Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
விமான விபத்து குறித்து துல்லியமாக கணித்த ஜோதிடர்.. வேறு என்னவெல்லாம் கணித்துள்ளார் பாருங்க..
Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான நிலையில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 ட்டீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகரில் உள்ள மருத்துவ கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துள்ளானது. இந்த விமானத்தில் சுமார் 242 பேர் பயணம் மேற்கொண்டனர். இதில் பயணித்த யாருமே உயிர் பிழைக்கவில்லை என்ற தகவல் வெளிவந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அதுவும் இந்த பயணி இந்த விமானத்தில் 11A என்ற இருக்கையில் இருந்துள்ளார். இவரது பெயர் விஷ்வாஷ் குமார் ரமேஷ் ஆகும். இவர் இந்திய வசம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் நபர் ஆவார். இன்னும் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் ஜோதிடர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விமான விபத்து நடக்கும் என்று பதிவிட்டிருந்தார். தற்போது அவரது அந்த பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜோதிடரின் பெயர் ஷர்மிஸ்தா.
இவர் கடந்த ஜூன் 05 ஆம் தேதி 2025-ல் விமான விபத்து நிச்சயம் ஏற்படும் என்று கணித்து கூறியிருந்தார். அதற்கேற்ப ஜூன் 12 ஆம் தேதி, அதாவது இன்று அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்த விமான விபத்து கடந்த 25 ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகளில் மிகவும் மோசமான விமான விபத்தாக கருதப்படுகிறது. ஜோதிடர் ஷர்மிஸ்தாவின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஜோதிடர் ஷர்மிஸ்தா இந்த விமான விபத்து பற்றி மட்டுமின்றி, பங்குச் சந்தை, நாட்டில் நடக்கக்கூடிய சில முக்கியமான மாற்றங்கள், பொருளாதார ரீதியான வீழ்ச்சி வளர்ச்சி, தங்கம் வெள்ளி நிலவரம் குறித்த பல விஷயங்களைப் பற்றியும் தனது எக்ஸ் தளத்தில் கணிப்புக்களை பதிவிட்டு வருகிறார். இவரது கணிப்புப்படி, 2025-ல் விமானத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும், அதே வேளையில் பெரிய விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கணித்திருந்தார். அதுவும் இவையெல்லாம் குரு பகவான் மிதுன ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்லும் போது நடக்கும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் இவர் டாடா குழுமம் ஹைதராபாத்தில் ரஃபேல் ஜெட் விமானத்தின் கட்டமைப்பை உருவாக்கும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளால் வின்வெளி சுற்றுலா மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ உலகையே ஆச்சரியப்படுத்தும் என்றும் கணித்து குறிப்பிட்டிருந்தார். முக்கியமாக விமான விபத்து பற்றிய தனது கணிப்பில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வளவு துல்லியமாக யாராவது கணிக்க முடியுமா என்று பலரும் இவரது கணிப்பை கண்டு வியந்துள்ளனர். மேலும் இவர் வேறு என்ன விஷயங்களை எல்லாம் கணித்துள்ளார் என்று இவரது பக்கத்தை பலரும் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












