Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
முகேஷ் அம்பானி மகனின் திருமண விழாவிற்கு மொத்தம் எவ்வளவு செலவாகிருக்காம் தெரியுமா? தலையே சுத்துது...!
இப்போது இந்தியா முழுவதும் மக்கள் பேசும் ஒரே விஷயம் ஒரு திருமண விழாவை பற்றித்தான். இந்திய மட்டுமின்றி சர்வதேச ஊடகங்கள் முழுவதும் கடந்த 3 நாட்களாக இந்த திருமண விழாவை பற்றிய செய்திகளைத்தான் நொடிக்கு நொடி ஒளிபரப்பினார்கள்.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் சமீபத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய விழாவைக் கொண்டாடினர்.

இந்நிகழ்வு இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆடம்பர திருமண விழாவாகும். ஆனால் இந்த ஆடம்பரம் ஜூலை மாதம் நடைபெற போகும் திருமணத்திற்கான ட்ரெயிலர் மட்டுமே.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழா மார்ச் 1 முதல் 3 வரை 3 நாட்கள் நடைபெற்றன. இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா, ஆனந்த் பிரமல், மற்றும் கோகிலாபென் அம்பானி உள்ளிட்ட அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், இவான்கா டிரம்ப் மற்றும் உலகின் பல முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், அரசியல் பிரபலங்கள் என ஒரே இடத்தில் பார்க்க முடியாத உலகின் பல மிகப்பெரிய விஐபி-க்கள் இந்த ஆடம்பர திருமண விழாவில் கலந்து கொண்டனர். இவர்களின் வருகைக்காக 10 நாட்களுக்கு மட்டும் ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த விழாவிற்காகவே கட்டப்பட்ட ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கினர், மேலும் பாப் ஐகான் ரிஹானாவின் பாட்டைக் கேட்டு மகிழ்ந்தனர். இரண்டு மணி நேர கான்செர்ட்டுக்கு $6 மில்லியன் (சுமார் ரூ. 52 கோடி) அவருக்கு ஊதியமாக வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி இந்தியாவின் பல உச்ச நட்சத்திரங்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு நடனமாடியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதன் உச்சக்கட்டமாக பாலிவுட்டின் மூன்று கான்களான ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஆமீர் கான் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து நடனமாடினார்கள். இந்த கூட்டணியை எந்த திரைப்படத்திலும் கூட பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகளுடன் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்வளவு பிரம்மாண்டங்கள் நிறைந்த இந்த திருமணம் நிச்சயமாக சிறிய அளவிலான தொகையில் நடந்திருக்காது என்பது சின்ன குழந்தைக்கு கூட நன்றாக தெரியும். ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய 3 நாள் கொண்டாட்டங்களுக்கு 1260 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபோர்ப்ஸ் படி முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 117 பில்லியன் டாலர்கள் (ரூ. 97,66,89,81,30,000).
கேட்டரிங் ஒப்பந்தத்திற்கு மட்டும் 200 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழா இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான திருமண விழா என்பதில் துளியும் சந்தேககமில்லை. ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் திருமணத்தில் என்னென்ன ஆடம்பர நிகழ்வுகள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications












