Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சாணக்கிய நீதி படி கணவன்-மனைவி இடையே அதிக வயது இடைவெளி இருப்பது என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா?
Chanakya Niti: திருமண வாழ்க்கையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் கணவன்-மனைவி உறவு தொடர்பான சில விஷயங்களை ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, கணவன்-மனைவி இடையே இருக்கும் அதிகளவு வயது வித்தியாசம் திருமண வாழ்க்கையில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
கணவனும் மனைவியும் இந்த விஷயங்களில் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருப்பார்களோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிறார் சாணக்கியர். ஆச்சார்யா சாணக்யா ஒரு பிரபலமான அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார், அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி பலர் வெற்றி பெற்றுள்ளனர். சாணக்கிய நீதி என்பது ஆச்சார்யா சாணக்கியரின் அனுபவங்களின் தொகுப்பாகும்.

இதில் வெற்றிகரமான வாழ்க்கை முறைக்கு அவர் குறிப்பிட்டுள்ள வாழ்க்கை முறைகள் குறித்த தகவல்களைப் பெறலாம். இதை கடைபிடிப்பதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
இந்த உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் கணவன்-மனைவி உறவு தொடர்பான சில விஷயங்களை ஆச்சார்யா சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்று கணவன் மனைவிக்கு இடையே உள்ள சரியான வயது வித்தியாசம். சாணக்கிய நீதியின் படி, கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் திருமண வாழ்க்கையில் எப்படி அவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடாது
ஆச்சார்யா சாணக்கியர் கூறுகையில், கணவன்-மனைவி இருவரும் உடல்ரீதியாகவும், மன ரதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இடையேயான உறவு மிகவும் முக்கியமானது. இருவருக்கும் அதிக வயது வித்தியாசம் இருப்பதால், திருமண வாழ்க்கையை சரிசெய்வதில் சிக்கல்கள் எழுகின்றன.
ஒரு முதியவர் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது. அத்தகைய திருமணம் பொருத்தமற்றது மற்றும் இந்த உறவு திருமண வாழ்க்கைக்கு நச்சுத்தன்மையுடையதாக மாறும். அத்தகைய திருமணங்கள் ஒருபோதும் வெற்றியடையாது, மேலும் இந்த சூழலில் ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வாழ்க்கை அழிக்கப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலை திருமண வாழ்க்கையை விஷமாக்குகிறது மற்றும் விரைவில் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறது. எனவே கணவன்-மனைவி இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடாது.
ஒருவரையொருவர் தாழ்த்தக்கூடாது
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெற, ஒருவரையொருவர் தாழ்த்திவிடக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். கணவனும் மனைவியும் இந்த புனிதமான உறவின் கண்ணியத்தை நிலைநிறுத்தி ஒருவரையொருவர் பாதுகாக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அவமதிக்கும் குடும்பத்தின் திருமண வாழ்க்கை ஒற்றுமையைக் குலைத்து, வீட்டில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார்.
தேவைகளை புறக்கணிக்கக்கூடாது
கணவன் மனைவி உறவே மிகவும் புனிதமான உறவு என்றும், இந்த உறவைப் பாதுகாக்க கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் தனது கொள்கையில் கூறியுள்ளார். மனைவியோ அல்லது கணவனோ தங்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் புறக்கணித்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்பும் நல்லிணக்கமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
