Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
சாணக்கிய நீதி படி உங்க குழந்தை வாழ்க்கையில் ஜெயிக்க இந்த 3 விஷயங்களை சரியா பண்ணுங்க போதும்...!
சாணக்கியர் நிபுணத்துவம் பெற்ற துறைகளில் குழந்தை வளர்ப்பும் அடங்கும். ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, சன்ஸ்கார் என்பது யாருடைய வாழ்க்கையையும் மாற்றக்கூடிய ஒரு நிதியாகும். குழந்தைகளிடம் நல்ல பழக்கவழக்கங்கள் புகட்டப்பட்டால், அது அவர்களை தகுதியான மனிதர்களாக மாற்ற உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் வெற்றிகரமான மனிதர்களாக மாறுகிறார்கள்.
நீங்களும் உங்கள் குழந்தையை வெற்றிகரமான மற்றும் பொறுப்புள்ள நபராக மாற்ற விரும்பினால், அவர்களை பண்பட்டவர்களாக ஆக்குங்கள். அதற்கு குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். பல குழந்தைகள் அதிக செல்லம் கொடுப்பதால் கெட்டு விடுகிறார்கள் மற்றும் பிடிவாதக்காரர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.

குழந்தை தவறான பாதையில் சென்றால், அவர்களை சரியான பாதையில் அழைத்து வர பெற்றோர்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். அதற்காக, குழந்தைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சரி மற்றும் தவறு பற்றிய முழுமையான அறிவுரைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களை வெற்றிகரமான நபராக மாற்ற சாணக்கியர் கூறும் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, பண்பட்ட குழந்தைகள் மட்டுமே வெற்றிகரமான நபர்களாக மாறுகிறார்கள். நீங்களும் உங்கள் குழந்தையை வெற்றிகரமான நபராக மாற்ற விரும்பினால், அவர்களை பண்பட்டவர்களாக ஆக்குங்கள். இதற்காக, குழந்தை பருவத்திலிருந்தே குழந்தைளுக்கு ஒழுக்கத்தின் மதிப்புகளை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
vg
குழந்தைகள் மனதளவில் உண்மையாக இருந்தாலும் குறும்புக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு சரி, தவறு பற்றி அதிகம் தெரியாது, அதனால் எந்நேரமும் குறும்பு செய்கிறார்கள். சில சமயங்களில் குறும்பு செய்ததற்காக தண்டனையும் பெறுவார்கள். இதுகுறித்து ஆச்சார்யா சாணக்கியர் கூறுகையில், குழந்தையை ஐந்து வயது வரை கடுமையாக தண்டிக்க கூடாது. தொடர்ச்சியான கடுமையான தண்டனையால், குழந்தைகள் குறும்புக்கு அடிமையாகிறார்கள். அதனை சரிசெய்ய முதல் ஐந்து வருடங்கள் சரி எது தவறு எது என்று அன்புடன் சொல்லுங்கள். அதற்குப் பிறகு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
குழந்தையின் கல்வியில் கஞ்சத்தனம் காட்டக்கூடாது என்கிறார் சாணக்கியர். உங்கள் குழந்தையின் திறமைக்கேற்ப குழந்தைக்கு கல்வி கொடுங்கள். நல்ல கல்வி ஒரு குழந்தையை நம்பிக்கையூட்டுகிறது. இது குழந்தையின் அறிவுசார் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதனால் குழந்தையின் ஆர்வமும் அதிகரிக்கிறது.
குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனமாகவும் பிடிவாதமாகவும் இருப்பார்கள். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் போது, கண்டிப்பாக சரி எது தவறு எது என்று சொல்லுங்கள். சரியாக சொல்லப்போனால், ஆலோசனை வழங்குவது குழந்தையின் மனதிலும் உங்கள் மீதான பாசத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
