உலகையே ஆட்டிப்படைத்த அலெக்சாண்டர் தவறுதலாக உயிருடன் புதைக்கப்பட்டாரா? ஆராய்ச்சி சொல்லும் அதிர்ச்சிகரமான செய்தி

உலக வரலாற்றில் பல ஆட்சியாளர்கள் தங்களின் வீரத்தாலும், வெற்றிகளாலும் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளனர். போர் என்றாலே உலகில் பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அலெக்சாண்டர்தான். ஏனெனில் அந்த அளவிற்கு அலெக்சாண்டரின் போர் வெற்றிகளின் புகழ் பல நூற்றாண்டு கடந்தும் இன்றும் நிலைபெற்றிருக்கிறது.

வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற வெற்றியாளர்களில் ஒருவரான அலெக்சாண்டர் தி கிரேட் அவர்களின் கதை அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களை இன்றும் வசீகரித்து வருகிறது. அலெக்சாண்டர் தனது 25வது வயதிற்குள் பண்டைய உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். அவரது வாழ்க்கை மற்றும் மரணத்தைச் சுற்றி பல மர்மங்கள் இன்றும் விடை தெரியாததாக உள்ளது, அலெக்சாண்டரை சுற்றி நிலவும் பல்வேறு கோட்பாடுகளில் ஒன்று அவர் உயிருடன் புதைக்கப்பட்டதாகக் கூறுகிறது.

Alexander the Great was buried alive What Science Says

அவர் கிமு 323 இல் இறந்தார் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளின் படி, அலெக்சாண்டர் ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டார். அலெக்சாண்டர் தி கிரேட் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சில வரலாற்றாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ளார்கள். இந்த கோட்பாட்டின் படி எம்பாமிங் செயல்பாட்டின் போது, கோமா போன்ற நிலை மரணம் என்று தவறாக கருதப்பட்டு, அவர் முன்கூட்டிய அடக்கம் செய்யப்பட வழிவகுத்திருக்கலாம் என்று கூறுகிறது.

பண்டைய காலங்களில், வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையிலான கோடு பெரும்பாலும் மங்கலாக இருந்தது, மேலும் மருத்துவ அறிவு மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருந்தது. எம்பாமிங் மற்றும் அடக்கம் செய்யும் சடங்குகள் போன்ற நடைமுறைகள் பரவலாக வேறுபடுகின்றன, இது மரணத்தைப் பற்றிய தவறான புரிதல்களுக்கும் தவறான எண்ணங்களுக்கும் இடமளிக்கிறது.

வரலாற்று குறிப்புகளின் படி, அலெக்சாண்டர் ஜூன் 13 அன்று ஒரு விருந்தின் போது மயங்கி விழுந்து சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு இறந்தார். ஒரே மூச்சில் ஒரு பௌல் ஒயின் குடிக்கும்படி அலெக்சாண்டருக்கு சவால் விடப்பட்ட பிறகு இது நடந்ததாக கூறப்படுகிறது. விருந்தின் போது அவர் முதுகுவலியால் சுருண்டு விழுந்தார்.

10 நாட்களுக்குப் பிறகு, அலெக்சாண்டரின் வீரர்கள் தங்கள் மன்னரை ஒரு இறுதி முறை பார்க்க அழைத்து வரப்பட்டனர். வரலாற்றாசிரியர் அலெக்சாண்டரின் சுயசரிதையை மேற்கோள் காட்டி, அந்த நேரத்தில் அரசர் "இனி பேச முடியாது, ஆனால் அவர் தலையை உயர்த்த சிரமப்பட்டார் மற்றும் ஒவ்வொருவருக்கும் தனது கண்களால் வாழ்த்து தெரிவித்தார்" என்று குறிப்பிட்டுள்ளது.

அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அலெக்சாண்டரின் உடல் சிதைவுக்கான வழக்கமான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கவில்லை, இது அவர் ஒரு கடவுள் என்று கூறுவதற்கு வழிவகுத்தது.

உலகத்தையே தனது இளம் வயதிலேயே ஆட்டிப்படைத்த வெறும் 32 வயதான அந்த மாவீரர் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களில் முடங்கிப்போயிருந்தார், இது ஒரு தன்னுடல் தாக்க நோயால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது அலெக்சாண்டரைப் புதைத்தபோதும் அவர் சுவாசித்துக் கொண்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு தீவிரமாக இருந்திருக்கலாம்.

அலெக்சாண்டர் உயிருடன் புதைக்கப்பட்ட கோட்பாடு உற்சாகமாக இருந்தாலும், அலெக்சாண்டரின் மரணம் மற்றும் அடக்கம் ஆகியவற்றிற்கான மாற்று விளக்கங்களும் உள்ளன. சில வரலாற்றாசிரியர்கள் அவர் இயற்கையான காரணங்களால் இறந்ததாக நம்புகிறார்கள், ஒருவேளை மலேரியா அல்லது டைபாய்டு காய்ச்சலால் இருக்கலாம், சிலர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். அவரது மறைவுக்கான விவாதங்கள் முடிவற்றவை, இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்தும் இது தொடரும்.

Story first published: Tuesday, May 14, 2024, 19:00 [IST]
Desktop Bottom Promotion