Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் செய்த மிகவும் மோசமான 8 குற்றங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சி என்பது மிகப்பெரிய இருண்ட காலமாக இருந்தது. வியாபாரிளாக உள்ளே நுழைந்த ஆங்கிலேயர்கள் நாளடைவில் இந்திய ஆட்சியாளர்களை தந்திரமாக ஏமாற்றி பல்வேறு சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றி இறுதியில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்சியையும் கைப்பற்றினர். டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் போர்த்துகீசியர்கள் என பல அந்நிய நாட்டினர் இந்தியாவிற்குள் ஊடுருவினாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே இறுதிவரை நிலைத்து நின்று அதிகாரம் செலுத்தினர்.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியா கலாச்சாரரீதியாகவும், நிர்வாகரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டது. ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக செய்த மாற்றங்கள் இந்தியர்களுக்கு உதவிகரமாக இருந்தாலும் அவர்களின் முக்கிய நோக்கம் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதாகத்தான் இருந்தது. கிட்டதட்ட 200 ஆண்டுகள் நீடித்த ஆங்கிலேயே ஆட்சியில் இந்தியா பல துயரங்களை அனுபவித்தது.

பிரிட்டிஷார் இந்திய மக்களின் உழைப்பையும், உயிர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சினர். அவர்களின் ஆட்சி காலத்தில் கிட்டதட்ட 35 மில்லியன் இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பல மனித விரோத செயல்களை செய்தனர். அதில் முக்கியமானவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய கலைப்பொருட்களின் திருட்டு
காலனித்துவ காலத்தில் திருடப்பட்டு தற்போது இங்கிலாந்தில் இருக்கும் இந்திய கலைப்பொருட்களின் பட்டியல் மிகவும் நீளமானது. ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய, கொள்ளையடித்த அல்லது "பரிசுகளாக" எடுத்துச் சென்ற கலைப்பொருட்களில் 105.6 காரட் எடையுள்ள கோஹினூர் வைரமும் அடங்கும். இது மட்டுமின்றி ஹரிஹரர் சிலை, சுல்தான்கஞ்ச் புத்தர், திப்பு சுல்தானின் தனிப்பட்ட உடைமைகள், ஷாஜகானின் மது கோப்பைகள் மற்றும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிம்மாசனம் ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட முக்கிய கலைப்பொருட்களாகும்.
இரண்டாம் உலகப் போரில் இந்திய இராணுவத்தைப் பயன்படுத்தியது
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி இந்திய இராணுவத்தை பெரிதும் நம்பியிருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனால் பயன்படுத்தப்பட்ட இந்திய இராணுவம், எத்தியோப்பியாவில் இத்தாலிய இராணுவத்திற்கு எதிராகவும், எகிப்து, லிபியா, துனிசியா மற்றும் அல்ஜீரியாவில் இத்தாலிய மற்றும் ஜெர்மன் படைகளுக்கு எதிராகவும், இத்தாலிய சரணடைந்த பிறகு, இத்தாலியில் ஜெர்மன் இராணுவத்திற்கு எதிராகவும் போராடியது. இந்த போர்களால் 87,000 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இறந்தனர், மேலும் 34,354 பேர் காயமடைந்தனர் மற்றும் 67,340 பேர் போர்க் கைதிகளாக மாறினர்.
இந்திய இராணுவத்தினர் மீது ரசாயன ஆயுதங்களை சோதனை செய்தது
இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் பின்னும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது பிரிட்டிஷ் இராணுவ விஞ்ஞானிகள் இந்திய படையினர் மீது ஒரு ரசாயன ஆயுதத்தை சோதித்தனர். அப்போது பிரிட்டனின் இந்திய காலனியின் ஒரு பகுதியாக இருந்த ராவல்பிண்டியில் நடத்தப்பட்ட சோதனைகளில் நூற்றுக்கணக்கான இந்திய மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் மஸ்டர்ட் வாயு சோதனைக்கு ஆளானார்கள். இந்த வாயு வீரர்களின் தோலை கடுமையாக எரித்தது, மேலும் சில நேரங்களில் பல வாரங்களுக்கு வலியை ஏற்படுத்தியது. இந்தியர்களின் தோலில் வாயுவின் விளைவை பிரிட்டிஷ் வீரர்கள் மீது செய்யப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளுடன் ஒப்பிட விஞ்ஞானிகள் விரும்பினர்.
கிழக்கிந்திய கம்பெனி வங்காளத்தை கொள்ளையடித்தது
உள்ளூரில் சேர்க்கப்பட்ட 20,000 பேர் கொண்ட இந்திய வீரர்களின் ஆதரவுடன், 1757 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வங்காளத்தின் திறமையான ஆட்சியாளர்களாக மாறியது மற்றும் வங்காளத்தை கொள்ளையடித்தது அதன் செல்வத்தை பிரிட்டனுக்குள் கொண்டு சென்றது. வங்காளத்தில் இருந்த கம்பெனி வரி வசூலிப்பவர்கள் 'தங்கள் புதையலை வெளிப்படுத்த இந்தியர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்; நகரங்கள் மற்றும் கிராமங்கள் சூறையாடப்பட்டன' என்று பதிவு செய்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவின் பெரும்பகுதி இந்த ஒழுங்குபடுத்தப்படாத தனியார் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டது.
பிரிட்டன் இந்தியாவின் $45 டிரில்லியன் பணத்தை திருடியது
1765 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டன் இந்தியாவிலிருந்து மொத்தம் $45 டிரில்லியன் மதிப்புள்ள செல்வத்தை திருடியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் நிறுவனமயமாக்கப்பட்ட மோசமான வரிவிதிப்பு நடவடிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை வறுமையில் ஆழ்த்தினர். ஆங்கிலேயர்கள் இந்திய மக்களிடமிருந்து அதிக வரிகளை ரொக்கமாக வசூலிக்க ஊக்குவித்தார்கள், அந்த வரிப் பணத்தை இந்தியர்களுக்கு அவர்களின் பொருட்களுக்கு பணம் செலுத்த பயன்படுத்தினர், பின்னர் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, லாபத்தை பிரிட்டிஷ் பொருளாதாரத்திலும், அவர்களின் இராணுவத்திலும் முதலீடு செய்தனர்.
12 முதல் 29 மில்லியன் இந்தியர்கள் பட்டினியால் இறந்தனர்
வணிகரீதியாக கட்டாய பயிர் சாகுபடி மூலம் ஆங்கிலேயர்கள் இந்திய பயிர் முறைகளை சீர்குலைத்தனர், இதன்மூலம் இந்தியர்களை பஞ்சத்திற்கு ஆளாக்கினர். இந்தியா பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தபோது 12 முதல் 29 மில்லியன் இந்தியர்கள் பட்டினியால் இறந்தனர். பஞ்சங்கள் உருவான போது, பிரிட்டிஷ் அதிகாரிகள் அரிதாகவே நிவாரண உதவிகளை வழங்கினர், பட்டினி என்பது அதிக மக்கள்தொகைக்கு 'இயற்கையான' மற்றும் 'தேவையான' சோதனை என்று அவர்கள் கூறினர். 1876-78 ஆம் ஆண்டு மெட்ராஸில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் போது, 5.5 மில்லியன் இந்தியர்கள் இறந்த பிறகுதான் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிவாரண முயற்சிகளைத் தொடங்கினர்.
இந்திய ரயில்வே
ரயில்வே நெட்வொர்க் இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்கள் செய்த மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாக கருதப்படுகிறது, ஆனால் அதுவும் இந்தியாவை கொள்ளையடிக்க அவர்கள் போட்ட ஒரு திட்டத்தின் பகுதிதான். ரயில்வே நெட்வொர்க்கை உருவாக்க இந்தியர்களின் வரிப்பணமே முழுமையாக செலவிடப்பட்டது, இந்தியர்கள் பிரிட்டிஷ் பணியாளர்களை விட அதிக டிக்கெட் விலைகளை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் மற்றும் நெரிசலான 'மூன்றாம் வகுப்பு' பெட்டிகளில் அடைக்கப்பட்டனர். பிரிட்டிஷ் பங்குதாரர்கள் தங்கள் சொந்த வரிகள் மூலம் அமைப்புக்கு ஒருபோதும் பணம் செலுத்தாமல், ரயில்வேயில் முதலீடு செய்வதன் மூலம் அதிக அளவு பணம் சம்பாதித்தனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
1919 ஏப்ரல் 13 அன்று, அமிர்தசரஸில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராட்டக்காரர்கள் அரசாங்க உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்தபோது, அவர்கள் சுவர்களால் சூழப்பட்ட ஜாலியன் வாலா தோட்டத்திற்குள் தடுத்து நிறுத்தப்பட்டு வீரர்களால் சுடப்பட்டனர். ஜெனரல் டையரின் உத்தரவின் பேரில், வீரர்கள் தங்கள் வெடிமருந்துகள் தீர்ந்து போகும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தினர், இந்த துப்பாக்கிச்சூட்டில் கிட்டதட்ட 1,000 போராட்டக்காரர்கள் வரை கொல்லப்பட்டனர் மற்றும் 1,100 பேர் காயமடைந்தனர். இந்த படுகொலைக்கு பிரிட்டன் ஒருபோதும் முறையாக மன்னிப்பு கேட்கவில்லை.



Click it and Unblock the Notifications












