Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி உங்க குழந்தை வாழ்க்கையில் ஜெயிக்க இந்த 3 விஷயங்களை சரியா பண்ணுங்க போதும்...!
சாணக்கியர் நிபுணத்துவம் பெற்ற துறைகளில் குழந்தை வளர்ப்பும் அடங்கும். ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, சன்ஸ்கார் என்பது யாருடைய வாழ்க்கையையும் மாற்றக்கூடிய ஒரு நிதியாகும். குழந்தைகளிடம் நல்ல பழக்கவழக்கங்கள் புகட்டப்பட்டால், அது அவர்களை தகுதியான மனிதர்களாக மாற்ற உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் வெற்றிகரமான மனிதர்களாக மாறுகிறார்கள்.
நீங்களும் உங்கள் குழந்தையை வெற்றிகரமான மற்றும் பொறுப்புள்ள நபராக மாற்ற விரும்பினால், அவர்களை பண்பட்டவர்களாக ஆக்குங்கள். அதற்கு குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். பல குழந்தைகள் அதிக செல்லம் கொடுப்பதால் கெட்டு விடுகிறார்கள் மற்றும் பிடிவாதக்காரர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.

குழந்தை தவறான பாதையில் சென்றால், அவர்களை சரியான பாதையில் அழைத்து வர பெற்றோர்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். அதற்காக, குழந்தைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சரி மற்றும் தவறு பற்றிய முழுமையான அறிவுரைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களை வெற்றிகரமான நபராக மாற்ற சாணக்கியர் கூறும் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, பண்பட்ட குழந்தைகள் மட்டுமே வெற்றிகரமான நபர்களாக மாறுகிறார்கள். நீங்களும் உங்கள் குழந்தையை வெற்றிகரமான நபராக மாற்ற விரும்பினால், அவர்களை பண்பட்டவர்களாக ஆக்குங்கள். இதற்காக, குழந்தை பருவத்திலிருந்தே குழந்தைளுக்கு ஒழுக்கத்தின் மதிப்புகளை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
vg
குழந்தைகள் மனதளவில் உண்மையாக இருந்தாலும் குறும்புக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு சரி, தவறு பற்றி அதிகம் தெரியாது, அதனால் எந்நேரமும் குறும்பு செய்கிறார்கள். சில சமயங்களில் குறும்பு செய்ததற்காக தண்டனையும் பெறுவார்கள். இதுகுறித்து ஆச்சார்யா சாணக்கியர் கூறுகையில், குழந்தையை ஐந்து வயது வரை கடுமையாக தண்டிக்க கூடாது. தொடர்ச்சியான கடுமையான தண்டனையால், குழந்தைகள் குறும்புக்கு அடிமையாகிறார்கள். அதனை சரிசெய்ய முதல் ஐந்து வருடங்கள் சரி எது தவறு எது என்று அன்புடன் சொல்லுங்கள். அதற்குப் பிறகு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
குழந்தையின் கல்வியில் கஞ்சத்தனம் காட்டக்கூடாது என்கிறார் சாணக்கியர். உங்கள் குழந்தையின் திறமைக்கேற்ப குழந்தைக்கு கல்வி கொடுங்கள். நல்ல கல்வி ஒரு குழந்தையை நம்பிக்கையூட்டுகிறது. இது குழந்தையின் அறிவுசார் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதனால் குழந்தையின் ஆர்வமும் அதிகரிக்கிறது.
குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனமாகவும் பிடிவாதமாகவும் இருப்பார்கள். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் போது, கண்டிப்பாக சரி எது தவறு எது என்று சொல்லுங்கள். சரியாக சொல்லப்போனால், ஆலோசனை வழங்குவது குழந்தையின் மனதிலும் உங்கள் மீதான பாசத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications












