Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
திருடனின் முதல் பாடம்
திருடனின் மகனுக்கு திருட்டுத் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தனது தந்தையிடம் சென்று தனக்கு தொழில் கற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டான்.
அதற்கு ஒத்துக் கொண்ட திருடன் தனது மகனை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய பங்களாவிற்குள் சென்றான். அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். உடனே திருடன் தனது மகனிடம் வீட்டிற்குள் போய் சில துணிகளையாவது திருடிக்கொண்டு வா என்று அனுப்பினான்.
மகன் உள்ளே சென்ற உடன் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வீட்டின் முன் பக்கத்திற்கு வந்து கதவை தட்டினான் பெரிய திருடன். பின்னர் யாரும் பார்க்கும் முன்பாக அங்கிருந்து நழுவினான். தகப்பனின் இந்த செயலைக் கண்டு பயந்து நடுங்கிப் போனான் மகன். ஒருவாறு சமாளித்து வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டிற்கு வந்ததும் முதல் காரியமாக, "ஏன் அப்பா இவ்வாறு செய்தீர்கள் ?'' என்று கோபமாக கேட்டான் மகன். "யார் கையிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பி வருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது என்று கூறினான்"
அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த தந்தையோ, " மகனே திருட்டுத் தொழிலின் முதல் பாடத்தை இன்று நீ கற்றுக்கொண்டாய் என்று கூறினான்.



Click it and Unblock the Notifications