Latest Updates
-
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் ரகசியம் பற்றி தெரியுமா?
விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்திரி' என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு "காயத்திரி மந்திரம்" என்ற பெயர் வந்தது. காயத்ரி மந்திரம் எல்லையற்ற சக்தி கொண்டது. வேத பண்டிதர்கள் முதல் சாதாரண பண்டிதர்கள் வரை அனைவரும் காயத்ரி மந்திரத்தை தவறாமல் ஜபிக்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது அன்றைய பிரச்சினைகளை திறம்பட எதிர்கொள்ள உதவுகிறது. காயத்ரி மந்திரத்தின் ஒலியில் ஒரு அதீத சக்தி மறைந்துள்ளது.
வேதங்களிலும் உள்ள அனைத்தும் காயத்ரி மந்திரத்தில் உள்ளதாக நம்பப்படுகிறது. இதுவே அனைத்து வேதங்களின் சாரம் என்றும் கூறப்படுகிறது. இந்த மந்திரத்தின் சக்திவாய்ந்த ஒலி நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவது மட்டுமல்லாமல் பயங்கரமான கனவுகளையும் அகற்றும் என்று கூறப்படுகிறது. ஆனால் பண்டிதர்கள் இந்த மந்திரத்தை மிகுந்த பக்தியுடனும், தியானத்துடனும், தூய்மையுடனும் மட்டுமே சொல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

காயத்ரி மந்திரம்
ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"
மன அமைதி
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால், உடலின் முக்கிய உறுப்புகள் நல்ல அதிர்வலையுடன் மன அமைதியாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கின்றனர் ஆயுர்வேத விஞ்ஞானிகள். மன உளைச்சலில் இருக்கும் போது காயத்ரி மந்திரம் கூறினால் மனம் அமைதியடையும். காயத்ரி மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் சூரிய உதயத்திற்கு முன் இதை பாராயணம் செய்வது இன்னும் சிறந்த பலனைத் தரும்.
பக்தியுடனும் சிரத்தையுடனும் ஒழுக்கத்துடனும்
காயத்ரி மந்திரத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். முதலில் ஒரு நாளைக்கு ஒரு முறை தொடங்குங்கள். பின்னர் அந்த எண்ணை 5, 10, 20 மற்றும் 108 முறை தினமும் சொல்ல முயற்சிக்கவும். பக்தியுடனும் சிரத்தையுடனும் ஒழுக்கத்துடனும் காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும். மன உளைச்சலில் இருந்தாலும், மனம் கலங்கினாலும், கோபமாக இருந்தாலும், ஜபிக்க மனமில்லாதபோது காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டாம். மன அமைதி வேண்டும் என்றால் பாராயணம் செய்யலாம். ஆனால் பக்தியும் கவனமும் இல்லாமல் காயத்ரி மந்திரத்தைச் சொல்லக் கூடாது.
108 முறை
108 என்பது தெய்வீக எண். இந்த எண்ணினால் எல்லாம் சுபம். எனவே காயத்ரி மந்திரம் 108ஐ உச்சரிப்பது சில நாட்களில் நல்ல பலனைத் தரும். காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்ல 20 முதல் 25 நிமிடங்கள் ஆகும். 24 மணிநேரத்தில் 25 நிமிடங்கள் உங்கள் நாளில் மிகக் குறைந்த நேரமே. இந்த 25 நிமிடங்களை விடாமுயற்சியுடன் அர்ப்பணிப்புடன் செலவிட்டால், மீதமுள்ள மணிநேரங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் கழியும். எனவே காயத்ரி மந்திரத்தை மேலே குறிப்பிட்டபடி மட்டுமே சொல்ல வேண்டும். காயத்ரி மந்திரத்தின் ஓசைக்கு எல்லையற்ற சக்தி உண்டு என்று பண்டிதர்கள் கூறுவதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











