Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
Aadi Amavasai 2024: ஆடி அமாவாசையில் கண்டிப்பாக இதை செய்யாதீர்கள்..!
ஒவ்வொரு மாசமும் அமாவாசை திதி வருகிறது என்றாலும் மூன்று அமாவாசை திதிகள் மிக முக்கியமானவை. ஆன்மிக, ஜோதிட ரீதியாக மட்டுமல்லாமல் விஞ்ஞான ரீதியாகவும் இந்த அமாவாசை திதிகள் மிக முக்கியமானவை. ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வருகிற அமாவாசை திதிகள் முக்கியமானவை.
இந்த தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகவும் ஏற்ற விஷேச தினமாகும்.
ஆடி மாதம் தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கம் என்று கூறுவர்கள். நவகிரகங்களின் நாயகரான சூரிய பகவான், மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குச் செல்வதும் இந்த ஆடி மாதத்தில்தான்..

அதாவது பித்ரு காரகனான சூரிய பகவான், மாத்ரு காரகனான சந்திரனின் வீட்டில் அமர்கிற காலம். ஆக, இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாகும். மேலும் இந்த ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்பி வருவதாக ஐதீகம். அவர்கள் மகாளாய அமாவாசையில் பூலோகம் வந்தடைவர். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி அருள் புரிவர். அதனால் அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும்? என்னெவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
அமாவாசை என்றால் என்ன?
சூரியனும், சந்திரனும் இணையக்கூடிய நாள் தான் அமாவாசை. அன்றைய தினம் இருவரும் ஒரே ராசியில் சஞ்சரிப்பார்கள். அந்த நாளில் இரு கிரகங்களின் ஆதர்சன சக்தி மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மனித மூளையில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நம் மனம் சில சஞ்சலத்துடனேயே இருக்கும்..
ஆடி அமாவாசை 2024 எப்போது?
இந்த வருடம் ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 4ஆம் தேதி, 2024 அன்று வருகிறது.. இந்து நாட்காட்டியில் குறிப்பிடத்தக்க அமாவாசை தினமான ஆடி அமாவாசை அனுசரிக்கப்படும். இந்த புனித நாளின் தொடக்கத்தை குறிக்கும் அமாவாசை திதி, ஆகஸ்ட் 3, 2024 அன்று மாலை 3:50 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 4ஆம் தேதி, 2024 மாலை 04:42 மணிக்கு முடிவடைகிறது.
படையல் போடும் நேரம் எது?
ஆகஸ்ட் 04ம் தேதி பகல் 12 மணி முதல் 01.30 வரை எமகண்டம் நேரமாகும். அதனால் முன்னோர்களுக்கு இலை போட்டு, படையல் போடும் வழக்கம் உள்ளவர்கள் பகல் 01.30 மணிக்கு பிறகு படையல் போட்டு வழிபடுவது சிறப்பானதாகும். காகத்திற்கு சாதம் வைப்பதும் பகல் 01.30 மணிக்கு பிறகு வைப்பது சிறப்பானதாகும்.
ஆடி அமாவாசை 2024-ல் என்னென்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது..
1. அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய மிக சிறப்பான விஷயம் முன்னோர்களையும், பெரியோர்களையும் வழிபட வேண்டியது.
2. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.
3. நம் முன்னோர்களுக்கு படையல் வைப்பதோடு, காக்கைக்கும் உணவு வைத்துவிட்டுத்தான் குடும்பத்தில் உள்ளோர் சாப்பிட வேண்டும். காரணம் காகம் முன்னோர்களின் அம்சமாக க்ருதப்படுகிறது..
4. சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்திருப்பதாக ஐதீகம்.
5. முடிந்த அளவு ஏழை, எளியோருக்கு தான, தர்மங்கள் செய்ய வேண்டும். அத்துடன் அன்று கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும்.
6. மேலும் அன்றைய தினத்தில் நம் குலதெய்வத்தை வழிபடுவதும், அம்மன் வழிபாடு நடத்துவதும் மிகவும் சிறப்பானதாகும்.
7. வீட்டு வாசல், பூஜை அறையில் கோலம் போடக்கூடாது. தண்ணீர் தெளித்து விட்டால் போதுமானது. அசைவ உணவுகளை சமைக்க கூடாது.
8 முன்னோர்கள் வீட்டுக்கு வரும் தினம்.. அவர்களை வரவேற்கும் வகையில் வீடு வாசல் சுத்தம் செய்ய வேண்டும். தலைமுடி, நகம் வெட்டக் கூடாது.
9. அன்றைய தினம் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். கோபம், பதற்றம் வேண்டாம். முடிந்தால் பேசாமல் மெளன விரதம் இருப்பது நல்லது. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது..
10. நீரிலிருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதே போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும்தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications