Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
பட்ஜெட்டுக்கு முன்னாடி ஏன் அல்வா கிண்டி கொண்டாடுறாங்க-ன்னு தெரியுமா?
Budget 2024: 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் யூனியன் பட்ஜெட்டிற்கு முன் ஒரு விழா வழக்கமாக நடத்தப்பட்டு வருவது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது தான் அல்வா விழா.
சரி, இந்த அல்வா விழா ஏன் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டிற்கு முன் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? பட்ஜெட்டிற்கும், அல்வாவிற்கும் என்ன சம்பந்தம் என்று உங்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளதா? அப்படியானால், இப்போது பட்ஜெட்டிற்கு முன் ஏன் அல்வா கிண்டி கொண்டாடுகிறார்கள் என்பது குறித்து காண்போம்.

அல்வா விழா என்றால் என்ன?
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மத்திய நிதி அமைச்சர், பட்ஜெட்டுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்களுக்கு இனிப்புக்களை வழங்கும் ஒரு விழாவை தொடங்கும் விதமாக, அல்வா விழா நடத்தப்படுகிறது. ஏனெனில் அல்வாவானது நமது நாட்டின் பாரம்பரிய இனிப்பு வகையாகும்.
அல்வா விழா ஏன் பட்ஜெட்டுக்கு முன் நடத்தப்படுகிறது?
அல்வா விழாவை நடத்துவதற்கு காரணம், இந்தியாவில் எந்த ஒரு முக்கியமான மற்றும் மங்களகரமான நிகழ்வு நடப்பதற்கு முன்பும் இனிப்பு சாப்பிடுவது வழக்கம். எனவே தான் அதை உணர்த்தும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அல்வா கிளறி அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. இது தவிர பட்ஜெட்டில் அயராது உழைத்தவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கும் வகையிலும் அல்வா விழா கருதப்படுகிறது. நிதி அமைச்சகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அல்வாவை கொடுத்த பிறகு, 'லாக்-இன்' மற்றும் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது .
அல்வா விழா எங்கு நடைபெறும்?
பொதுவாக அல்வா விழா டெல்லியின் உள்ள நிதி அமைச்சகத்தின் நார்த் பிளாக் அடித்தளத்தில் நிதி அமைச்சர் மற்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெறும்.
அல்வா விழாவிற்கு பின் என்ன நடக்கும்?
அல்வா விழாவிற்கு பின், நிதி அமைச்சக ஊழியர்கள் நார்த் பிளாக்கில் உள்ள அமைச்சகத்தின் தலைமையகத்தில் அமைந்துள்ள பட்ஜெட் அச்சகத்தில் நுழையும் 'லாக்-இன்' காலம் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் உரையை நிதியமைச்சர் முடித்த பிறகே அந்த ஊழையர்கள் வெளியே வர முடியும்.
கடந்த ஆண்டு அல்வா விழா எப்போது நடத்தப்பட்டது?
கடந்த ஆண்டு அல்வா விழாவானது 2023 ஜனவரி 26 ஆம் தேதி நடத்தப்பட்டது. அது இந்தியாவின் குடியரசு தினமாகும். இந்த ஆண்டு அல்வா விழா 2024 ஜனவரி 24 ஆம் தேதி நடந்தது.



Click it and Unblock the Notifications











