Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசியில் இருப்பதால் ஜூன் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வீட்டைச் சுற்றி புழுதிப் புயலா? இந்த வாஸ்து செடிகளை மட்டும் வைங்க… காற்று சுத்தமாகும், பணமும் தானாக வரும்! -
12 ஆண்டுகள் கழித்து நிகழும் குரு-சுக்கிர சேர்க்கை: இன்று முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
ஹைதராபாத் ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, அட்டகாசமாக இருக்கும் -
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! கோடைக்காலத்திற்கு ஏற்ற வாஸ்து ரகசியங்கள் இதோ! -
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம் -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
பொது இடங்களில் பெண்கள் செய்யும் விநோதமான விஷயங்கள்!!!
பெண்கள் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், அவர்களிடம் ஒருசில அசாதாரண நடத்தைகள் உள்ளன. அத்தகைய நடத்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் அதனை பொது இடம் என்றும் சிறிதும் எண்ணாமல், பொது இடங்களில் செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்கின்றனர். உதாரணமாக, பொது இடங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது. இது குழந்தையின் பசியைப் போக்க செய்யும் ஒரு நல்ல விஷயம் தான். இருப்பினும் இதனை பொது இடங்களில் முடிந்த அளவில் செய்யாமல் இருப்பது சற்று நன்றாக இருக்கும்.
இதுப் போன்ற நிறைய செயல்களை பெண்கள் பொது இடங்களில் சிறிதும் நினைக்காமல் செய்வதால், அவை பொது மக்களின் மனதில் பதிந்து விடுவதோடு, பெண்களைப் பற்றிய கற்பனையான எண்ணமும் மனதில் ஏற்படுகிறது. எனவே அத்தகைய செயல்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது. இப்போது பொது இடங்களில் பெண்கள் செய்யும் விநோதமான செயல்கள் என்னவென்று பார்ப்போமா!!!

* சில பெண்கள் உடுத்தும் உடைகளை வீட்டிலேயே சரியாக அணிந்து கொண்டு வராமல் இருப்பார்கள். இதனால் உள்ளாடையானது வெளியே அடிக்கடி தெரியும். அவ்வாறு தெரியுமாறு உடை உடுத்தியிருப்பதோடு, அதனை அடிக்கடி சரிசெய்வதால், அத்தகைய செயல் நிச்சயம் ஆண்களின் பார்வையை தூண்டி விளையாடும். மேலும் அவ்வாறு சரிசெய்யும் போது ஆண்கள் பார்த்துவிட்டால், உடனே கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இதில் தவறு ஆண்கள் மேல் உள்ளதா? பெண்கள் மேல் உள்ளதா? நிச்சயம் பெண்கள் மீது தான். பெண்கள் ஒழுங்காக இருந்தால், நிச்சயம் ஆண்களும் ஒழுங்காக இருப்பார்கள்.
* சில பெண்கள் சரும பராமரிப்பு என்று அடிக்கடி மேக்-கப் செய்வார்கள். அதற்காக ஒரு சிறிய மேக்-கப் ரூமையே கைகளில், ஹேண்ட் பேக் என்ற பெயரில் வைத்து சுற்றுவார்கள். மேலும் கொஞ்சம் வியர்த்துவிட்டாலும், பொது இடம் என்றும் பார்க்காமல், பொது இடத்திலேயே சிலர் மேக்-கப் செய்வார்கள். இதை மற்றவர்கள் பார்த்தால் எப்படியிருக்கும் என்று சற்று எண்ணிப் பாருங்கள்.
* சில பெண்கள் சிறிய ஆடைகளை அணிவார்கள். அவ்வாறு உடுத்தியிருக்கும் ஆடை சிறியதாக, குட்டையாக இருக்கிறது என்று தெரிந்தும், சிலர் பொது இடங்களில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்கின்றனர்.
* பொது இடங்களில் அளவுக்கு அதிகமான சத்தத்துடன் பேசுவது. பெண்கள் அமைதி, பொறுமை என்று தான் தோன்றும். ஆனால், சில பெண்கள் ரோட்டில், பேருந்துகளில் சற்று உணர்ச்சவசப் பட்டால், யார் இருக்கிறார்கள் என்று சிறிதும் பராமல், பேசுகின்றனர்.
* வெளியே வரும்போது, அதிகமான காற்றினால் கூந்தல் சிறிது கலைந்தாலும், பொது இடம் என்று சிறிதும் பார்க்காமல், தலை சீவுவது.
இவையே பெண்கள் பொது இடம் என்றும் நினைக்காமல் செய்யும் விநோதமான விஷயங்கள். என்ன நண்பர்களே! இந்த விஷயங்களை எல்லாம் பெண்கள் பொது இடங்களில் செய்து பார்த்திருக்கிறீர்களா?



Click it and Unblock the Notifications