நிலையில்லாத வாழ்க்கை

By Mayura Akilan

ஒரு மிகப் பெரிய ஜென் துறவி அரண்மனையின் வாசலில் வந்து காத்திருந்தார். அவரை வாயில் காப்பாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அரசரை அவசியம் பார்க்க வேண்டும் என்று அந்த துறவி கூறினார்.

துறவிக்கு மதிப்பளித்த அரசர் " தங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

அதற்கு அந்த துறவி " வழிப்போக்கர்கள் தங்கும் இந்த இடத்தில் நான் உறங்குவதற்கு எனக்கு சிறிது இடம் வேண்டும்" என்று பதிலளித்தார்.

இதைக் கேட்ட அரசரோ, " இது வழிப்போக்கர்கள் தங்கும் இடமல்ல என்னுடைய அரண்மனை" என்றார்.

உடனே துறவியானவர் அரசரைப் பார்த்து, "உங்களுக்கு முன் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்.

"என் தந்தை இருந்தார் அவர் இறந்துவிட்டார்" என்றார் அரசர்

"அவருக்கு முன் யார் இருந்தார்" என்று கேட்டார் துறவி.

"எனது பாட்டனார் இருந்தார்" அவரும் கூட இறந்துவிட்டார். இதைக்கேட்ட துறவியோ, இங்கே யாருமே நீண்ட நாட்களுக்கு நிரந்தரமாக தங்கியதில்லையே? பின்னர் இதை வழிப்போக்கர்கள் தங்குமிடம் என்று நான் கூறியதில் என்ன தவறு?" என்று கேட்டார்.

கருத்து: இந்த உலகமே வழிப்போக்கர்கள் தங்கிச் செல்லும் ஒரு மடம்தான்

Story first published: Thursday, June 7, 2012, 8:47 [IST]
Desktop Bottom Promotion