Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
நிலையில்லாத வாழ்க்கை
ஒரு மிகப் பெரிய ஜென் துறவி அரண்மனையின் வாசலில் வந்து காத்திருந்தார். அவரை வாயில் காப்பாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அரசரை அவசியம் பார்க்க வேண்டும் என்று அந்த துறவி கூறினார்.
துறவிக்கு மதிப்பளித்த அரசர் " தங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு அந்த துறவி " வழிப்போக்கர்கள் தங்கும் இந்த இடத்தில் நான் உறங்குவதற்கு எனக்கு சிறிது இடம் வேண்டும்" என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட அரசரோ, " இது வழிப்போக்கர்கள் தங்கும் இடமல்ல என்னுடைய அரண்மனை" என்றார்.
உடனே துறவியானவர் அரசரைப் பார்த்து, "உங்களுக்கு முன் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்.
"என் தந்தை இருந்தார் அவர் இறந்துவிட்டார்" என்றார் அரசர்
"அவருக்கு முன் யார் இருந்தார்" என்று கேட்டார் துறவி.
"எனது பாட்டனார் இருந்தார்" அவரும் கூட இறந்துவிட்டார். இதைக்கேட்ட துறவியோ, இங்கே யாருமே நீண்ட நாட்களுக்கு நிரந்தரமாக தங்கியதில்லையே? பின்னர் இதை வழிப்போக்கர்கள் தங்குமிடம் என்று நான் கூறியதில் என்ன தவறு?" என்று கேட்டார்.
கருத்து: இந்த உலகமே வழிப்போக்கர்கள் தங்கிச் செல்லும் ஒரு மடம்தான்



Click it and Unblock the Notifications