ஒரு துளி நீர்!!!

By Maha

Water Enlightenment
ஓர் மடாலயத்தில் கிசன் என்னும் ஒரு ஜென் மாஸ்டர் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் சீடன் ஒருவனிடம், தான் குளிப்பதற்காக ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வர சொன்னார்.

அந்த சீடனும் மாஸ்டர் சொன்னது போல், வாளியில் தேவையான நீரை மட்டும் நிரப்பி விட்டு மீதமுள்ள சிறிது தண்ணீரை தரையில் ஊற்றினான்.

அதை கண்ட மாஸ்டர் கிசன் உடனடியாக அந்த சீடனை "அட, அறிவுகெட்டவனே! ஏன் நீ அந்த மீதமுள்ள தண்ணீரை செடிகளுக்கு ஊற்றாமல், கீழே ஊற்றினாய்? இந்த மடாலயத்தில் அனைத்துமே சரியாக நடக்க வேண்டும். அதிலும் ஒரு துளி தண்ணீரை கூட இங்கு வீணாக்கக்கூடாது" என்று கூறினார்.

இதைக் கேட்ட அந்த இளம் மாணவனான சீடன், தன் மாஸ்டரின் ஜென் உபசாரத்தை கைப்பற்றினான். அதன் விளைவாக அவன் தன் பெயரை 'டேகிசுய்' என்று மாற்றிகொண்டான். 'டேகிசுய்' என்றால் 'ஒரு துளி நீர்' என்று பொருள்.

Desktop Bottom Promotion