Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் சீக்கிரம் குறையும்... -
இன்றைய ராசிபலன் 04 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா?
சைத்ரா நவராத்திரியில் உருவாகும் ராஜயோகத்தால் இந்த 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
சைத்ரா நவராத்திரிக்கு இந்து மதத்தில் தனிச்சிறப்பு உண்டு. இந்த ஆண்டு சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த நாளில் பல நல்ல யோகங்கள் உருவாகின்றன. கிரகங்களின் அமைவிடத்தைப் பொருத்து இக்காலத்தில் 5 விதமான ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த ராஜயோகம் அமைவதால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

ஜோதிடத்தின் கூற்றுப்படி, சைத்ரா நவராத்திரியில் சந்திரன் மேஷ ராசியில் இருக்கும். இது வியாழனுடன் கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இதனுடன், சனி மூல திரிகோண ராசியான கும்பத்தில் வைக்கப்பட்டு, சஷ ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதுதவிர சுக்கிரன் கடக ராசியில் சென்று மாளவ்ய ராஜயோகத்தையும், சூரியன், புதன் மேஷத்திலும், புதாதித்ய ராஜயோகம் மீனத்திலும், சுக்கிரன் மற்றும் புதன் லக்ஷ்மி நாராயண யோகத்தையும் உருவாக்குகிறது.
இப்படிப்பட்ட மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகுவது ஒவ்வொரு ராசியின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். இந்த ராஜ யோகங்கள் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றப்போகிறது. சைத்ரா நவராத்திரி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இத்துடன் மற்ற ராஜ யோகங்களால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சைத்ரா நவராத்திரியின் போது, துர்கா தேவியின் சிறப்பு அருள் இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். லட்சுமி தேவியின் ஆசியுடன் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள், மேலும் செல்வ வளமும் பெருகும். உங்கள் குடும்பத்துடன் நல்ல நேரத்தை அனுபவிக்க முடியும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த காலகட்டத்தில் அவ்வாறு செய்வது பலனளிக்கும்.
நீங்கள் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால், இந்த காலகட்டத்தில் செய்யுங்கள். இதன் மூலம் பல மடங்கு சுப பலன்களைப் பெறுவீர்கள். துர்கா தேவியின் ஆசீர்வாதத்துடன், உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம். உழைக்கும் மக்கள் தங்கள் பணிக்காக பாராட்டப்படுவார்கள். நீங்கள் வேலையில் பதவி உயர்வு அல்லது அதிக பொறுப்பு பெறலாம்.
கும்பம்
கும்பத்தில் சஷ ராஜயோகத்துடன் மற்ற ராஜயோகங்களும் இந்த நேரத்தில் உருவாகின்றன. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் சனி பகவானும் இந்த ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவார். அதனால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற முடியும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால், இந்தக் காலத்தில் செய்யலாம். பல நன்மைகளைப் பெறுவீர்கள். குழந்தைகள் தரப்பில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இது வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு இந்த காலம் மிகவும் சாதகமானதாக இருக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் துர்கா தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். துர்கா தேவியின் அருளால் நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் மீண்டும் தொடங்கும்.
கடனில் இருந்து விடுபடும் காலம் நெருங்கி விட்டது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், இந்த காலம் அதற்கு ஏற்றதாக இருக்கும். துர்கா தேவியின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
