Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
நிலையில்லாத வாழ்க்கை
ஒரு மிகப் பெரிய ஜென் துறவி அரண்மனையின் வாசலில் வந்து காத்திருந்தார். அவரை வாயில் காப்பாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அரசரை அவசியம் பார்க்க வேண்டும் என்று அந்த துறவி கூறினார்.
துறவிக்கு மதிப்பளித்த அரசர் " தங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு அந்த துறவி " வழிப்போக்கர்கள் தங்கும் இந்த இடத்தில் நான் உறங்குவதற்கு எனக்கு சிறிது இடம் வேண்டும்" என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட அரசரோ, " இது வழிப்போக்கர்கள் தங்கும் இடமல்ல என்னுடைய அரண்மனை" என்றார்.
உடனே துறவியானவர் அரசரைப் பார்த்து, "உங்களுக்கு முன் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்.
"என் தந்தை இருந்தார் அவர் இறந்துவிட்டார்" என்றார் அரசர்
"அவருக்கு முன் யார் இருந்தார்" என்று கேட்டார் துறவி.
"எனது பாட்டனார் இருந்தார்" அவரும் கூட இறந்துவிட்டார். இதைக்கேட்ட துறவியோ, இங்கே யாருமே நீண்ட நாட்களுக்கு நிரந்தரமாக தங்கியதில்லையே? பின்னர் இதை வழிப்போக்கர்கள் தங்குமிடம் என்று நான் கூறியதில் என்ன தவறு?" என்று கேட்டார்.
கருத்து: இந்த உலகமே வழிப்போக்கர்கள் தங்கிச் செல்லும் ஒரு மடம்தான்



Click it and Unblock the Notifications