Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பாலியல் சுகத்திற்காக ஆணுறுப்பில் பேட்டரியை சொருகிய 73 வயது முதியவர்.. கடைசி என்னாச்சுன்னு பாருங்க...
ஆஸ்திரேலியாவில் 73 வயதுடைய முதியவர் செய்த ஒரு காரியம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவெனில், அந்த முதியவரின் ஆணுறுப்பில் 3 பட்டாணி அளவிலான பேட்டரி சிக்கிக் கொண்டுள்ளது. இந்த பேட்டரியை மருத்துவர்கள் அகற்றினார்களா? எப்படி அந்த பேட்டரி ஆணுறுப்பினுள் சென்றது? இப்போது அந்த முதியவரின் நிலை என்ன என்பது குறித்து விரிவாக காண்போம்.
பொதுவாக உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாளும் பல விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதுவும் வெளிநாடுகளில் நடக்கும் பல சம்பவங்கள் இப்படியுமா நடக்கும் என்று தோன்ற வைக்கும். அப்படிப்பட்ட ஒரு வினோதமான சம்பவம் தான் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆணுறுப்பில் சிக்கிய பேட்டரி
ஆஸ்திரேலியாவில் 73 வயதான முதியவர் ஒருவர் தனது ஆணுறுப்பில் 3 பட்டாணி அளவிலான பேட்டரி சிக்கிக் கொண்டது என்று அவசரமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த பேட்டரி எப்படி உள்ளே சென்றது என்று தெரியுமா? இந்த முதியவர் தான் அந்த பேட்டரியை ஆணுறுப்பில் செலுத்தியுள்ளார். இவர் பாலியல் சுகத்திற்காக இப்படி ஒரு காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது. இதுப்போன்று ஏற்கனவே பலமுறை செய்திருக்கிறார். ஆனால் இந்த முறை செய்த போது, பேட்டரி சற்று உள்ளே சென்றுவிட்டது. இது மருத்துவர்களிடமும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கு முன் இப்படி செய்த போது, அந்த பேட்டரியை அவரால் எடுத்த முடிந்துள்ளது. ஆனால் இந்த முறை செய்ததில், பேட்டரியை எடுக்க முடியவிலவை. இதனால் அவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்துள்ளார்.
அடுத்து என்ன ஆனது?
மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில், பேட்டரியானது சிறுநீர் குழாய் நெப்ரோசிஸ் பகுதியில் சிக்கியுள்ளது. இப்படியொரு வழக்கு இதுவரை உலகில் பதிவானது இல்லை. இது தான் முதல் முறையாகும். அதுவும் இந்த முதியவர் பேட்டரியை ஆணுறுப்பில் சிக்கிய 24 மணிநேரத்திற்கு பின் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதுவும் அவருக்கு ஆணுறுப்பில் கடுமையான வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம் என பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த பேட்டரியில் உள்ள அமிலம் கசிந்து, அவருக்க நெக்ரோசிஸை ஏற்படுத்திவிட்டது. நெக்ரோசிஸ் என்பது திசுக்களை இறக்கச் செய்யும் நிலை. நிபுணர்களின் கூற்றுப்படி, நெக்ரோசிஸை சரிசெய்ய முடியாது மற்றும் இது உயிரைப் பறிக்கும் அளவில் ஆபத்தானது.
மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த பேட்டரியை மற்றும் சுற்றியிருந்த இறந்த பகுதியையும் அகற்றிவிட நினைத்தனர். ஆனால் அவ்வளவு எளிதில் பேட்டரியை அகற்ற முடியவில்லை. சற்று சிரமப்பட்டனர். பேட்டரியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது, பேட்டரியில் இருந்து கருப்பு நிற திரவம் கசிந்து, ஆணுப்பை மோசமா பாதித்துள்ளது உடனே மருத்துவர்கள் அந்த முதியவரின் ஆணுறுப்பின் பெரும் பகுதியை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த திரவ கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சிகிச்சையை முழுமையாக முடிக்க 6 மாதங்கள் வரை ஆகும். அதே சமயம் இந்த முதியவரின் ஆணுறுப்பு மோசமாக பாதித்திருப்பதால், அதை சீரமைக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது அந்த முதியவரால் எந்த ஒரு சுகத்தையும் அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளார்.



Click it and Unblock the Notifications