாதையைப் பெறுவார்களாம்...!
Chanakya Niti: அனைவருமே தங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய கடினமாக முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலும், இரவும் பகலும் கடினமாக உழைப்பவர்களுக்கு வாழ்க்கை விரும்பிய பலனைத் தராது. அதனால்தான் மக்கள் மனம் வருந்துகிறார்கள். அவ்வாறான நிலையில், நீங்கள் ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் பின்பற்ற வேண்டும். ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார்.

அவரது கொள்கைகள் இன்றும் மக்களை முன்னோக்கி கொண்டு செல்கின்றன. அவர் தனது சாணக்கிய நீதி என்ற புத்தகத்தில் வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகள் குறித்த தனது கருத்துக்களை அவர் எழுதினார். உங்கள் இலக்கு பெரியதாக இருந்தால், நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் பெரியதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். இதையெல்லாம் தைரியமாக எதிர்கொள்பவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும். நீங்களும் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், ஆச்சார்ய சாணக்கியரின் இந்த வார்த்தைகளை பின்பற்ற வேண்டும்.
மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது
சாணக்கியரின் கூற்றுப்படி, நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், உங்கள் சொந்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது மட்டுமின்றி மற்றவர்களின் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்காத ஒருவர் தனது வாழ்க்கையில் முன்னேற மிகவும் போராடுவார் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்கள் வெற்றிப் பாதையில் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
தோல்வியை கண்டு மனம் தளரக்கூடாது
பொதுவாக, சிலர் தவறு அல்லது தோல்வியை எதிர்கொள்ளும்போது தங்கள் இலக்குகளிலிருந்து பின்வாங்குவார்கள். இருப்பினும், அவ்வாறு செய்வது நல்லதல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கையின்படி, கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் ஒருபோதும் வருத்தப்படக்கூடாது. வெற்றிக்கு அடுத்து என்ன செய்வது என்று யோசித்து முன்னேற வேண்டும்.
மரியாதை இல்லாத இடத்தில் வாசிக்கக்கூடாது
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, ஒரு நபர் தன்னை மதிக்காத இடத்தில் ஒரு நொடி கூட வாழக்கூடாது. நீங்கள் உங்கள் சுயமரியாதைக்கு முன்னுரிமை அளித்தால், நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக மாறலாம்.
அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இருக்கக்கூடாது
ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெற ஒருபோதும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பக்கூடாது. ஒரு நபர் தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் மட்டுமே தனது வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஒரு நபர் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் தனது இலக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்க கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
தவத்தின் பலன்
தவம் செய்வதன் மூலம் கடினமான காரியங்கள் கூட எளிதாகிவிடும் என்கிறார் சாணக்கியர். தவத்தின் மூலம் அனைத்தையும் அடையலாம். ஆனால் தபஸ் என்றால் என்ன? தபஸின் உண்மையான அர்த்தம் கடினமான சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொள்வதாகும். பசி-தாகம், துக்கம்-இன்பம், இழப்பு-ஆதாயம், வாழ்வு-இறப்பு இவையெல்லாம் வாழ்வின் தவங்களாகும்.



Click it and Unblock the Notifications












