Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
திரும்ப கிடைக்கும் பரிசு
ஒரு கிராமத்தில் ஒரு வயதான போர் வீரர் இருந்தார். வயதானாலும் அவரது போர்க்கலை எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் அளவிற்கு இருந்தது. அதனால் பெரும் புகழ் பெற்றிருந்த அவருக்கு கீழ் பல இளைஞர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
ஒரு இளைய வீரன் அந்த கிராமத்திற்கு வந்தான். அவ்வளவாகப் புகழ் பெற்றிருக்காத அவன் வயதான போர் வீரரை தோற்கடித்து முதல்வன் பட்டத்தை அடைந்து விடத் துடித்தான். அவனுடைய பலத்துடன், எதிராளியின் பலவீனத்தைக் கண்டு பிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் திறமையும் இருந்தது.
அவன் எதிராளியின் முதல் தாக்குதலுக்காக காத்திருப்பான். எதிராளியின் பலவீனமறிந்து தன் கருணையற்ற தாக்குதலைத் தீவிரப்படுத்தி முதலடியிலேயே வீழ்த்திவிடுவான். இதுவரை எல்லோரையும் முதல் தாக்குதலிலேயே வீழ்த்திவிட்டான்.
இவனுடன் போட்டியிடுவதை வயதான வீரர் விரும்பாவிட்டாலும், தன் மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இளம் வீரனின் சவாலை ஏற்று மோத தயாரானார். போட்டிக் களத்திற்கு வந்ததும் இளம் வீரன் அவரை கேவலமான வார்த்தைகளால் திட்டினான். அவரது முகத்தில் காறி உமிழ்ந்து மண்ணை வாரி இறைத்தான். அவரை அவமானப்படுத்தி,கோபப்படுத்தி தன் தாக்குதலைத் துவங்கலாமென்பது அவன் நோக்கம். ஆனால் வயதான வீரரோ அசைவற்று அமைதியாக நின்றிருந்தார். கடைசியில் தோல்வியை ஒப்புக் கொண்ட இளைஞன் அவமானத்துடன் வெளியேறினான்.
இளைஞர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்து, " அவன் அவ்வளவு அவமானப்படுத்தினாலும் அதனைத் தாங்கிக் கொண்டு மௌனமாக இருந்தீர்களே, தங்கள் வெற்றிக்குக் காரணம் என்ன?" என்று கேட்டனர்.
குரு சொன்னார்: "யாரேனும் உங்களுக்கு பரிசு கொடுக்க விரும்புகிறார்கள். அதனை நீங்கள் பெற விரும்பாவிட்டால் அது யாருக்குச் சொந்தம்?"
கருத்து: அவமானங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவை நம்மை சேராது.



Click it and Unblock the Notifications











