Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...!
12 முறை வெறித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட கால்பந்து வீரர்... அவர் செய்த ஒரே சிறிய தவறு என்ன தெரியுமா?
FIFA உலகக்கோப்பை உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த நிகழ்வு எவ்வளவு பிரபலமானதோ அதேயளவிற்கு அதனை சுற்றி பல சர்ச்சைகளும் உள்ளது, மேலும் பல உயிர்களையும் பலிவாங்கியுள்ளது. 1994 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கொலம்பியா வெளியேறியதால் ஆத்திரமடைந்த சிலர் ஆண்ட்ரெஸ் எஸ்கோபர் என்ற கால்பந்து வீரரை சுட்டு கொன்றனர்.
கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது. அமெரிக்காவுடனான தோல்வியில் தவறான கோல் அடித்ததால் அவர் மீது ஆத்திரமடைந்து இந்த கொடும் செயலை செய்தனர். 27 வயதான எஸ்கோபார், போட்டியில் தோற்ற பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வீடு திரும்பிய 48 மணி நேரத்திற்குப் பிறகு மெடலின் உணவகத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள் அதிகாலை 3 மணியளவில் எஸ்கோபரை எதிர்கொண்டனர். அதில் ஒருவர் கூறினார் "Thanks for the auto-goal" அதன்பின் இருவரும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள், ஒவ்வொரு ஷாட்டுக்குப் பிறகும் "கோல்" என்று கத்தியபடி எஸ்கோபரை 12 முறை சுட்டனர். அதன்பின் இருவரும் தனித்தனி வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலம்பிய அணியின் மீது பந்தயம் கட்டி மில்லியன் கணக்கான டாலர்களை பந்தயத்தில் இழந்ததாகக் கூறப்படுகிறது. உலகக்கோப்பையின் போது ஆயிரக்கணக்கான கோடிகள் பந்தயத்தில் புரளும், ஆனால் இது சட்டவிரோதமாக செயல்பட்டது. எஸ்கோபரின் தவறான கோலால் அவரது அணி தோல்வியடைந்ததால் அதிருப்தியடைந்த பந்தயம் கட்டியவர்கள் எஸ்கோபரின் கொலைக்கு உத்தரவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
"இது கொலம்பியாவை துக்கத்தில் ஆழ்த்தும் மற்றும் வலியால் நம்மை நிரப்பும் ஒரு இழப்பு" என்று கொலம்பிய ஜனாதிபதி சீசர் கவிரியா ஒரு தேசிய ஒளிபரப்பில் கூறினார். கொலையாளிகளைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு $60,000 பரிசு வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். கொலம்பிய கால்பந்து அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கூடுதல் மெய்க்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தப்பிச் சென்ற கார் ஒன்றின் ட்ரைவர் என சந்தேகிக்கப்பட்ட இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். எஸ்கோபரின் உடல் அதன்பின் பொகோட்டாவிலிருந்து வடகிழக்கில் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெடலின் விளையாட்டுக் கல்லூரியில் வைக்கப்பட்டது, இதில் மேலும் துக்கமான செய்தி எஸ்கோபருக்கு அந்த ஆண்டு இறுதியில் மாதம் திருமணம் நடக்க இருந்தது.
"கால்பந்து ஒரு விளையாட்டு மட்டுமே, மேலும் ஆண்ட்ரெஸ் உறுதியளித்ததற்காகவும், எதிர் அணிக்கு தவறுதலாக கோல் போட்டதற்கு கொல்லப்பட்டதில் எந்த நியாயமும் இல்லை" என்று பயிற்சியாளர் மதுரானா கூறினார்.
எஸ்கோபர் செய்த ஒரே தவறு என்னவென்றால், அவர் தற்செயலாக பந்தை தனது சொந்த அணியின் வலையில் தட்டி, எதிர் அணியான அமெரிக்காவுக்கு தொடக்க கோலை அடித்தார். ஆனால் எஸ்கோபார் தனது பிழையைச் சமாளிக்க முயன்றார், அதை அவர் தனது விளையாட்டு வாழ்க்கையில் மோசமான தருணம் என்று அழைத்தார். பொகோட்டா செய்தித்தாளில் வெளியிடப்பட்ட தனது நாட்டிற்கு ஒரு திறந்த கடிதத்தில், அவர் "கண்ணியத்தை பராமரிக்க" ரசிகர்களை கேட்டுக்கொள்கிறார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் "தயவுசெய்து அனைவருக்கும் (உலகக் கோப்பையில் விளையாடுவது) எனக்கு கிடைத்த மிக அரிதான, அற்புதமான வாய்ப்பு மற்றும் அனுபவம் என்று சொல்லுங்கள். எனவே விரைவில் சந்திப்போம், ஏனென்றால் வாழ்க்கை இங்கு முடிவடையவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த கோல் அவரின் வாழ்க்கையை முடிந்துவிட்டது.



Click it and Unblock the Notifications












