Latest Updates
-
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்..
சாணக்கிய நீதி படி உங்க குழந்தை வாழ்க்கையில் ஜெயிக்க இந்த 3 விஷயங்களை சரியா பண்ணுங்க போதும்...!
சாணக்கியர் நிபுணத்துவம் பெற்ற துறைகளில் குழந்தை வளர்ப்பும் அடங்கும். ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, சன்ஸ்கார் என்பது யாருடைய வாழ்க்கையையும் மாற்றக்கூடிய ஒரு நிதியாகும். குழந்தைகளிடம் நல்ல பழக்கவழக்கங்கள் புகட்டப்பட்டால், அது அவர்களை தகுதியான மனிதர்களாக மாற்ற உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் வெற்றிகரமான மனிதர்களாக மாறுகிறார்கள்.
நீங்களும் உங்கள் குழந்தையை வெற்றிகரமான மற்றும் பொறுப்புள்ள நபராக மாற்ற விரும்பினால், அவர்களை பண்பட்டவர்களாக ஆக்குங்கள். அதற்கு குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். பல குழந்தைகள் அதிக செல்லம் கொடுப்பதால் கெட்டு விடுகிறார்கள் மற்றும் பிடிவாதக்காரர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.

குழந்தை தவறான பாதையில் சென்றால், அவர்களை சரியான பாதையில் அழைத்து வர பெற்றோர்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். அதற்காக, குழந்தைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சரி மற்றும் தவறு பற்றிய முழுமையான அறிவுரைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களை வெற்றிகரமான நபராக மாற்ற சாணக்கியர் கூறும் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, பண்பட்ட குழந்தைகள் மட்டுமே வெற்றிகரமான நபர்களாக மாறுகிறார்கள். நீங்களும் உங்கள் குழந்தையை வெற்றிகரமான நபராக மாற்ற விரும்பினால், அவர்களை பண்பட்டவர்களாக ஆக்குங்கள். இதற்காக, குழந்தை பருவத்திலிருந்தே குழந்தைளுக்கு ஒழுக்கத்தின் மதிப்புகளை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
vg
குழந்தைகள் மனதளவில் உண்மையாக இருந்தாலும் குறும்புக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு சரி, தவறு பற்றி அதிகம் தெரியாது, அதனால் எந்நேரமும் குறும்பு செய்கிறார்கள். சில சமயங்களில் குறும்பு செய்ததற்காக தண்டனையும் பெறுவார்கள். இதுகுறித்து ஆச்சார்யா சாணக்கியர் கூறுகையில், குழந்தையை ஐந்து வயது வரை கடுமையாக தண்டிக்க கூடாது. தொடர்ச்சியான கடுமையான தண்டனையால், குழந்தைகள் குறும்புக்கு அடிமையாகிறார்கள். அதனை சரிசெய்ய முதல் ஐந்து வருடங்கள் சரி எது தவறு எது என்று அன்புடன் சொல்லுங்கள். அதற்குப் பிறகு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
குழந்தையின் கல்வியில் கஞ்சத்தனம் காட்டக்கூடாது என்கிறார் சாணக்கியர். உங்கள் குழந்தையின் திறமைக்கேற்ப குழந்தைக்கு கல்வி கொடுங்கள். நல்ல கல்வி ஒரு குழந்தையை நம்பிக்கையூட்டுகிறது. இது குழந்தையின் அறிவுசார் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதனால் குழந்தையின் ஆர்வமும் அதிகரிக்கிறது.
குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனமாகவும் பிடிவாதமாகவும் இருப்பார்கள். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் போது, கண்டிப்பாக சரி எது தவறு எது என்று சொல்லுங்கள். சரியாக சொல்லப்போனால், ஆலோசனை வழங்குவது குழந்தையின் மனதிலும் உங்கள் மீதான பாசத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
