Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இயல்பாய் இரு எல்லாம் தானாய் நடக்கும்
ஞானி ஜுன்னாயிது தனது சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் எந்த கிராமமும் தென்படவில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெட்ட வெளிதான்.
தலைக்கு மேலே வெயில் சுட்டெரித்தது. எங்காவது சென்று இளைப்பாரலாம் என்றால் மரம் செடி, கொடிகள் எதையுமே அந்த வெளியில் காணமுடியவில்லை. தாகம் அவர்களுடைய தொண்டையை வறட்டியது. பசியோ அவர்களை தள்ளாட வைத்தது. மயக்கம் போட்டு விழாத குறையாக அவர்கள் மெதுவாக நடந்து கொண்டிருந்தனர்.
குடிக்க தண்ணீரும் கிடைக்காமல் உண்ண உணவும் கிடைக்காமல் வீடுகளற்ற குட்டி பாலைவனம் போன்ற பகுதியில் நாள் முழுவதும் அவர்கள் பயணம் செய்தனர்.
மெல்ல இருட்டத் தொடங்கியிருந்தது. வழியில் ஒரு விசாலமான மரம் தென்பட்டது. சீடர்களின் மனநிலை அறிந்த குரு அவர்களை இளைப்பாறச் சொன்னார். உடனே சீடர்கள் அடித்துப் போட்டதுபோல் சுருண்டு படுத்தனர்.
எப்போதும் உறங்குவதற்கு முன்பாக பிரார்தனை செய்வது குரு ஜுன்னாசியின் வழக்கம். அன்றைய நல்ல செயல்களுக்கு நன்மையும், கெட்ட செய்திகளுக்கு மன்னிப்பும் வேண்டுவது அந்த பிரார்த்தனையின் போது நடைபெறும்.
அன்றும் வழக்கம் போல மண்டியிட்டு பிரார்த்தனை செய்த குரு, " இறைவா, இன்று தாங்கள் அளித்த அனைத்திற்கும் மனப்பூர்வமான நன்றி என்றார்.
இதனைக் கேட்டதும் அருகில் படுத்திருந்த ஒரு சீடன், குருவே இறைவன் இன்று நமக்கு ஒன்றும் தரவில்லையே? என்றான் கவலையுடன்.
யாரப்பா சொன்னது? என்றார் குரு புன்னகையுடன்?. இறைவன் இன்று நமக்கு அருமையான பசியை அளித்தார். தாகத்தை உணரவைத்தார் அதற்காகத்தான் நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன் என்று கூறினார்.
நீதி : வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு இயல்பாய் இரு.



Click it and Unblock the Notifications











